எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, சமீபத்தில் ஏற்பட்ட போர் பதற்றங்களின் போது பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவில் பாகிஸ்தானால் குறிவைக்கப்பட்டது. இதனை இந்திய வான் பாதுகாப்பு படை எப்படி காப்பாற்றியது என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுடனான சமீபத்திய மோதலின் போது, இந்தியாவின் எல்லை மாநிலங்களில் உள்ள பல நகரங்களை ஆயுதப் படைகள் துணிச்சலுடன் பாதுகாத்தன. இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளான ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, எல்-70 வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் உள்ளிட்டவை அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலையும், பஞ்சாப் நகரங்களையும் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களிலிருந்து எவ்வாறு காப்பாற்றின என்பதற்கான ஒரு செயல் விளக்கத்தை ராணுவம் காட்சிப்படுத்தியது.
இதுகுறித்து 15-ம் காலாட்படை பிரிவின் கட்டளை பொது அதிகாரி மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி கூறுகையில், “உளவுத்துறையிலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, பாகிஸ்தான் ராணுவத்திடம் எந்த முறையான இலக்குகளும் இல்லை என்பதை அறிந்திருந்தும், அவர்கள் இந்திய ராணுவ முகாம்கள், மத இடங்கள் உட்பட பொதுமக்கள் இலக்குகளை குறிவைப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இவற்றில், பொற்கோவில் மிக முக்கியமானதாகத் தோன்றியது. எனவே பொற்கோவிலுக்கு முழுமையான வான் பாதுகாப்பு குடையை வழங்க கூடுதல் நவீன பாதுகாப்பு அமைப்புகளை நாங்கள் திரட்டினோம்.
மே 8 ஆம் தேதி அதிகாலை, இருள் சூழ்ந்த நேரத்தில், பாகிஸ்தான் ஆளில்லா வான்வழி ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ஒரு பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியது. இதை நாங்கள் எதிர்பார்த்ததால் முழுமையாக தயாராக இருந்தோம். மேலும் எங்கள் துணிச்சலான மற்றும் எச்சரிக்கையான ராணுவத்தினர் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மூலமாக, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களை முறியடித்து, பொற்கோவிலை குறிவைத்த அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தினர். இதனால், நமது புனித பொற்கோவிலில் ஒரு கீறல் கூட வர அனுமதிக்கவில்லை என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


