முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் இந்திய அதிகாரிக்கு அபராதம்

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 26 ​- அமெரிக்காவில் வேலைக்கார பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய இந்திய அதிகாரிக்கு ரூ. 7 கோடியே 35 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் வசிப்பவர் இந்திய தூதரக அதிகாரி நீனா மல்ஹோத்ரா. இவரும், இவரது கணவர் ஜோகேஷூம் சேர்ந்து தங்களது வீட்டில் வேலை பார்த்த இந்திய பெண் சாந்தியின் பாஸ்போர்ட், விசாவை பறித்து வைத்து கொண்டு ஊதியமும் கொடுக்காமல் வேலை வாங்கினார்களாம். தங்களுக்கு தெரியாமல் தப்பித்து வெளியே சென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டலும் விடுத்தார்களாம். இது போன்று மிரட்டி கடந்த 3 ஆண்டுகளாக வீட்டு சிறையில் வைத்துள்ளனர். அங்கிருந்து வெளியேறிய சாந்தி, அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த 2010 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதற்காக மல்ஹோத்ரா, ரூ. 7 கோடியே 35 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் மூத்த இந்திய அதிகாரிக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானதாக உள்ளதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்