முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாடு சென்ற சோனியா டெல்லி திரும்பினார்

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 6 - வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நேற்று தலைநகர் டெல்லி திரும்பியதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி தெரிவித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியாகாந்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வெளிநாடு சென்றார். ஆனால் அவருக்கு என்ன நோய் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சோனியா, கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு சுமார் ஒரு மாத காலம் தங்கியிருந்து அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின. கட்சி விவகாரங்களை அவரது மகன் ராகுலும், மூன்று மூத்த அமைச்சர்களும் கவனித்துக்கொண்டனர். பின்னர் சோனியா நாடு திரும்பினார். தற்போது மீண்டும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக கடந்த 28 ம் தேதி சோனியாகாந்தி வெளிநாடு சென்றார். அங்கு பரிசோதனை முடிந்தபிறகு நேற்று அவர் நலமுடன் தாயகம் திரும்பியதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி தெரிவித்தார். 

அறுவை சிகிச்சை செய்துகொண்ட 6 மாதங்களுக்கு பிறகு அவர் மீண்டும் வெளிநாடு சென்று டெல்லி திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்