எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஏடிபி இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். யுஎஸ் ஓபனில் தோல்வியுற்றதுக்கு யானிக் சின்னர் அல்கராஸை பழிதீர்த்துள்ளார். இத்தாலியில் இனால்பி அரினா திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகின் நம்.2 வீரர் யானிக் சின்னர் 7-6 (4), 7-5 என்ற செட்களில் உலகின் நம்.1 வீரர் அல்கராஸை வீழ்த்தினார். இந்தாண்டின் சின்கராஸின் கடைசி பட்டம் யானிக் சின்னரின் பக்கம் திரும்பியுள்ளது.இந்தாண்டின் ஆஸி. ஓபன், விம்பிள்டன் கோப்பையை சின்னரும் யு.எஸ். ஓபன், பிரெஞ்சு ஓபனை அல்கராஸும் வென்றனர்.
இந்நிலையில், இந்தாண்டில் ஆறாவது முறையாக இருவரும் சந்திக்க, சின்னர் வெற்றி பெற்றார். தனது சொந்த மண்ணில் சின்னர் வெற்றி பெற்றது அதன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை இருவரும் 16 முறை மோதியிருக்க 10 முறை அல்கராஸும் 6 முறை சின்னரும் வென்றுள்ளார்கள். இறுதிப் போட்டியில் சின்னர் தொடர்ச்சியாக 10ஆவது முறையாக வென்றுள்ளார். கடைசியாக ஜோகோவிச் உடன் 2023 இறுதிப் போட்டியில் தோற்றார். உள்ளரங்கு கடின தரைப் போட்டிகளில் சின்னர் தனது 31-ஆவது வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளார்.
__________________________________________________________________________
புதிய சாதனை படைத்த பவுமா
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. இதையடுத்து, 124 என்ற எளிய இலக்கை எடுக்க முடியாமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், டெஸ்டில் பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டது. அவரது கேப்டன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்கா 10-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது. இதன்மூலம் டெஸ்டில் தோல்வியே சந்திக்காமல் அதிவேகமாக 10 வெற்றிகளைத் தேடித்தந்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
__________________________________________________________________________
ஹர்பஜன்சிங் கடும் குற்றச்சாட்டு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 93 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந்தது. 3 தினங்களில் போட்டி முடிவடைந்தது. இந்தநிலையில் ஆடுகளம் தொடர்பாக முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபோன்ற ஆடுகளங்களால் டெஸ்ட் கிரிக்கெட் அழித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன்சிங் கூறியதாவது:- டெஸ்ட் கிரிக்கெட்டை முற்றிலுமாக அழித்து விட்டார்கள். டெஸ்டுக்கு எந்த மதிப்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சமீபத்தில் இங்கிலாந்தில் நன்றாக விளையாடியதால் அனைவரும் இந்திய அணியை பாராட்டினார்கள். அங்கே பிட்ச்கள் நன்றாக இருந்த காரணத்தாலேயே இந்தியா போராடி வென்றது. ஆனால் இங்கே பந்தை போட்டால் அது எங்கேயோ சுழன்று செல்லும் அளவுக்கு ஆடுகளம் தரமற்றதாக இருக்கிறது. அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக தெரியவில்லை. இந்த நடைமுறை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது தவறான விளையாட்டு முறை. இது போன்ற ஆடுகளங்கள் வீரர்களை முன்னேற அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
__________________________________________________________________________
ஆர்.சி.பி. அணியை வாங்க ஆர்வம்
நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் அதானி குழுமமும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் ஆர்சிபி அணியை வாங்க முன்வந்துள்ளது. அதாவது பிற நிறுவனங்களுடன் இணைந்து ஆர்சிபி அணியை வாங்கி இணை உரிமையாளராக மாற ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
__________________________________________________________________________
தொடரை வென்றது பாகிஸ்தான்
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக வென்ற அசத்தியுள்ளது. பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகள், முத்தரப்பு டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதன்படி நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் வென்றிருக்க, நேற்று கடைசி போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச, இலங்கை அணி 45.2 ஓவர்களில் 211 ரன்களில் ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக இலங்கை வீரர் சமரவிக்ரமாக 48 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜூனியர் 3, பைசல் அக்ரம், ஹாரிஸ் ரௌஃப் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்களில் 214/5 ரன்கள் எடுத்து வென்றது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 61, ஃபகர் ஸமான் 55 ரன்களும் எடுத்தார்கள். இலங்கை சார்பில் ஜெஃப்ரி வண்டெர்ஸி 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் தொடரினை பாகிஸ்தான் அணி 3-0 என வென்று அசத்தியுள்ளது. கடைசி போட்டியின் ஆட்ட நாயகனாக முகமது வாசிம் ஜூனியரும் தொடர் நாயகனாக ஹாரிஸ் ரௌஃபும் தேர்வானார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம்: சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
11 Dec 2025சென்னை, தமிழகத்தில் விடுப்பட்ட மகளிருக்கு 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
தமிழ் கவிஞர் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
11 Dec 2025சென்னை, தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்திப்பு
11 Dec 2025சென்னை, சென்னையில் த.வெ.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசி கொண்டனர்.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
11 Dec 2025புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
கூட்டணி விவகாரத்தில் விஜய்க்கு முழு அதிகாரம்: த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள்
11 Dec 2025சென்னை, த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
திபெத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
11 Dec 2025பீஜிங், திபெத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4, 5 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் பிணையப் பத்திரங்கள் ஏலம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
11 Dec 2025சென்னை, ரூ.5000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் விடுவதா தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாளை உண்ணாவிரதம்: நிபந்தனைகளுடன் ஐகோர்ட் கிளை அனுமதி
11 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தை தொடர்ந்து வருகிற 13-ம் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு மதுரை கிளை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? பி.டி.செல்வகுமார் விளக்கம்
11 Dec 2025சென்னை, நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வக்குமார்.
-
தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்க வாய்ப்பு உள்ளது: திருமாவளவன்
11 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்கிற வாய்ப்பு உள்ளது நாடாளுமன்றத்தில் திருமாவளவன் தெரிவித்தார்.
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
11 Dec 2025சென்னை, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் உக்ரைனில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்: அதிபர் ட்ரம்புக்கு ஜெலன்ஸ்கி பதிலடி
11 Dec 2025கீவ், உக்ரைனில் தேர்தலை நடத்தாமல் இருக்க போரை நடத்துகிறார் ஜெலன்ஸ்கி என்று அதிபர் ட்ரம்ப் கடுமையாக தாக்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தா
-
டிசம்பர் 14 முதல் பா.ம.க.வில் விருப்ப மனுக்கள் விநியோகம்: அன்புமணி அறிவிப்பு
11 Dec 2025சென்னை, வருகிற 14-ம் தேதி முதல் பா.ம.க.வில் விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என்று அன்புமணி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஐ.நா. ரூ.316 கோடி நிதியுதவி
11 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.316 கோடி நிதியுதவி அளிக்க உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 1.50 லட்சம் ஈ.வி.எம். சரிபார்ப்பு பணி துவக்கம்
11 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் 1.50 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பு பணி நேற்று முதல் தொடங்கியது.
-
தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப வழங்க 3 நாட்கள் கால அவகாசம்: வரும் 14-ம் தேதி வரை வழங்கலாம் - தேர்தல் ஆணையம்
11 Dec 2025சென்னை, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப வழங்க காலஅவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 Dec 2025சென்னை, சுப்ரியா சாகுவின் பணிகள் தொடர ஐ.நா. விருது பெரும் ஊக்கமாக அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
டி-20 கிரிக்கெட் போட்டி: 100 விக்கெட்களை எடுத்து ஹர்திக் புதிய மைல்கல்
11 Dec 2025நியூ சண்டிகர், டி-20 கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்களை எடுத்து ஹர்திக் பாண்ட்யா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
அபார வெற்றி...
-
வெண்கலம் வென்றது இந்தியா
11 Dec 2025சென்னை, 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டி சென்றது.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக போராட பெண்களுக்கு மம்தா அழைப்பு
11 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) குறித்து கடுமையாக விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான
-
கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: மக்களவையில் தி.மு.க. கோரிக்கை
11 Dec 2025புதுடெல்லி, கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் தி.மு.க. எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
-
2026 சட்டப்பேரவை தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட டிசம்பர் 15 முதல் விருப்ப மனு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
11 Dec 2025சென்னை, 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வரும் 15-ம் தேதி முதல் விருப்ப மனு வினியோகப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



