எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
போர்ட் லூயிஸ் : பிரதமர் மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் முன்னிலையில், மொரீசியஸ் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் 8 ஒப்பந்தங்கள் இன்று உறுதி செய்யப்பட்டன.;
மொரீசியஸ் நாட்டின் 57-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடைய 2 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, தீவு நாடான மொரீசியசுக்கு நேற்று முன்தினம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பின்னர், பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் புகழ்ந்து பேசினார். அவர் பேசும்போது, மொரீசியஸை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக இந்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார். இரு நாடுகளுக்கு இடையேயான ஆழ்ந்து வேரூன்றிய கலாசார உறவுகளின் வரலாற்று முக்கியத்துவம் பற்றியும் மீண்டும் வலியுறுத்தி கூறினார். நீங்கள் எப்போதெல்லாம் எங்களுடைய நாட்டுக்கு வருகிறீர்களோ, அப்போது எங்களுடைய நாட்டை நன்றாக வளப்படுத்துகிறீர்கள் என பிரதமர் மோடியை பாராட்டி பேசினார்.
மொரீசியஸில் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் நீங்கள் ஆற்றிய பங்கு உண்மையில் பெரிதும் பாராட்டத்தக்கது என்றும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடிக்கு, தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன் என்ற உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.
இந்த நிலையில், மொரீசியஸ் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் பிரதமர் மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் முன்னிலையில் 8 ஒப்பந்தங்கள் நேற்று உறுதி செய்யப்பட்டன. உலகளாவிய தெற்கு பகுதியில், தன்னுடைய செல்வாக்கை விரிவாக்கம் செய்யும் தடையற்ற முயற்சிகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. இது அதனை சுற்றியுள்ள பிற சிறிய நாடுகளில் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறது. தைவானை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்குடன் சீனாவின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் வலம் வரும் சூழலில், அதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தென்சீன கடல் பகுதியிலும் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற சில அண்டை நாடுகள் எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டுள்ளன.
இந்த சூழலில், உலகளாவிய தெற்கு பகுதிக்கான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான பெரிய தொலைநோக்கு பார்வையை பிரதமர் மோடி மொரீசியஸில் இருந்து நேற்று வெளியிட்டார். அப்போது, 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவால், சாகர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது பற்றியும் அவர் நினைவுகூர்ந்து பேசினார். இந்த மண்டலத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான திட்டம் என்பதே சாகர் திட்டத்தின் விரிவாக்கம் ஆகும்.
இந்த சூழலில், புதிய அறிவிப்பு ஒன்றை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இந்தியாவின் உலகளாவிய தெற்கு பகுதிக்கான புதிய பார்வையான மகாசாகர் திட்டமே அந்த புதிய திட்டம் ஆகும். இதன்படி, அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பரம் மற்றும் முழுமையான நவீனத்துவம் (மகாசாகர்) வாய்ந்த ஒன்றாக நம்முடைய உலகளாவிய தெற்கு பகுதிக்கான தொலைநோக்கு பார்வை இருக்கும் என்று அப்போது அவர் கூறினார்.
இதேபோன்று நம்முடைய தொலைநோக்கு பார்வையானது, வளர்ச்சிக்கான வர்த்தகம், நீடித்த வளர்ச்சிக்கான திறன் கட்டமைப்பு மற்றும் பகிரப்பட்ட வருங்காலத்திற்கான பரஸ்பர பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என அவர் கூறியுள்ளார். உலகளாவிய தெற்கு பகுதியில் தனி ஆதிக்கம் செலுத்த சீனா முயன்று வரும் சூழலில், அனைத்து தரப்பினருக்கும் வேண்டிய வளர்ச்சியை கவனத்தில் கொண்டு இந்த மகாசாகர் திட்டம் அமைந்துள்ளது. உலகளாவிய தெற்கு, இந்திய பெருங்கடல் அல்லது ஆப்பிரிக்க கண்டம் என எதுவாக இருப்பினும், மொரீசியஸ் நம்முடைய நட்பு நாடாகும் என்று மோடி, பெருமிதத்துடன் மொரீசியஸை குறிப்பிட்டு கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மகளிர் உரிமைத் தொகை 2-ம் கட்ட விரிவாக்கம்: நாளை தொடங்கி வைக்கிறார்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
10 Dec 2025சென்னை, 2-ம் கட்ட மகளிர் உரிமைத் தொகை விரிவாக்க திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
-
தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி
10 Dec 2025சென்னை, காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி மாநில மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்க அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கூட்டணி குறித்து முடிவெடுக்க இ.பி.எஸ்.சுக்கு அதிகாரம்: அ.தி.மு.க. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதாக அ.தி.மு.க.
-
தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை மீண்டும் ஒப்படைக்க இன்றே கடைசி நாள்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.
-
9-வது நாளாக தொடர்ந்த சிக்கல்: 14 இண்டிகோ விமானங்கள் ரத்து
10 Dec 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 14 இண்டிகோ விமான சேவைகள் நேற்றும் (டிச. 10) ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்தது.
-
ஓய்வு பெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு ரூ.12,000 மாத ஓய்வூதியத்திற்கான ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
10 Dec 2025சென்னை. ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் ஓய்வூதியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை மீண்டும் ஒப்படைக்க இன்றே கடைசி நாள்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
10 Dec 2025சென்னை, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி: பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு
10 Dec 2025புதுடெல்லி, யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் தீபாவளி சேர்க்கப்பட்டதைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
-
மீண்டும் இ-மெயில் மூலம் ராஜஸ்தானில் அஜ்மீர் தர்கா, கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
10 Dec 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் உள்ள பிரபல அஜ்மீர் தர்கா, கலெக்டர் அலுவலகம் மற்றும் ராஜஸ்தான் ஐகோர்ட்டின் ஜெய்ப்பூர் கிளை ஆகியவற்றிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்
-
அ.தி.மு.க.வை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது: சி.வி.சண்முகம்
10 Dec 2025சென்னை, அ.தி.மு.க.வை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
-
ஆணவம் பிடித்த டெல்லிக்கு தமிழ்நாடு என்றைக்குமே அவுட் ஆப் கன்ரோல்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
10 Dec 2025சென்னை, எந்த ஷா வந்தாலென்ன..? எத்தனை திட்டம் போட்டாலென்ன...?
-
4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகள் அமைச்சர் வழங்கினார்
10 Dec 2025சென்னை, 4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.
-
புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு
10 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
10 Dec 2025சென்னை, தமிழகம் முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நேற்று தொடங்கிய நிலையில், எஸ்.ஐ.ஆர்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி: இந்திய அணி புதிய சாதனை
10 Dec 2025சென்னை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
அபார வெற்றி....
-
உணவு தானியங்களை சேமித்து வைக்க 7 மாவட்டங்களில் ரூ.332.46 கோடியில் 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
10 Dec 2025சென்னை, ரூ.13.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை திறந்து வைத்து, உணவு தானியங்களை சேமித்து வைக்க திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரூ.3
-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை ஆய்வு செய்த தொல்லியல்துறை குழு
10 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.
-
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நில அளவர்கள், வரைவளர்கள் 476 பேருக்கு பணி நியமன ஆணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
10 Dec 2025சென்னை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்
-
3 வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்கள்: ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை
10 Dec 2025புவனேஷ்வர், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
-
ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை: கோலி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்
10 Dec 2025துபாய், ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய முன்னணி வீரர் 2 இடங்கள் முன்னேறி கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
-
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை
10 Dec 2025திருப்பதி, திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
-
ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்வு: புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை
10 Dec 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.96,240-க்கு விற்பனையானது.
-
ஆஸி.,யில் அமலுக்கு வந்தது 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகங்ளை பயன்படுத்த தடை
10 Dec 2025கென்பரா, 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான தடை அமலுக்கு வந்தது.
-
தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை மீண்டும் ஒப்படைக்க இன்றே கடைசி நாள்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.



