எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார். அடுத்த மாதம் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில் மாட்ரிட் ஓபன் போட்டியில் நோவக் ஜோகோவிச் பங்கேற்றார். முதல் சுற்றில் இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டியும், ஜோகோவிச்சும் மோதினர்.
இதில் அர்னால்டி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலும் ஜோகோவிச் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
_________________________________________________________________________________________________
புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. முதல் இடம்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லியில் நடந்தது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள ஆர்.சி.பி. அணி தொடர்ந்து 6 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது. 2வது இடத்தை குஜராத்தும், 3வது இடத்தை மும்பையும், 4வது இடத்தை டெல்லியும், பஞ்சாப் கிங்ஸ் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
_________________________________________________________________________________________________
ராகுலை நக்கல் அடித்த கோலி
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கியபெங்களூரு அணி 18.3 ஓவரில் 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
இதனையடுத்து இது என்னோட ஹோம் கிரவுண்ட் என பெங்களூரு மைதானத்தில் கே.எல்.ராகுல் செய்த சைகையை டெல்லி மைதானத்தில் ஜாலியாக ரீ-க்ரியேட் செய்து விராட் கோலி கிண்டலடித்தார். முன்னதாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. அப்போட்டியில் 93 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் வட்டமிட்டு அடித்து ஆக்ரோஷமாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
_________________________________________________________________________________________________
சாதனை படைத்த புவனேஸ்வர்
18-வது ஐ.பி.எல். தொடரில், டெல்லியில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது. அடுத்து 163 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஐ.பி.எல். தொடரில் புவனேஸ்வர் குமார் இதுவரை 193 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார்.
_________________________________________________________________________________________________
மலிங்கா சாதனையை முறியடித்த பும்ரா
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19 ஆவது ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மலிங்காவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். மும்பை அணிக்காக பும்ரா இதுவரை 174 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக மும்பை அணிக்காக மலிங்கா 170 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது.
_________________________________________________________________________________________________
சி.எஸ்.கே. குறித்து ரெய்னா
நடப்பு ஐ.பி.எல். தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் கூறியதாவது: ஐ.பி.எல். ஏலத்திலேயே சி.எஸ்.கே. அணி தோற்றுவிட்டது. கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களை ஏன் சி.எஸ்.கே. வாங்கவில்லை?
இந்த ஐ.பி.எல். ஏலத்தைப் பொறுத்தவரை தோனியின் தலையீடு ஏதும் இல்லை. முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவு. தோனியைப் பொறுத்தவரை 43 வயதிலும் அணிக்கு தேவையானதை களத்தில் இருந்து செய்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்தது இல்லை. இளம் பிளேயர்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். என்னைப் பொறுத்தவரை தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாடுவார். சி.எஸ்.கே. நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 110 அடியை கடந்தது
21 May 2025மேட்டூர் : காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று (மே.21) விநாடிக்கு 12,819 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
விவாகரத்து வழக்கு: நடிகர் ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தரக்கோரி ஆர்த்தி புதிய மனு
21 May 2025சென்னை : விவாகரத்து கோரிய வழக்கில், நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகினர்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்..? - விலை உயரும் கச்சா எண்ணெய்
21 May 2025வாஷிங்டன் : ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உள்ளது.
-
உக்ரைன் ஆக்கிரமித்த இடத்தில் ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம்
21 May 2025ரஷ்யா, உக்ரைன் படைகள் ஆக்கிரமித்த குர்ஸ்க் பிராந்தியத்திற்கு ரஷ்யா அதிபர் பயணம் செய்துள்ளார்.
-
நிதி ஆயோக் கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்
21 May 2025சென்னை : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.
-
கல்வி நிதி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு
21 May 2025புதுடெல்லி : சமக்ர சிக்ஷா திட்டத்தின் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம்) கீழ் கல்வி நிதியில் ஆண்டுதோறும் ரூ.2000 கோடிக்கும் அதிகமான பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்
-
நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்
21 May 2025புதுடெல்லி : நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
-
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் கொலையில் குற்றவாளி பரபரப்பு தகவல்
21 May 2025அமெரிக்கா, அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இளம் தொழிலதிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
-
சென்னையில் இருந்து புறப்பட இருந்த விமானங்கள் திடீர் ரத்து; பயணிகள் கடும் அவதி
21 May 2025சென்னை, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு புறப்பட தயாராக இருந்த விமானங்கள் திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
-
தமிழ்நாட்டின் நிதி உரிமைக்காக 24-ம் தேதி டெல்லி செல்கிறேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
21 May 2025சென்னை : தமிழ்நாட்டுக்கான நியாயமான நிதி உரிமையை நிதிஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ம் தேதி டெல்லி செல்கிறேன்.
-
`ஹெல்மெட்' அணியாமல் இருப்பது உள்ளிட்ட 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே இனி அபராதம் : சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவு
21 May 2025சென்னை : 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும், என போக்குவரத்து போலீஸாருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
-
ஓய்வு குறித்த ரோகித் சர்மாவின் பரிந்துரையை நிராகரித்த பி.சி.சி.ஐ.
21 May 2025புதுடெல்லி : ஓய்வு குறித்த ரோகித் சர்மாவின் பரிந்துரையை பி.சி.சி.ஐ. நிராகரித்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
-
அசோகா பல்கலை. பேராசிரியருக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமீன்
21 May 2025புதுடெல்லி : அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
21 May 2025சென்னை : தங்கம் விலை நேற்று (மே.21) அதிரடியாக பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,440-க்கு விற்பனையானது.
-
எந்த மனக்கசப்பு இல்லை: அன்புமணி விவகாரத்தில் டாக்டர் ராமதாஸ் விளக்கம்
21 May 2025விழுப்புரம் : அன்புமணியுடன் மனக்கசப்பு இல்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்: கனிமொழி தலைமையிலான குழு இன்று ரஷ்யா பயணம்
21 May 2025புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளிக்க உலக நாடுகளுக்கு புறப்பட்ட முதல் எம்.பி.க்கள் குழு. கனிமொழி எம்.பி.
-
மோடி அரசு கவர்னர்களை தவறாக பயன்படுத்துகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
21 May 2025புதுடெல்லி : மோடி அரசு கவர்னர்களை தவறாக பயன்படுத்துகிறது என்று மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
-
ரூ.176 கோடி மதிப்பிலான 14 புதிய தோழி விடுதிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 May 2025சென்னை : பணிபுரியும் மகளிருக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோழி விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
-
பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: நீதிபதியின் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி
21 May 2025டெல்லி : பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழகம் வந்தது
21 May 2025திருவள்ளூர் : தெலுங்கு - கங்கை கால்வாய் மதகு சீரமைப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கிருஷ்ணா நதி நீர், மீண்டும் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு நேற்று (மே 21) கா
-
மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த 52 பேருக்கு சிகிச்சை
21 May 2025மும்பை : மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக லேசான அறிகுறிகளுடன் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-05-2025
21 May 2025 -
ராஜீவ்காந்தி நினைவு தினம்: டெல்லியில் ராகுல் அஞ்சலி
21 May 2025டெல்லி : டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.
-
எல்லையில் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தானியர் கைது
21 May 2025பஞ்சாப், பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லையைத் தாண்டிய ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிஎஸ்எப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார
-
அரக்கோணத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
21 May 2025அரக்கோணம் : அரக்கோணம் நேற்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.