எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பணிபுரியும் மகளிருக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோழி விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி உள்ளிட்ட ரூ. 176 கோடியில் கட்டப்பட உள்ள 14 புதிய தோழி விடுதிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.5.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், சென்னை – தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, இராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 14 தோழி விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பணி நிமித்தமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு பிறநகரங்களுக்கு இடம் பெயரும் பணிபுரியும் பெண்களின் தேவைகளை உணர்ந்து தரமான, பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டணத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதிகளான "தோழி விடுதிகள்" தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை சென்னை, திருவள்ளூர், கோவை. செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், வேலூர், சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் 16 தோழி விடுதிகளில் 1380-க்கும் மேற்பட்ட பணிபுரியும் மகளிர் பயனடையும் வகையில் முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர்களுக்கான பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகள் அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பாக உள்ளதால், பணிபுரியும் மகளிரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில், பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவை அதிகரித்து வருவதைத் கருத்தில் கொண்டு, கூடுதலாக தற்போது சென்னை - பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் 442 படுக்கைகள் கொண்ட மூன்று புதிய தோழி விடுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
மேலும், தரமணி, சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, இராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 பணிபுரியும் பெண்கள் பயன்பெறும் வகையில் 14 தோழி விடுதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்விடுதிகளில் பயோமெட்ரிக் உள் நுழைவு, 24x7 பாதுகாப்பு வசதி, Wi-Fi வசதி, சிசிடிவி வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆரோக்கியமான உணவு, தொலைக்காட்சி, சுடுநீர் வசதி, சலவை இயந்திரம், இஸ்திரி வசதி, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் நியாயமான வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 110 அடியை கடந்தது
21 May 2025மேட்டூர் : காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று (மே.21) விநாடிக்கு 12,819 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-05-2025
21 May 2025 -
நிதி ஆயோக் கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்
21 May 2025சென்னை : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.
-
தமிழ்நாட்டின் நிதி உரிமைக்காக 24-ம் தேதி டெல்லி செல்கிறேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
21 May 2025சென்னை : தமிழ்நாட்டுக்கான நியாயமான நிதி உரிமையை நிதிஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ம் தேதி டெல்லி செல்கிறேன்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்..? - விலை உயரும் கச்சா எண்ணெய்
21 May 2025வாஷிங்டன் : ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உள்ளது.
-
`ஹெல்மெட்' அணியாமல் இருப்பது உள்ளிட்ட 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே இனி அபராதம் : சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவு
21 May 2025சென்னை : 5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும், என போக்குவரத்து போலீஸாருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
-
கல்வி நிதி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு
21 May 2025புதுடெல்லி : சமக்ர சிக்ஷா திட்டத்தின் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம்) கீழ் கல்வி நிதியில் ஆண்டுதோறும் ரூ.2000 கோடிக்கும் அதிகமான பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
21 May 2025சென்னை : தங்கம் விலை நேற்று (மே.21) அதிரடியாக பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,440-க்கு விற்பனையானது.
-
ரூ.176 கோடி மதிப்பிலான 14 புதிய தோழி விடுதிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 May 2025சென்னை : பணிபுரியும் மகளிருக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோழி விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்: கனிமொழி தலைமையிலான குழு இன்று ரஷ்யா பயணம்
21 May 2025புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளிக்க உலக நாடுகளுக்கு புறப்பட்ட முதல் எம்.பி.க்கள் குழு. கனிமொழி எம்.பி.
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியாவும், ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
21 May 2025புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ரூ.142 கோடி பெற்றதாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை த
-
கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழகம் வந்தது
21 May 2025திருவள்ளூர் : தெலுங்கு - கங்கை கால்வாய் மதகு சீரமைப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த கிருஷ்ணா நதி நீர், மீண்டும் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு நேற்று (மே 21) கா
-
தொடர் கனமழையால் பெங்களூருவில் பலி 5 ஆனது
21 May 2025பெங்களூரு : பெங்களூருவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
-
விவாகரத்து வழக்கு: நடிகர் ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தரக்கோரி ஆர்த்தி புதிய மனு
21 May 2025சென்னை : விவாகரத்து கோரிய வழக்கில், நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகினர்.
-
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் கொலையில் குற்றவாளி பரபரப்பு தகவல்
21 May 2025அமெரிக்கா, அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இளம் தொழிலதிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
-
சென்னையில் இருந்து புறப்பட இருந்த விமானங்கள் திடீர் ரத்து; பயணிகள் கடும் அவதி
21 May 2025சென்னை, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு புறப்பட தயாராக இருந்த விமானங்கள் திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
-
ராஜீவ்காந்தி நினைவு தினம்: டெல்லியில் ராகுல் அஞ்சலி
21 May 2025டெல்லி : டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.
-
மிசோரம் முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமானது : முதல்வர் லால்துஹோமா அறிவிப்பு
21 May 2025ஐஸ்வால் : 'உல்லாஸ்' முன்முயற்சியின் கீழ் மிசோரம் அதிகாரபூர்வமாக முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமாக மாறியுள்ளது என்று அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார்.
-
உக்ரைன் ஆக்கிரமித்த இடத்தில் ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம்
21 May 2025ரஷ்யா, உக்ரைன் படைகள் ஆக்கிரமித்த குர்ஸ்க் பிராந்தியத்திற்கு ரஷ்யா அதிபர் பயணம் செய்துள்ளார்.
-
எந்த மனக்கசப்பு இல்லை: அன்புமணி விவகாரத்தில் டாக்டர் ராமதாஸ் விளக்கம்
21 May 2025விழுப்புரம் : அன்புமணியுடன் மனக்கசப்பு இல்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
21 May 2025சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் டென்ஸல் வாஷிங்டனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
21 May 2025வாஷிங்டன் : கேன்ஸ் திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் டென்ஸல் வாஷிங்டனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
-
பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: நீதிபதியின் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி
21 May 2025டெல்லி : பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்
21 May 2025புதுடெல்லி : நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
-
போரை நிறுத்த தயார்: அமெரிக்க அதிபரிடம் தெரிவித்த ரஷ்ய அதிபர்
21 May 2025மாஸ்கோ : உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் 2 மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் தெரிவி