முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட குடிமக்கள் உரிமை பற்றி முடிவெடுக்க கலெக்டரை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் ஆட்சியர் அதிகாரம் உள்ளிட்ட சிலி விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது.

நாட்டில் முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

மத்திய அரசு கொண்டு வந்த இந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் நேற்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை.

எனினும் வக்ஃப் ஒன்றை உருவாக்க ஒருவர் 5 ஆண்டுகள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற விதிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. ஒருவர் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிப்பதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை இந்த விதி நிறுத்தி வைக்கப்படுகிறது.  அதேபோல வக்ஃப் வாரியத்தில் அதிகபட்சமாக முஸ்லிம் அல்லாதவர்கள் 4 பேர் வரை இருக்கலாம். மாநிலத்திற்கு இது 3 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.

5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே நிலம் நன்கொடையை அளிக்கலாம் என்ற உத்தரவும் நிறுத்திவைக்கப்படுகிறது. மேலும் வக்ஃப் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்ட சில அதிகாரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்து, அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் ஆட்சியரின் அதிகாரம் நிறுத்திவைக்கப்படுகிறது.

தனிப்பட்ட உரிமைகள் பற்றி முடிவெடுக்க ஆட்சியரை அனுமதிக்க முடியாது. இது அதிகாரத்தை மீறும் செயல். தீர்ப்பாயத்தால் தீர்ப்பு வழங்கும் வரை 3 ஆம் நபருக்கு உரிமை அளிக்க முடியாது. அதேபோல வக்ஃப் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முடிந்தவரை ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம் என்று கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து