முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் நடத்த திட்டமிட்டிருந்த ராகுலின் யாத்திரை ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      இந்தியா
Rahul 2024-05-12

பாட்னா, பீகாரில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் இணைந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்க திட்டமிட்டிருந்த ‘வோட் அதிகார் யாத்திரை’ ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் மரணம் இந்த ஒத்திவைப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நடைபயணத்துக்கான புதிய தேதி குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் எனவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முந்தைய திட்டத்தின்படி, ‘வோட் அதிகார் யாத்தி’-ரையின் முதல் கட்டப் பயணம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரத்தில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஆகஸ்ட் 19 ஆம் தேதி அராரியா மாவட்டத்தில் உள்ள நர்பட்கஞ்சில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி. இணைந்து ஏற்பாடு செய்த இந்த யாத்திரை, தேர்தல் ஆணையத்தின் சர்ச்சைக்குரிய சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைமுறைக்கு எதிரான நேரடி போராட்டமாகவும் திட்டமிடப்பட்டது. இந்த யாத்திரையின் போது மத்திய அரசு மற்றும் பீகாரின் நிதிஷ் குமார் அரசாங்கத்தையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து