எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் உதவி எண்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்.22-ம் தேதியன்று, ஜம்மு காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றது.
இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக அவர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300 (Landline), 9289516712 (Mobile Number with Whatsapp) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அமைக்கப்பட்டு, அவர்களின் தேவைகள் அறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் படித்துவரும் தமிழகத்தைச் சார்ந்த 52 மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பாதுகாப்பாக தமிழகத்துக்கு அழைத்துவர வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இந்த வேண்டுகோளுக்கு இனங்க, முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், ஆகியோர் அம்மாநில நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து பேசி, தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தற்போது விமான சேவைகள் முற்றிலும் முடக்கி வைக்கப்பட்டுள்ள காரணத்தினாலும், அவர்களை சாலை வழியாக பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான சூழ்நிலை இல்லாத காரணத்தினாலும், தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கல்வி சுற்றுலா சென்ற நான்கு மாணவர்கள் மட்டும் சாலை வழியாக புது டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (மே 9) இரவு 7.30 மணியளவில் புது டெல்லி தமிழ்நாடு இல்லம் வந்து சேர்வார்கள் என்றும், பின்னர் அவர்கள் இன்று (மே 10ம் தேதி) அன்று அதிகாலை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் மேற்கு எல்லைப்பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு தேவையான தகவல்கள், உதவி, மீட்பு மற்றும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24/7 உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புது தில்லி தமிழ்நாடு இல்ல உதவி எண்களிலும், மேலும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், தமிழக அரசின் 24/7 உதவி எண்களான, 1800 309 3793 (இந்தியாவிற்குள் ), +91 80 6900 9900 (வெளிநாடு), + 91 80 6900 9901 (தொடர்புக்கு) தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
22 May 2025சென்னை: ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-05-2025
22 May 2025 -
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
22 May 2025சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
-
கேன்ஸ் திரைப்படவிழா: குங்குமம் வைத்து வந்த ஐஸ்வர்யா ராய்
22 May 2025கேன்ஸ் (பிரான்ஸ்): நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவையுடன் குங்குமம் வைத்து வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
-
டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசின் அப்பீல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
22 May 2025புதுடெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என்றும் விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என்றும் அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப
-
இந்தியா - பாக். மோதலை தீர்த்து வைத்தது நான்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
22 May 2025வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை தீர்த்துவைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
-
அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை
22 May 2025சென்னை: அடுத்த 10 நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் ஐ.எஸ்.ஐ. முகவர்கள் 2 பேர் கைது
22 May 2025புதுடெல்லி: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-யின் இரண்டு முகவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.
-
தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
22 May 2025சென்னை: தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
சென்னை, மும்பையில் அதிகரிக்கும் தொற்று: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் மேலும் அதிகரிப்பு
22 May 2025புதுடெல்லி: ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
-
இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
22 May 2025வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சு
-
புதிய நகைக் கடன் விதிமுறைகளை ஆர்.பி.ஐ. திரும்பப் பெற வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
22 May 2025சென்னை: “நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உடனே திரும்பப் பெற வேண்டும்.” என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்..? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
22 May 2025சென்னை: தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?" என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கில் விஜய் போட்டி..?
22 May 2025மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் விஜய் களமிறங்க உள்ளாரா? என்ற எதிர்பார்ப்பு த.வெ.க. தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
-
இன்று முதல் ஏற்காட்டில் கோடை விழா தொடக்கம்
22 May 2025சேலம்: ஏற்காட்டில் கோடை விழா இன்று முதல் தொடங்குகிறது.
-
மெத்தம்பெட்டமைன் கடத்தல்: சென்னையில் மேலும் 4 பேர் கைது
22 May 2025சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்
22 May 2025புதுடில்லி: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டுள்ளது.
-
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
22 May 2025சென்னை: அரக்கோணத்தில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல்: சுப்ரீம் கோர்ட்டின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு
22 May 2025சென்னை: அமலாக்கத்துறையின் எல்லை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.
-
ரூ.72 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன் தங்கத்தின் விலை
22 May 2025சென்னை: சென்னையில் நேற்று (மே 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,800க்கு விற்பனையானது.
-
தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்
22 May 2025நெல்லை: தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
-
சிங்கம்புணரி குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
22 May 2025சிவகங்கை: சிங்கம்புணரி அருகே குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
-
7 ஐ.பி.எல். தொடரில் 500 ரன்கள்: கே.எல்.ராகுல் புதிய சாதனை
22 May 2025மும்பை: ஐ.பி.எல். வரலாற்றில் 7 முறை ஒரு தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 3 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
-
ரயிலில் கடத்தப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
22 May 2025சென்னை: ரயிலில் கடத்தப்பட்ட ஹவாலா பணம் ரூ.32 லட்சத்தை போலீசார் கைப்பற்றினர்.
-
கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது
22 May 2025திருவள்ளூர்: தெலுங்கு - கங்கை கால்வாய் மதகு சீரமைப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கிருஷ்ணா நதி நீர், மீண்டும் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு புதன்கிழமை இரவு பூ