எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் நேற்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமார் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தமிழகத்தில் 76,181 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் இடம் பிடித்துள்ளனர். நெல்லையை சேர்ந்த மாணவர் எஸ்.சூர்ய நாராயணன் 99.9987779 சதவீதம் பெற்று மதிப்பெண் தரவரிசையில் 27-வது இடம் பிடித்துள்ளார். மேலும் தமிழகம் அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் தங்கள் நீட் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ வலைத்தளமான neet.nta.nic.in மூலம் தெரிந்துகொள்ளலாம். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமார் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உத்கர்ஷ் அவாதியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு மொத்தம் 2276069 பேர் நீட் தேர்வுக்கு பதிவு செய்தனர், அதில் 2209318 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 1236531 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 514063 பேர் ஆண்கள், 722462 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.
ஆண்களில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார், அவர் 99.9999547 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். பெண்களில் டெல்லியைச் சேர்ந்த அவிகா அகர்வால் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்திய அளவில் 99.9996832 சதவீத மதிப்பெண்களைப் பெற்று 5ம் இடம் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு இளநிலை நீட் தேர்வு எழுதிய 22.09 லட்சம் பேரில் 12.36 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 13.15 லட்சம் ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு குறைந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டில் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 23.33 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து இளநிலை நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதன் முடிவுகளை neet.nta.nic.in, exams.nta.ac.in ஆகிய தளங்களில் அறிந்துகொள்ளலாம். அதேபோல அனைத்து விண்ணப்பதாரர்களும் மதிப்பெண் தகவல்களை தங்களின் மின்னஞ்சல் மூலமாக தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
மேலும், மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டதன் அடிப்படையில் நீட் யுஜி 2025-க்கான இறுதி விடைக்குறிப்பையும் தேர்வெழுதியவர்கள் சரிபார்க்கலாம். இந்த தேர்வில் தகுதி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஸ் மற்றும் பிற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு நீட் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும். அதன்படி 2024 ஆம் ஆண்டில், பொதுப் பிரிவு போட்டியாளர்களுக்கான தகுதி 50% ஆகவும், ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளுக்கான தகுதி 40% ஆகவும் இருந்தது. பொது-பிடபிள்யூடி பிரிவைச் சேர்ந்த போட்டியாளர்கள் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்கள் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்-யூஜி 2025' தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது.
இந்நிலையில், நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 22,09,318 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 12,36,531 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, 1,35,715 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் 76,181 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 26,580 மாணவர்கள் தமிழ் வழி கேள்வித்தாள் மூலமாக நீட் தேர்வு எழுதினர். தமிழகத்தில் நெல்லையை சேர்ந்த மாணவர் எஸ்.சூர்ய நாராயணன் 99.9987779 சதவீதம் பெற்று மதிப்பெண் தரவரிசையில் 27-வது இடம் பிடித்துள்ளார். இதேபோல், அபிநீட் நாகராஜ் 99.9974653 சதவீதம் பெற்று 50-வது இடத்தையும், ஜி.எஸ்.புகழேந்தி 99.9972390 சதவீதம் பெற்று 61-வது இடத்தையும், கே.எஸ்.ஹிருதிக் விஜயராஜா 99.9971484 சதவீதம் பெற்று 63-வது இடத்தையும், ஏ.ஜெ.ராகேஷ் 99.9964242 சதவீதத்துடன் 78-வது இடத்தையும், ஜி.பிரஜன் ஸ்ரீவாரி 99.9958811 சதவீதம் பெற்று 88-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த வகையில், நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் இடம்பிடித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
14 Jun 2025துபாய் : துபாயில் உள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பு உள்ளது இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
-
அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்பு 274 ஆக உயர்வு
14 Jun 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-06-2025.
14 Jun 2025 -
பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
14 Jun 2025சென்னை, வீடு வழங்கும் திட்டம், மீன்வளத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பிரதமர் முகத்தைத் தாங்கி செயல்படும் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான் என முதல்வர் மு.
-
ஒடிசா: பாதுகாப்புப்படை வீரர் பலி
14 Jun 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் நக்தலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் கண்ணி வெடியில் சிக்கி பாதுகாப்புப்படை வீரர் பலியானார்.
-
ஏவுகணை வீசினால் தெஹ்ரான் எரியும்: ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
14 Jun 2025டெல் அவிவ் : ஏவுகனணகளை வீசினால் தெஹ்ரான் எரியும் என்று ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை
14 Jun 2025டெஹ்ரான் :: ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருவதை முன்னிட்டு இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
முதல்வருக்கு பழங்குடியின மாணவி ஆ.ராஜேஸ்வரி நன்றி
14 Jun 2025சென்னை : உயர்கல்விக்கு உதவிடும் வகையில் மடிக்கணினி வழங்கி, மேலும் வீடு கட்டிக்கொடுப்பதற்கான ஆணையையும் வழங்கிய முதல்வருக்கு பழங்குடியின மாணவி ஆ.ராஜேஸ்வரி நன்றி தெரிவித்த
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 78 பேர் பலி-320 பேர் படுகாயம்
14 Jun 2025இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்து உள்ளனர். 320-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
-
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
14 Jun 2025தென்காசி, குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்ததால் சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
14 Jun 2025சென்னை, தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து, ரூ.74 ஆயிரத்து 360-க்கு விற்பனை ஆன நிலையில் தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது.&nbs
-
ஈரான் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் 3 பேர் பலி
14 Jun 2025ஜெருசலேம் : இஸ்லே் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உக்ரைனில் தொடர் தாக்குதல்: மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றிய ரஷ்யா
14 Jun 2025மாஸ்கோ : உக்ரைனில் தொடர் தாக்குதல் நடந்து வருவதை முன்னிட்டு மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றியது ரஷ்யா.
-
விசைப்படகுகளுக்கு விதிக்கப்பட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு
14 Jun 2025சென்னை, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவா்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனா்.
-
எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் 5 லட்சம் பேர் தேர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
14 Jun 2025சென்னை, முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
நீட் தேர்வு முடிவு வெளியீடு: தமிழ்நாட்டில் 76,181 மாணவர்கள் தேர்ச்சி
14 Jun 2025சென்னை, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் நேற்று வெளியிடப்பட்டது.
-
விமான விபத்து: 6 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருத்தம்
14 Jun 2025காந்திநகர் : 6 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருந்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டி.என்.ஏ.
-
நீலகிரிக்கு இன்றும் ‘ரெட் அலர்ட்’ 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
14 Jun 2025சென்னை, நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 15) ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னி
-
சப்-கலெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1, குரூப்-1ஏ முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது
14 Jun 2025சென்னை, சப்-கலெக்டர், டி.எஸ்.பி.
-
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
14 Jun 2025சென்னை : காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணை வெளியீடு: மொத்தம் 210 வேலை நாட்கள்
14 Jun 2025சென்னை, நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
-
காவல் நிலையம் மீது தாக்குதல்: கடும் நடவடிக்கை எடுக்க இ.பி.எஸ். வலியுறுத்தல்
14 Jun 2025சென்னை, வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅதி.மு.க.
-
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. பிரம்மாண்ட பேரணி
14 Jun 2025திருச்சி : வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
-
10 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி - ஒரு டிரா: ஆதிக்கம் செலுத்தும் பவுமா
14 Jun 2025லண்டன் : டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
-
இஸ்ரேல் தொடர் தாக்குதல்: காசாவில் 16 பேர் பலி
14 Jun 2025காசா சிட்டி : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.