எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடையும் வரை நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதியை, இங்கிலாந்து அணியின் சிறப்பு ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று (மே 15) நியமித்துள்ளது.
நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள டிம் சௌதி, கடந்த ஆண்டு டிசம்பரில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக அடுத்த வாரம் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடவுள்ளது. அந்த போட்டியிலிருந்து டிம் சௌதி இங்கிலாந்து அணியுடன் இணையவுள்ளார். 36 வயதாகும் டிம் சௌதி நியூசிலாந்து அணிக்காக 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 391 விக்கெட்டுகளையும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 221 விக்கெட்டுகளையும், 126 டி20 போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்.சி.பி. யில் வெளிநாட்டு வீரர்கள்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 8ஆம் தேதி தரம்சாலாவில் பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக சொந்த நாடு திரும்பினர்.
பின்னர் இந்தியா- பாகிஸ்தான் இடையில் கடந்த 10ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி மீண்டும் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆர்.சி.பி. அணியில் இடம் பிடித்திருந்த பில் சால்ட், டிம் டேவிட், பெத்தேல் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.
மொயீன் அலி திடீர் விலகல்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 8ஆம் தேதி தரம்சாலாவில் பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக சொந்த நாடு திரும்பினர். சண்டை நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி மீண்டும் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக இந்தியா திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் மொயீன் அலி, சொந்த காரணத்திற்காக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணியின் மெக்கர்க் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கோப்பை வென்ற போலோக்னா
இத்தாலியில் உள்ள ஸ்டேடியோ ஒலிம்பிக்கோ திடலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஏசி மிலனை போலோக்னா அணி 1-0 என வீழ்த்தி கோப்பையை வென்றது. டான் அசானே என்டோய் கடைசி 3 போட்டிகளில் விளையாடமல் இருந்தார். காயத்திலிருந்து மீண்டுவந்த இவர் இந்தப் போட்டியில் 53ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 1974-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக பொலோனியா அணி இத்தாலியன் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் 10 நிமிஷத்தில் இரண்டு அணியின் கோல் கீப்பர்களும் அசத்தலாக பந்தினை தடுத்தார்கள். முதல்பாதியின் கடைசியில் போலோக்னா அணியின் கேப்டனுக்கு மூக்குடைந்து ரத்தம் வழிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் ஏசி மிலன் பந்தினை 54 சதவிகிதம் தனது கட்டுக்குள் வைத்திருந்தாலும் இலக்கை நோக்கி 2 முறை மட்டுமே கோல் அடிக்க முயற்சித்தது. அதையும் போலோக்னா அணி தடுத்துவிட்டது. போலோக்னா அணி 5 முறை இலக்கை நோக்கி அடிக்கப்பட்ட பந்தில் 1 முறை சரியாக சென்று கோலாக மாறியது. ஏசி மிலனின் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றும் கனவினை போலாக்னா அணி முறியடித்தது.
பட்லருக்கு பதில் மெண்டிஸ் ?
ஐ.பி.எல். போட்டிகள் இந்தியா -பாகிஸ்தான் மோதலால் ஒத்திவைக்கப்பட்டன. அதனால் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பினார்கள். மீண்டும் ஐ.பி.எல். போட்டிகள் மே.17ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. ஐ.பி.எல். போட்டிகள் தேதி மாற்றப்பட்டதால் வெளிநாட்டு வீரர்களுக்கு ஏற்கனவே இருக்கும் போட்டிகளை இழக்க வேண்டி இருக்கும்.
இதன் காரணமாக பி.சி.சி.ஐ. ஐ.பி.எல். அணிகளுக்கு யாரை வேண்டுமானாலும் மீதமுள்ள போட்டிகளுக்கு தேர்வு செய்யலாம் எனப் புதிய விதியைக் கொண்டு வந்துள்ளது. இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் - பேட்டர் குசால் மெண்டிஸ் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜாஸ் பட்லர் இந்த சீசனில் 11 போட்டிகளில் 500 ரன்கள் குவித்திருந்தார். குஜ்ராத் அணியில் டாப் 3 வீரர்களான ஷுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர் மூவருமே 500க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். தற்போது, பட்லர் இல்லாமல் இந்த வெற்றிக் கூட்டணி மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அசையாமல் நின்ற பெயர்ஸ்டோ
இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோ 10 நொடிகள் அசையாமல் நின்ற விடியோ வைரலாகி வருகிறது. 35 வயதாகும் ஜானி பெயர்ஸ்டோ தற்போது கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 1-இல் விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் யார்க்ஷ்ரி அணிக்காக கேப்டன் பொறுப்பிலிருக்கும் ஜானி பெயர்ஸ்டோ ஒரு பந்தினை அடித்துவிட்டு அசையாமல் 9.51 நொடிகள் நிற்பார். இரண்டு பந்துகளுக்கு தொடர்ச்சியாக இப்படி நிற்கும் விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை ரோட்ஸே கவுண்டி சாம்பியன்ஷிப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக ஆஸி. உடனான டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்துவிட்டு கிரிஸில் காலை வைத்துவிட்டு நடந்து சென்றார். கீப்பர் பந்தினை பிடித்து ஸ்டம்பில் அடித்ததும் நடுவர் அவுட் கொடுத்தார். இது மிகப்பெரிய சர்ச்சையானது. விதியின்படி அது அவுட்டாக இருந்தாலும் பலரும் இதைக் கடுமையாக விமர்சித்தார்கள். ஜானி பெயர்ஸ்டோ இதனை ஒரு பாடமாக எடுத்துகொண்டு இப்படி செய்து வருகிறார். கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் மீம்ஸ்களாக குவித்து வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை
04 Jul 2025திருச்செந்தூர் : கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.