எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து இளம் சுழல்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதுர் விலகியதாக 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது. கேரளத்தைச் சேர்ந்த இளம் வீரர் (24) விக்னேஷ் புதூர் சி.எஸ்.கே. அணிக்கு எதிராக அறிமுகமாகிய சிறப்பாக பந்து வீசினார். கடைசி சில போட்டிகளில் சுமாராக பந்துவீசினாலும் இந்திய ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்தவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.
தற்போது, விக்னேஷ் புதூருக்குப் பதிலாக 31 வயது ரகு சர்மா அணியில் இணைந்துள்ளார். வலது கை சுழல்பந்து (லெக் ஸ்பின்னர்) வீச்சாளரான ரகு சர்மா மும்பை அணியின் பந்துவீச்சு குழுவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ரகு சர்மா பஞ்சாப், புதுச்சேரி அணிகளுக்காக விளையாடியுள்ளார். 11 முதல்தர போட்டிகளில் 57 விக்கெட்டுகளும் 3 டி20 போட்டிகளில் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் பெங்களூரு அணி 7 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விராட் கோலி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் , தற்போது உங்களுக்கு பிடித்த பாடல் எது ? என விராட் கோலியிடம் கேட்கப்பட்டது . அதற்கு பதிலளித்த விராட் கோலி. 'நீ சிங்கம் தான்' என்ற பாடல் மிகவும் பிடிக்கும் என பதிலளித்தார் . சிம்பு நடித்த 'பத்து தல'படத்தில் 'நீ சிங்கம் தான் பாடல்' இடம் பெற்றுள்ளது . இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
நதீம் இன்ஸ்டா பக்கம் முடக்கம்
பாகிஸ்தானைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அர்ஷத் நதீம், 2024-ல் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எரிதலில் தங்கம் வென்றுள்ளார். இந்நிலையில், இந்தியாவிலுள்ள அவரது ரசிகர்கள் நதீமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்க்க முயன்றபோது அது சட்டப்பூர்வமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பல அதிரடியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.
அதன் அடிப்படையில், பாகிஸ்தான் பிரபலங்கள் பலரது சமூக வலைதளப் பக்கங்களும் இந்தியாவில் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த பல யூடியூப் சேனல்களும், இந்தியாவுக்கு எதிரான பொய்யான தகவல்களை பரப்பியதால் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தானின் முன்னாள் கிரிகெட் வீரர்களான சோயிப் அக்தர், பாசித் அலி மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகியோரது யூடியூப் சேனல்களும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்படவில்லை.
பதிரானாவுக்கு சிமன்ஸ் யோசனை
ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் அணியாக வெளியேறியது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே. வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சி.எஸ்.கே.வின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவரான மதீஷா பதிரானாவுக்கும் இந்த சீசன் சரியாக அமையவில்லை. இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 9 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அவரது எகானமி 10.39 ஆக உள்ளது. மேலும், இந்த சீசனில் அவர் நிறைய அகலப் பந்துகளை (வைட் பால்ஸ்) வீசி வருகிறார்.
மதீஷா பதிரானாவின் பந்துவீச்சு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ் பேசியதாவது: பதிரானாவின் பந்துவீச்சு ஆக்ஷனில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் துல்லியமாக பந்துவீசவில்லையா என்பதை என்னால் உறுதிபட கூற முடியாது. அவரது பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக விளையாட பேட்டர்கள் பழகிக்கொண்டுவிட்டார்கள். பந்துவீச்சில் பதிரானா பயன்படுத்தும் யுக்திகளை பேட்டர்கள் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு விளையாடுகிறார்கள். அதனால், பதிரானா எப்படி பந்துவீசப் போகிறார் என்பதை அவர்களால் எளிதில் கணிக்க முடிகிறது. போட்டிகளில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு பதிரானா அவரது பந்துவீச்சில் மாற்றங்களை கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றார்.
மனைவிக்கு வாழ்த்து கூறிய கோலி
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நேற்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளுக்கு அவரது கணவர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் அவர்," என் சிறந்த தோழி, என் வாழ்க்கைத் துணை, என் பாதுகாப்பான இடம், என் சிறந்த பாதி, என் அனைத்திற்கும், எங்கள் அனைவரின் வாழ்க்கைக்கும் வழிகாட்டும் ஒளி நீ.. உன்னை நாங்கள் தினமும் அதிகமாக நேசிக்கிறோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே.." என குறிப்பிட்டிருந்தார்.
மேக்ஸ்வெல் திடீர் விலகல்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த மேக்ஸ்வெல் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முழுமையாக விளக்கியுள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் தெரிவித்தார்.
மேக்ஸ் வெல் இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் வெறும் 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதே சமயம் 13 ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.
மாட்ரிட் ஓபன்: அரையிறுதியில் சபலென்கா
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்டியூக் உடன் மோதினார்.
இதில் சபலென்கா முதல் செட்டை 7-6 (7-4) என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் உக்ரைன் வீராங்கனை கடும் சவால் அளித்தார். சபலென்கா 2வது செட்டை 7-6 (9-7) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஈரோட்டில் இன்று த.வெ.க. பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு
17 Dec 2025ஈரோடு, விஜய் பிரச்சார கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று நேரில் ஆய்வு நடத்
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: புதிய உச்சத்தில் வெள்ளி விலை
17 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையோ வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
17 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
17 Dec 2025சென்னை, வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலை
-
திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி மறுப்பு
17 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
கனிமொழி எம்.பி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
17 Dec 2025சென்னை, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
17 Dec 2025சென்னை, பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11 விமானங்கள் ரத்து
17 Dec 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவிப்பு
17 Dec 2025அடிலெய்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் குவாஜா, அலெக்ஸ் கேரியின பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் குவித்துள்ளது.
-
சென்னை நங்கநல்லூரில் 2-வது ஹஜ் இல்லம் கட்டப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
17 Dec 2025சென்னை, சென்னை சூளையில் ஹஜ் இல்லம் 2-வது இல்லம் எதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு பரிசளித்தார் ஆனந்த் அம்பானி
17 Dec 2025புதுடெல்லி, சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்தார்.
14 ஆண்டுக்கு பிறகு...
-
சனாதன கும்பலை கண்டித்து டிச. 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் திருமாவளவன் அறிவிப்பு
17 Dec 2025சென்னை, மதவெறி அரசியலைப் பரப்பும் சனாதனக் கும்பலைக் கண்டித்து டிசம்பர் 22 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு: இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை
17 Dec 2025ஜெருசலேம், 2 நாட்கள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
-
இனி அன்புமணி ராமதாஸ் அல்ல.... அன்புமணி மட்டுமே: ராமதாஸ்
17 Dec 2025விழுப்புரம், இனி அன்புமணி ராமதாஸ் அல்ல அன்புமணி மட்டுமே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக தமிழகத்தில் ரூ.11.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
17 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக ரூ.11.40 லட்ச
-
குஜராத்: விபத்தில் 3 பேர் பலி
17 Dec 2025காந்தி நகர், குஜராத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
ஜல்லிக்கட்டு போட்டிகான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது
17 Dec 2025சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.&
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு: உள்நோக்கத்துடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: ஐகோர்ட் கிளையில் தலைமை செயலாளர் விளக்கம்
17 Dec 2025மதுரை, எந்த உள்நோக்கத்துடனும் நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு தொடர்பாக காணொலி காட்சி மூலம் ஆஜரான தலைமை செயலாளர் ஐக
-
பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகத்திற்கு வழங்கியது ரூ.4,130 கோடி மட்டுமே: மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Dec 2025சென்னை, கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17 சதவீதம் நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது.
-
45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா தொகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்ய தி.காங்., திட்டம்
17 Dec 2025கொல்கத்தா, 45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்ப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகான தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம்
17 Dec 2025சென்னை, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
-
டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய சாதனை: அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி
17 Dec 2025துபாய், ஆடவருக்கான தரவரிசை பட்டியலை சிறிய மாற்றத்துடன் ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
-
எத்தியோப்பியாவின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்
17 Dec 2025அடிஸ் அபாபா, பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் டிச. 23-ல் தமிழகம் வருகை: நயினார்
17 Dec 2025சென்னை, தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரும் 23-ம் தேதி தமிழகம் வருகிறார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: இந்தியாவின் அந்தஸ்து உயர்கிறது: அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
17 Dec 2025புதுடெல்லி, பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கியதுக்கு இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்று அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.


