எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில், நேற்று லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர். இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.
25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாதி எம்.பி. ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________________________________________
பயிற்சியில் இந்திய அணி
இங்கிலாந்தில் 5 டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி லண்டன் சென்றடைந்தது. 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் டெஸ்ட் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, கோலி ஓய்வு பெற்றதால் ஷுப்மன் கில் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்கெனவே பல வீரா்கள் இந்திய ஏ அணியில் இடம் பெற்று, 3 அதிகாரபூா்வமற்ற ஆட்டங்களில் இங்கிலாந்து ஏ அணியுடன் ஆடி வருகின்றனா். இரண்டாம் டெஸ்ட் ஜூலை 2-6-இல் பா்மிங்ஹாமிலும், ஜூலை 10-14-இல் லாா்ட்ஸிலும், ஜூலை 23-27-இல் மான்செஸ்டரிலும், ஆக. 4-8-இல் ஓவல் திரலிலும் நடைபெறுகின்றன. இந்நிலையில், பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில் பயிற்சி விடியோவை வெளியிட்டுள்ளது.
_______________________________________________________________________________________________________________
பேட்டை தொடாத ஸ்மித்
ஆஸி. முன்னாள் கேப்டனும் நட்சத்திர பேட்டருமான ஸ்டீவ் ஸ்மித் 3 மாதங்களாக பேட்டை தொடவில்லை எனக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கடைசியாக, ஸ்டீவ் ஸ்மித் சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்தியாவுடன் விளையாடினார். இதனைத் தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன்.11ஆம் தேதி லண்டனில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் 55 சராசரி கொண்ட ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது: நான் பொதுவாகவே வீட்டுக்கு அருகில் எங்காவது பேட்டை வைத்து ஷேடோ பேட்டிங் பயிற்சி செய்து வருவேன். ஆனால், தற்போது வேண்டுமென்றே பேட்டை சிறிது காலமாக தொடாமல் இருந்தேன். அதுவும் நல்லதுதான். சாம்பியன்ஸ் டிராபியில் ஷமியின் புல் டாஸ் பந்தினை தவறவிட்டதில் இருந்து நான் பேட்டினை தொடவில்லை. பொதுவாக எப்படி இருக்குமெனில் நான் முதல் முறை அடிக்கும்போது நன்றாக விளையாடுவேன், பிறகு மோசமாக, அடுத்து அங்கிருந்து சிறப்பாக ஆடுவேன். ஆனால், இந்தமுறை முதலிரண்டுமே நன்றாக அமைந்தது. அடுத்த சில நாள்களுக்கு பல மணி நேரங்கள் பயிற்சி செய்ய தேவையில்லை எனக் கூறியுள்ளார்.
_______________________________________________________________________________________________________________
என் வாழ்க்கையின் சிறந்த பந்துவீசும் காலத்தில் இருக்கிறேன்: ஹேசில்வுட் பந்துவீச்சு குறித்து ஹேசில்வுட்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஹேசில்வுட் (34) இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 279 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆர்.சி.பி. அணி ஐ.பி.எல். கோப்பை வென்றதில் இவரது பங்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸி. அணி முன்னேறியுள்ள நிலையில் ஹேசில்வுட் அணியில் இணைந்தார். பயிற்சியைத் தொடங்கிய ஹேசில்வுட் பேட்டியில் கூறியதாவது: 2023-இல் இருந்தது போலவே நன்றாக இருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் என்னுடைய விக்கெட்டுகள் நன்றாகவே இருக்கின்றன.
திறமையின்படி பார்த்தால் நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீசும் காலத்தில் இருக்கிறேன். என்னுடைய உடலை மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமானது. என்னுடைய ஒரே பிரச்னையாக தீவிரத்தன்மை மட்டும் தான் இருந்தது. தினமும் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து வருகிறோம். பந்துவீச்சுப் பயிற்சியிலும் செஷன் வாரியாக செய்து வருகிறோம். முடிந்த அளவுக்கு எங்களை சிறந்த நிலையில் வைத்துக்கொள்ள பயிற்சி எடுத்து வருகிறோம் என்றார்.
_______________________________________________________________________________________________________________
கோகோ காப் பட்டம் வென்றார்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் சபலென்காவும், 2ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காபும் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இதனால் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சபலென்கா 7(7)- 6(5) என முதல் செட்டை கைப்பற்றினார். 2ஆவது செட்டில் கோகோ காப் அபாரமாக விளையாடினார். கோகோ காப் ஆட்டத்திற்கு சபலென்காவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 5-2 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 6-2 என 2ஆவது செட்டை எளிதாக கைப்பற்றினார்.
இதனால் ஆட்டம் 3ஆவது செட்டிற்கு நீடித்தது. சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் இந்த செட்டிலும் காப் ஆதிக்கம் செலுத்தினார். கோகோ காப் 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 5-3 என முன்னிலைப் பெற்றார். 9ஆவது கேம்-ஐ சபலென்கா கைப்பற்றினார். இதனால் காப் 5-4 என முன்னிலைப் பெற்றிருந்தார். 10ஆவது கேமிற்கான சர்வீஸை காப் தொடங்கினார். இந்த கேம் "ஏஸ்" வரை சென்றாலும் காப் கைப்பற்றினார். இதனால் 2-1 {6(5)-7(7), 6-2, 6-4} என அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
_______________________________________________________________________________________________________________
வேதனை அளிக்கிறது: சபலென்கா
பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்காவின் கோகோ காப். இந்நிலையில், அவருடன் இறுதிப் போட்டியில் விளையாடிய அரினா சபலென்கா, இந்த தோல்வி வேதனை அளிப்பதாக பேசியுள்ளார். .
“இந்த தோல்வி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது கேரியரில் மிகவும் மோசமான பைனல் இது. கடந்த இரண்டு வார காலம் முழுவதும் சிறந்த முறையில் டென்னிஸ் விளையாடினேன். இகா ஸ்வியாடெக் போன்ற சிறந்த வீராங்கனைகளுக்கு எதிராக கடினமான ஆட்டத்தில் விளையாடி இருந்தேன். இந்த வெற்றிக்கு கோகோ காப் தகுதியானவர். இருந்தாலும், அரையிறுதியில் என்னை இகா ஸ்வியாடெக் வீழ்த்தி இருந்தால் சாம்பியன் பட்டம் வென்று இருப்பார் என நினைக்கிறேன். என்னால் பட்டம் வெல்ல முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். நிச்சயம் நான் வலுவாக மீண்டு வருவேன்” என அரினா சபலென்கா தெரிவித்தார்.
ஹொரெசியோ, மார்செல் சாம்பியன்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-ஜோ சாலிஸ்பரி ஜோடி, அர்ஜென்டினாவின் ஹொரெசியோ ஜெபெல்லோஸ்-ஸ்பெயினின் மார்செல் கிரனோலர்ஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சிறப்பாக ஆடிய ஹொரெசியோ-மார்செல் ஜோடி 6-0, 6-7 (5-7), 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
_______________________________________________________________________________________________________________
ஷாஹித் அப்ரிடி உயிரிழப்பா..?
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இறந்துவிட்டதாகக் கூறும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில், ஒரு பாகிஸ்தான் செய்தி தொகுப்பாளர் அப்ரிடி இறந்துவிட்டதாக அறிவிப்பதைக் காணலாம். இருப்பினும், அது குறித்து உண்மைச் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, அது உண்மையல்ல என்று தெரியவந்தது.
வீடியோவில் உள்ள படங்கள் மற்றும் பிற கூறுகள் ஏ.ஐ. ஆல் உருவாக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டது. ஷாஹித் அப்ரிடி உண்மையில் ஆரோக்கியமாக இருப்பதாகவும்,சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ உண்மைக்குப் புறம்பானது என்றும் உண்மைச் சரிபார்ப்புக் குழு தெளிவுபடுத்தியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
இந்திய அணியில் ஹர்ஷித் ராணா
19 Jun 2025இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
-
ஈரானின் உச்ச தலைவரை குறிவைத்தால்...ஈராக் ஷியா மதகுரு எச்சரிக்கை
19 Jun 2025ஈரான்: ஈரானில் உயர் தவைர் அயதுல்லா அலி கமேனியை குறிவைப்பதற்கு எதிராக ஈராக்கின் ஷியா பிரிவின் மதகுரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அகமதாபாத் விபத்து: ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
19 Jun 2025அமதாபாத்: குஜராத் மாநிலம் அமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந் தேதி, புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக் குள்ளானது.
-
பிரதமர் மோடியை புகழ்ந்த இத்தாலி பிரதமர் மெலோணி
19 Jun 2025இத்தாலி: இந்தியா பிரதமரை பார்த்து நீங்கள் தான் பெஸ்ட் என்று இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோணி மகிழ்ச்சி பொங்க கூறினார்.
-
அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு
19 Jun 2025கோவை: அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: 47 பேர் காயம்
19 Jun 2025டெல் அவிவ்: இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியதில் 47 பேர் காயமடைந்தனர்.
-
கீவ் நகர் மீது பயங்கர தாக்குதல்: ரஷ்யாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க ஜெலன்ஸ்கி கோரிக்கை
19 Jun 2025உக்ரைன்: உக்ரைன்- ரஷ்யா இடையில் 3 வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு பக்கமும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த அதிபர் டிரம்ப் ஒப்புதல்...? வெளியான பரபரப்பு தகவல்
19 Jun 2025வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்த டிரம்ப் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்தியா - இங்கி., முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்சில் துவக்கம்
19 Jun 2025லீட்ஸ்: இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, லீட்சில் இன்று தொடங்க உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி...
-
த.வெ.க. மருத்துவர் அணி புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
19 Jun 2025சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
-
விளையாட்டை விட கோலி உயர்ந்தவரில்லை: அஸ்வின்
19 Jun 2025லண்டன்: விராட் கோலி விளையாட்டை விட பெரியவரில்லை என இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்டுக்கு முன்பாக அஸ்வின் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.
-
சென்னையில் லாரி ஏறி பள்ளி சிறுமி பலி: கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு
19 Jun 2025சென்னை: சென்னையில் லாரி ஏறி பள்ளி சிறுமி பலியான சம்பவத்தை அடுத்து அங்கு கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவிப்பு
19 Jun 2025டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
-
வரும் ஜூன் 24, 25-ம் தேதிகளில் அ.இ.அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Jun 2025சென்னை: வரும் 24, 25 ஆகிய நாட்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
ஈரான்-இஸ்ரேல் மோதலில் மத்தியஸ்தம் செய்ய தயார் ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு
19 Jun 2025மாஸ்கோ: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக புதின்
-
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு
19 Jun 2025லாஸ் ஏஞ்சல்ஸ்: திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ராபர்ட் புரூஸுக்கு எதிரான தேர்தல் வழக்கில் நயினார் நாகேந்திரன் ஆஜர்
19 Jun 2025சென்னை: திருநெல்வேலி தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், பா.ஜ.க.
-
சட்டவிரோத குடியேற்றம்; திருப்பூரில் 26 வங்கதேசத்தினர் கைது
19 Jun 2025திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டவிரோதமாக, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
விமான விபத்தில் பலியான 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது
19 Jun 2025அகமதாபாத்: அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியான 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
-
‘புற்றுநோய் போன்ற நாடு’ இஸ்ரேல் மீது வட கொரியா குற்றச்சாட்டு
19 Jun 2025தெஹ்ரான்: இஸ்ரேல் வான்வழி தாக்குதல் கொடூரமான செயல் என்று வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து ஆடும் லெவன் அறிவிப்பு
19 Jun 2025லண்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சோதனையின் போது வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
19 Jun 2025டெக்சாஸ்: அமெரிக்காவில் சோதனை முயற்சியின் போது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
பதிவு செய்த 15 நாட்களில் புதிய வாக்காளர் அட்டை தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை
19 Jun 2025புதுடெல்லி: இனிமேல் பதிவு செய்த புதிய வாக்காளர் அட்டையை வாக்காளர்களிடம் 15 நாட்களில் வினியோகிக்கும் வகையில் புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. 
-
இந்தியா-பாக். போர் நிறுத்தத்துக்கு இரு நாட்டு தலைவர்களே காரணம் முதல் முறையாக டிரம்ப் ஒப்புதல்
19 Jun 2025வாஷிங்டன்: “இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 தலைவர்கள் தான், இரு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலை நிறுத்தினார்கள்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்மு
-
நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
19 Jun 2025புதுடில்லி: 180 பேருடன் பயணித்த இண்டிகோ விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.