முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வையம்பட்டி அருகே பரிதாபம் கார் தடுப்புக்கட்டையில் மோதிய விபத்தில் 4 பேர் சாவு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

வையம்பட்டி, ஏப்.- 8 - மணப்பாறை அருகே நாய் குறுக்கே வந்ததால் தடுப்புக்கட்டையில் மோதிய கார் தலைக்குப்புற கவிழ்ந்ததில் மருந்துக்கடை அதிபர், அவரது மகன் மருமகள் உள்பட 4 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் மாதவன் (73), மெடிக்கல்  வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி விஜ​யலெட்சுமி (68), இவர்களது மகன் மதன்குமார் (36), இவருக்கும், சக்திதேவி (28) என்ற பெண்ணிற்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று திருச்சியில் உள்ள ஒரு உறவினர் வீட்டு நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக மாதவன் தனது மனைவி விஜயலெட்சுமி, மகன் மதன்குமார், மருமகள் சக்திதேவி, தனது அண்ணன் மகன் கணேஷ்பாபு (37) அவரது மனைவி சாந்தி (35) ஆகியோருடன் ஒரு காரில் திருச்சிக்கு வந்தார். பின்னர் நிச்சயதார்த்த விழாவை முடித்து கொண்டு மீண்டும் அனைரும் காரில் நிலக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கார் மணப்பாறையை அடுத்து வையம்பட்டி அருகே வந்தபோது குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது. நாய் மீது காரை மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.  இதில் சம்பவ இடத்திலேயே மாதவன், அவவது மகன்மதன்குமார், மருமகள் சக்திதேவி ஆகியோர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் படுகாயமடைந்த கணேஷ்பாபு, சாந்தி, விஜயலெட்சுமி ஆகியோர் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே சாந்தியும் பரிதாபமாக இறந்தார். பின்னர் விஜயலெட்சுமியும், கணேஷ்பாபுவும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த டி.எஸ்.பி.மீனா,  இன்ஸ்பெக்டர் அதிவீரராமபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல மணப்பாறை அருகே உள்ள கோவில்பட்டி தெற்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பக்கவுண்டர். இவரது மனைவி நல்லம்மாள் (61). இவர் நேற்று காலை வீட்டிற்கு அருகே உள்ள சாலையோரத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் விரைந்து சென்று நல்லம்மாளின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நேற்று அதிகாலை நல்லம்மாள் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நல்லம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்