முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் விவகாரம்: அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      தமிழகம்
Annamalai 2024 11 20

Source: provided

சென்னை : மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ். இவர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார்.

அதில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் மதுரை திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகன் கோவிலுக்கு சொந்தமானது என்றும், அங்கிருக்கும் தர்கா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், இதுதொடர்பாக 1931-ம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சில் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது எனவும் பேசி உள்ளனர். எனவே மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து