எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : 10-ம் வகுப்பு தேர்வில் 5 இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்ணை எடுத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி முதல் கடந்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடந்து முடிந்தது. தேர்வு முடிவை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் வெளியிட்டார். தேர்வு எழுதிய 8 லட்சத்து 71 ஆயிரத்து 239 பேரில், 4 லட்சத்து 78 மாணவர்கள், 4 லட்சத்து 17 ஆயிரத்து 183 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 17 ஆயிரத்து 261 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
இந்தநிலையில் கோவை, மதுரை, சேலம், கோவில்பட்டியில் 10-ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து 5 இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்ணை எடுத்த ருசிகரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமரவேல். இவரது மகள்கள் மாயாஸ்ரீ, மகாஸ்ரீ இரட்டையர்களான இவர்கள் சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருவரும் 475 மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.
மதுரை மாவட்டம் மேலும் அருகே உள்ளது. கீழையூர் இந்த ஊரை சேர்ந்தவர் வைரவன். இவரது மகன்கள் ராமநாதன்,லட்சுமணன் இருவரும் இரட்டையர்கள். இவர்கள் இருவரும் மேலும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். நேற்று வெளிவந்த மதிப்பெண் பட்டியலில் இவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர் ராஜன் - பாரதி செல்வி தம்பதியர். இந்த தம்பதிக்கு கவிதா, கனிகா என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள். இவர்கள் 2 பேரும் கோவை ராமநாதபுரம் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இரட்டை சகோதரிகள் 2 பேரும் ஒரே மாதிரியாக 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜுவ் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் வக்கீல் சங்கர் கணேஷ். இவர் கோவில்பட்டி வக்கீல் சங்க தலைவராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி மீனா. இந்த தம்பதியின் மகன்கள் ஹரிகரன், செந்தில் நாதன் இந்த இரட்டை சகோதரர்கள் இருவரும் கோவில்பட்டியில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 10- வகுப்பு பயின்றனர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் ஹரிஹரன், செந்தில்நாதன் இருவரும் தலா 457 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் மணி - தீபா தம்பதியின் மகள்கள் இரட்டையர்கள். இவர்களது பெயர் இதழ்யா மற்றும் இதழ்யாதினி. 2 பேரும் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இரட்டை சகோதிரிகள் இருவரும் 475 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 17 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
சென்னை சட்டம் - ஒழுங்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை
17 May 2025சென்னை : சென்னையில் சட்டம் - ஒழுங்கு நிலை தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் அருண் ஆலோசனை மேற்கொண்டார்.
-
ஏமன் துறைமுகங்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
17 May 2025சனா, ஏமன் துறைமுகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
-
இந்திய தாக்குதலை முதன்முறையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர்
17 May 2025இஸ்லாமாபாத், ஆபரேஷன் சிந்தூரின்போது தங்கள் நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக வெள
-
அரபிக்கடல் பகுதியில் மே 22ல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
17 May 2025சென்னை, அரபிக்கடல் பகுதியில் வரும் 22 ம் தேதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு
17 May 2025பெங்களூரு, கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
பள்ளி புத்தகம் கொண்டு வரவேண்டாம்: மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கேரளா அரசு
17 May 2025கேரளா : கேரளாவில் முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டு செல்ல தேவையில்லை என்று அந்த மாநில அரசு அறிவிததுள்ளது.
-
காங்கிரஸ் பரிந்துரை நிராகரிப்பு: சசி தரூரை தேர்வு செய்த மத்திய அரசு
17 May 2025புதுடெல்லி, பாகிஸ்தான் மோதல் தொடர்பாக வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கமளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு காங்கிரஸ் பரிந்துரைத்த 4 எம்.பி.களைத் தவிர்த்து, மத்திய அரசு சசி
-
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வழிபாடு
17 May 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று (மே 17) நடைபெற்றது.
-
காஸாவில் 2 நாட்களில் மட்டும் 300 பேர் பலி
17 May 2025காஸா : காஸாவில் ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
-
இமயமலையேற்றத்தின்போது இந்தியர் மயங்கி விழுந்து பலி
17 May 2025காத்மண்டு : இமயமலையேற்றத்தின்போது இந்தியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
-
நாட்டின் பிரதிநிதியாக குழுவை வழிநடத்துவதில் பெருமை : தி.மு.க. எம்.பி. கனிமொழி
17 May 2025சென்னை : நாட்டின் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 1.8 லட்சத்தை தாண்டிய மாணவர் சேர்க்கை
17 May 2025சென்னை, அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை 1.8 லட்சத்தை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பேருந்தில் இருந்து முதியவரை இறக்கி விட்டு தாக்கிய ஓட்டுநர் - நடத்துநர் பணியிடை நீக்கம்
17 May 2025சென்னை : சென்னை மாநகர பேருந்தில் இருந்து முதியவரை இறக்கி விட்டு தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 9 பேர் பலி
17 May 2025ரஷ்யா : உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்தியா ஏ அணி அறிவிப்பு
17 May 2025மும்பை : இங்கிலாந்துக்கு லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியா ஏ அணியை பி.சி.சி.ஐ. நேற்று (மே 16) அறிவித்துள்ளது.
-
ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் பலி
17 May 2025புவனேஸ்வர் : ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாத டிக்கெட் வெளியீடு
17 May 2025திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாதம் டிக்கெட் வெளியீடு செய்யப்பட்டது.
-
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்
17 May 2025ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
-
இது காவி நாடல்ல; திராவிட நாடு: தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்
17 May 2025சென்னை, இது காவி நாடல்ல; திராவிட நாடு என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இடஒதுக்கீடு, பன்முகத்தன்மையை சீர்கெடுக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும்
-
வாகாவில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி
17 May 2025சண்டிகர் : வாகாவில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி பறக்கவிடப்பட்டது.
-
இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் பயங்கர தீ விபத்து: 3 பேர் பலி
17 May 2025லண்டன் : இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மாணவர்களின் மொழித்திறன்களை மேம்படுத்த 'லெவல் அப்' திட்டம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
17 May 2025சென்னை, மாணவர்களின் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகியவற்றின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த திட்டம் : சொல்கிறார் அதிபர் ட்ரம்ப்
17 May 2025வாஷிங்டன் : பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
ஜூன் 14-ல் வி.சி.க. பேரணி
17 May 2025திருச்சி : திருச்சியில் வி.சி.க. சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி வருகிற 14-ம் தேதி நடைபெறுகிறது.
-
நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
17 May 2025சென்னை, 18 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.