எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதியாக கூறியுள்ளார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பிரதமர், முதல்-அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரை நீக்கும் மசோதா உள்பட 14 அரசு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் முக்கிய மசோதாவும் அடங்கும்.
இதேபோன்று, பிரதமர், முதல்-அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால், அவர்கள் பதவியை இழக்க நேரிடும் வகையிலான 130-வது திருத்த மசோதா அவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.
2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பதவிக்கு வந்தது முதல் கடந்த 11 ஆண்டுகளாக, மத்திய அமைப்புகளால் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரான விரோத மனப்போக்கு தொடர்ந்து வருகிறது. பதவியிலுள்ள முதல்-அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன என எதிர்க்கட்சிகளால் குற்றச்சாட்டாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர், முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதியாக கூறியுள்ளார்.
அது நிறைவேற்றப்படும் என நான் உறுதியாக கூறுகிறேன். காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் நல்லொழுக்கம் மற்றும் நீதிநெறி ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்று கூறியுள்ளார். இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பர் என அவர் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, பாராளுமன்றம் எப்படி செயல்படும் என ஆளுங்கட்சி மட்டுமே தனியாக முடிவு செய்ய முடியாது. எந்தவொரு மசோதா அல்லது அரசியல் சாசன திருத்தத்திலும் எதிர்க்கட்சிகள் ஆரோக்கியம் நிறைந்த விவாதத்தில் ஈடுபட வேண்டும். அந்த சூழலை உருவாக்க எதிர்க்கட்சிகள் தவறினால், இந்த நடைமுறை சரியா? இல்லையா? என நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள்.
இந்த மசோதா நிறைவேறாத சூழலில், அதனை பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்புவது என முடிவு செய்தோம். அரசும் இதனை முன்பே முடிவு செய்திருந்தது. இதன்படி, பாராளுமன்ற மக்களவையின் 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையின் 10 உறுப்பினர்கள் என இரு அவைகளை சேர்ந்த மொத்தம் 31 உறுப்பினர்கள் இந்த பாராளுமன்ற கூட்டுக்குழுவில் இடம் பெறுவார்கள் என கூறியுள்ளார்.
இதனால், எதிர்க்கட்சிகள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து அமித்ஷா கூறும்போது, ஒரு முதல்-அமைச்சரோ, பிரதமரோ அல்லது எந்தவொரு தலைவரோ சிறையில் இருந்து கொண்டு நாட்டை வழிநடத்த முடியுமா? என ஒட்டுமொத்த நாட்டையும், எதிர்க்கட்சியையும் பார்த்து நான் கேட்க விரும்புகிறேன்.
நம்முடைய ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு அது ஏற்ற ஒன்றா? என அவர் கேட்டுள்ளார். பிரதமர் மோடி அவருக்கு எதிராகவே கூட இந்த அரசியல் சாசன திருத்தத்தினை கொண்டு வந்துள்ளார். அவர் ஒருவேளை சிறைக்கு சென்றால், அவரும் கூட பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என அமித்ஷா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-08-2025.
25 Aug 2025 -
கேப்டன் பிரபாகரன் திரைவிமர்சனம்
25 Aug 2025விஜயகாந்தின் 100 வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ 34 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்.
-
இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பு ஏன்? - அமெரிக்க துணை அதிபர் விளக்கம்
25 Aug 2025நியூயார்க் : ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் விளக்கமளித்துள்ளார்.
-
6,540 அரசு பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் தீவிரம் - தமிழக அரசு
25 Aug 2025சென்னை : தமிழகம் முழுவதம் 6,540 அரசு பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மாநில அரசு சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் இதழியல் கல்வி நிறுவனத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - திறமையான பத்திரிகையாளர்களை உருவாக்க உதவும்
25 Aug 2025சென்னை : சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கிவைத்தார்.
-
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 89 பேருக்கு பணி நியமன ஆணை:: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
25 Aug 2025சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள
-
ஆட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா
25 Aug 2025தி.கிட்டு இயக்கத்தில், இயக்குநர் இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஆட்டி’.
-
ஜெகதீப் தன்கர் விவகாரம்: எதிர்க்கட்சியினருக்கு அமித்ஷா விளக்கம்
25 Aug 2025புதுடெல்லி : ஜெகதீப் தன்கர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினருக்கு அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
-
பா.ஜ.க. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 27-ந் தேதி தமிழகம் வருகை
25 Aug 2025டெல்லி, பா.ஜ.க. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிற 27-ந் தேதி தமிழகம் வருகைதர உள்ளார்.
-
பிரதமர் மோடியுடன் பிஜி பிரதமர் சந்திப்பு : இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை
25 Aug 2025புதுடெல்லி : பிரதமர் மோடியுடன் பிஜி பிரதமர் சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
-
லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறும்: நேதன்யாகு
25 Aug 2025இஸ்ரேல், லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறும் என்று நேதன்யாகு தெரிவித்தார்.
-
காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு
25 Aug 2025பாலஸ்தீனம், காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இந்த வாரம் வெளியாகும் குற்றம் புதிது இசை
25 Aug 2025ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
-
சிறந்த சண்டை இயக்குநர் விருது வென்ற ஸ்டண்ட் சில்வா
25 Aug 2025தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநரான சில்வா இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
-
வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவைகள்: மேயர் பிரியா தொடக்கி வைத்தார்
25 Aug 2025சென்னை : தமிழக அரசின் 50 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக மக்கள் பயன்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
-
துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு கன்னியாகுமரி எம்.பி. வாழ்த்து
25 Aug 2025கன்னியாகுமரி, துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்தார்.
-
அரியானா: தூய்மை பணியில் ஈடுபட்ட வெளிநாட்டினர்
25 Aug 2025குருகிராம் : நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக குறைவு
25 Aug 2025தருமபுரி, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
-
இந்திரா திரைவிமர்சனம்
25 Aug 2025போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் வசந்த் ரவி, அதீத மதுப்பழக்கம் கொண்டவராக இருக்கிறார்.
-
லண்டனில் இந்திய உணவகத்துக்கு தீ வைப்பு: 2 பேர் கைது
25 Aug 2025லண்டன், லண்டனில் உள்ள இந்திய உணவகத்திற்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது - காமேனி பேச்சு
25 Aug 2025தெஹ்ரான் : அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று காமேனி பேச்சினார். ஈரான் தலைவர் காமேனி பேசியதாவது:-
-
வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியது
25 Aug 2025சேத்தியாதோப்பு, வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியதையடுத்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
-
இந்திய கடற்படைக்கு 2 அதிநவீன போர்க்கப்பல்கள் : ராஜ்நாத் சிங் இன்று அர்ப்பணிக்கிறார்
25 Aug 2025டெல்லி : இந்திய கடற்படைக்கு புதிதாக ஐஎன்எஸ் ஹிமகிரி மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகிய 2 போர்க்கப்பல்கள் தயாராகி உள்ளன.
-
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
25 Aug 2025சென்னை : கள்ளக்குறிச்சியில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடிப்பு
25 Aug 2025தருமபுரி, மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 5 நாட்களாக முழு கொள்ளளவான 120 அடியில் நீடிக்கிறது.