முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஒட்டகம் தன் உடலுக்குள் நீரை சேமிப்பது உண்மையா

Image Unavailable

ஒட்டகங்களை பற்றிய கட்டுக்கதைகளில் ஒன்று, அது கிடைக்கும் போது நீரை பருகிவிட்டு, உடலின் ஒரு பகுதியில் சேமித்து வைத்துக் கொள்கிறது என்பதுதான் அது. ஆனால் அறிவியல் பூர்வமான உண்மை அதுவல்ல. அது நீண்ட காலம் நீரை குடிக்காமல் கொளுத்தும் பாலைவனத்தில் சமாளிப்பதற்கு காரணம் அதன் ரத்ததில் உள்ள ஓவல் வடிவ ரத்த அணுக்கள் தான். மேலும் இவை 240 சதவீதம் வரை விரிவடையும் தன்மை கொண்டவையும் கூட. மற்ற உயிரினங்களுக்கு 150 சதவீதம் வரை மட்டுமே விரிவடையும். மேலும் இவை உடலில் நீரிழப்பு ஏற்பட்டு ரத்தம் அடர்த்தியானாலும் அதில் நீந்தி சென்று ஆக்ஸிசனை ரத்த நாளங்களுக்கு கொண்டு செல்லும் திறன் பெற்றுள்ளன. எனவே ஒட்டகம் தனது எடையில் 40 சதவீதம் வரை நீரிழப்பை சமாளிக்கிறது. இது தான் ஒட்டகம் நீண்ட நாள்களுக்கு நீர் குடிக்காமல் சமாளிப்பதன் ரகசியம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்