எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் நேற்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமார் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தமிழகத்தில் 76,181 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் இடம் பிடித்துள்ளனர். நெல்லையை சேர்ந்த மாணவர் எஸ்.சூர்ய நாராயணன் 99.9987779 சதவீதம் பெற்று மதிப்பெண் தரவரிசையில் 27-வது இடம் பிடித்துள்ளார். மேலும் தமிழகம் அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் தங்கள் நீட் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ வலைத்தளமான neet.nta.nic.in மூலம் தெரிந்துகொள்ளலாம். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமார் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உத்கர்ஷ் அவாதியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு மொத்தம் 2276069 பேர் நீட் தேர்வுக்கு பதிவு செய்தனர், அதில் 2209318 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 1236531 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 514063 பேர் ஆண்கள், 722462 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.
ஆண்களில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார், அவர் 99.9999547 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். பெண்களில் டெல்லியைச் சேர்ந்த அவிகா அகர்வால் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்திய அளவில் 99.9996832 சதவீத மதிப்பெண்களைப் பெற்று 5ம் இடம் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு இளநிலை நீட் தேர்வு எழுதிய 22.09 லட்சம் பேரில் 12.36 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 13.15 லட்சம் ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு குறைந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டில் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 23.33 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து இளநிலை நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதன் முடிவுகளை neet.nta.nic.in, exams.nta.ac.in ஆகிய தளங்களில் அறிந்துகொள்ளலாம். அதேபோல அனைத்து விண்ணப்பதாரர்களும் மதிப்பெண் தகவல்களை தங்களின் மின்னஞ்சல் மூலமாக தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
மேலும், மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டதன் அடிப்படையில் நீட் யுஜி 2025-க்கான இறுதி விடைக்குறிப்பையும் தேர்வெழுதியவர்கள் சரிபார்க்கலாம். இந்த தேர்வில் தகுதி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஸ் மற்றும் பிற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு நீட் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும். அதன்படி 2024 ஆம் ஆண்டில், பொதுப் பிரிவு போட்டியாளர்களுக்கான தகுதி 50% ஆகவும், ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளுக்கான தகுதி 40% ஆகவும் இருந்தது. பொது-பிடபிள்யூடி பிரிவைச் சேர்ந்த போட்டியாளர்கள் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்கள் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்-யூஜி 2025' தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது.
இந்நிலையில், நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 22,09,318 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 12,36,531 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, 1,35,715 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் 76,181 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 26,580 மாணவர்கள் தமிழ் வழி கேள்வித்தாள் மூலமாக நீட் தேர்வு எழுதினர். தமிழகத்தில் நெல்லையை சேர்ந்த மாணவர் எஸ்.சூர்ய நாராயணன் 99.9987779 சதவீதம் பெற்று மதிப்பெண் தரவரிசையில் 27-வது இடம் பிடித்துள்ளார். இதேபோல், அபிநீட் நாகராஜ் 99.9974653 சதவீதம் பெற்று 50-வது இடத்தையும், ஜி.எஸ்.புகழேந்தி 99.9972390 சதவீதம் பெற்று 61-வது இடத்தையும், கே.எஸ்.ஹிருதிக் விஜயராஜா 99.9971484 சதவீதம் பெற்று 63-வது இடத்தையும், ஏ.ஜெ.ராகேஷ் 99.9964242 சதவீதத்துடன் 78-வது இடத்தையும், ஜி.பிரஜன் ஸ்ரீவாரி 99.9958811 சதவீதம் பெற்று 88-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த வகையில், நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் இடம்பிடித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை: பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வர் கண்டனம்
12 Mar 2026சென்னை, பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வளர்ச்சியைப் பரவலாக்கி அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்: முதல்வர்
12 Mar 2026சென்னை, தமிழகத்தில் வளர்ச்சியைப் பரவலாக்கி அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம் என்றும், மாபெரும் தமிழ்க்கனவை சாத்தியப்படுத்துவோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
குற்ற வழக்கு தொடர்வு துறை தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
12 Mar 2026சென்னை, குற்ற வழக்கு தொடர்வு துறை தேர்வான 45 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
ஈரான் போர் தொடங்கிய பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து முதல்முறையாக இந்தியா வந்த எண்ணெய்க் கப்பல்
12 Mar 2026மும்பை, ஈரான் போர் தொடங்கிய பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து முதல்முறையாக சவுதி அரேபியாவில் இருந்து மும்பை துறைமுகத்துக்கு எண்ணெய்க் கப்பல் வந்தடைந்துள்ளது.
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: 2 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
12 Mar 2026ராமேஸ்வரம், ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வடக்கு மன்னார் கடற்பரப்பில் வைத்து ஒரு படகுடன் இலங்கை கடற்படை கை
-
பெட்ரோல் -டீசல் தட்டுப்பாடு என வதந்தி: எரிபொருள் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகளாள் பரபரப்பு..!
12 Mar 2026சென்னை, 3 நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியதால், அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோ
-
தமிழ்நாட்டில் பாதுகாப்பு என்பதே எங்கும் இல்லை: த.வெ.க. தலைவர் விஜய் காட்டம்
12 Mar 2026சென்னை, தமிழகத்தில் பாதுகாப்பு என்பதே எங்கும் இல்லை என்ற நிலை உள்ளதாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
விவசாயிகளின் வருமானம் தொடர்பான பிரதமர் நரேந்திரமோடியின் வாக்குறுதி என்னவானது...? அமைச்சர் ரகுபதி கேள்வி
12 Mar 2026சென்னை, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது? என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஜனநாயகன் பட ஓ.டி.டி. உரிமம் ஒப்பந்தம் ரத்தால் மேலும் சிச்கல்
12 Mar 2026சென்னை, ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமம் ஒப்பந்தத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ம
-
சென்னையில் வருகிற 15-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் இப்தார் விருந்து வழங்குகிறார் எடப்பாடி பழனிசாமி
12 Mar 2026சென்னை, சென்னையில் வருகிற 15-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி இப்தார் விருந்து வழங்குகிறார்.
-
பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற புதிய திட்டப்பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Mar 2026சென்னை, பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 44.67 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 315 புதிய திட்டப் பணிகளுக்
-
யு.ஏ.இ.-லிருந்து குஜராத் நோக்கி வந்த வர்த்தக கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
12 Mar 2026புதுடெல்லி, யு.ஏ.இ.-லிருந்து குஜராத் நோக்கி வந்த வர்த்தக கப்பல் மீதான ஈரான் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்கு - கப்பல்கள் மீது ஈரான் தொடர் தாக்குதலால் பதற்றம்
12 Mar 2026தெஹ்ரான், குவைத், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஈரானின் தொடர் தாக்குதல்களால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
-
தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை; குற்றவாளிகளை பிடிப்பதற்கு ஆறு தனிப்படைகள் அமைப்பு: நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் தகவல்
12 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் த
-
மிரட்டி, பணம் கொடுத்து வாங்க முடியாத ஒரே தலைவர் விஜய்தான்: ஆதவ் அர்ஜூனா பேச்சால் பரபரப்பு
12 Mar 2026சென்னை, எல்லாரையும் விலை கொடுத்து வாங்கலாம். எல்லாரையும் மிரட்டலாம். மிரட்டமுடியாத, பணம் கொடுத்து வாங்க முடியாது ஒரே தலைவர் என்றால் அது த.வெ.க.
-
பிரதமரையும் காணவில்லை, சிலிண்டரையும் காணவில்லை; பாராளுமன்ற வளாகத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம்
12 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற வளாகத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்த்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: சென்னையில் டீ, காபி விலை உயர்வு: மக்கள் கடும் அதிர்ச்சி
12 Mar 2026சென்னை, வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் டீ, காபி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
-
மீண்டும் சரிந்த தங்கம் விலை
12 Mar 2026சென்னை, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760-க்கு விற்பனையானது.
-
த.வெ.க. உடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கற்பனையே: எடப்பாடி பழனிசாமி மீண்டும் விளக்கம்
12 Mar 2026திருச்சி, த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது கற்பனையான ஒன்று.
-
சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் 3 நிபந்தனைகள்
12 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் 3 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
-
சமையல் கியாஸ் சிலிண்டருக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய அரசு விளக்கம்
12 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெறும் ஓ.பி.சி. தேர்வாளர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்குங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
12 Mar 2026சென்னை, அரசியலமைப்பின் சமத்துவநெறியோடு செயல்பட்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.


