எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.9 - ஆசிய வளர்ச்சி வங்கி உதவியின் கீழ் ரூ.450 கோடி செலவில் 2 சுற்றுலா திட்டங்கள் அமுல்படுத்த மாநில சுற்றுலா வழிபடுத்தும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டு முதலீட்டு திட்டத்தின் மாநில அளவிலான வழிப்படுத்தும் குழுவின் முதல் கூட்டம், நேற்று (8.8.2012) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவி திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நான்கு மாநிலங்களில் (பஞ்சாப், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் தமிழ்நாடு) தமிழகம் மட்டுமே தென் இந்தியாவில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் வாயிலாக, விரிவான பொருளாதார மேம்பாடு, உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் அளித்தல் ஆகியவை இந்த முதலீட்டுத் திட்டத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இயற்கை மற்றும் பண்பாட்டு வளங்களை பாதுகாத்திடவும், வளர்த்திடவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே ஆணையிட்டு இருந்தார்.
நேற்று 8.8.2012 காலை 11.30 மணியளவில் சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா தலைமையில் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உள்ளிட்ட இத்திட்டத்தின் மாநில அளவிலான வழிப்படுத்தும் குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் குழு உறுப்பினர்களான அரசு தலைமைச் செயலாளர், அரசு முதன்மைச் செயலாளர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, முதன்மைச் செயலாளர்/ சுற்றுலா ஆணையர் மற்றும் இக்குழுவில் உறுப்பினராக உள்ள இதர அரசு துறைச் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த உறுப்பினர்கள் அனைவரையும் அரசு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் வரவேற்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா இத்திட்டம் இரண்டு பெரிய சுற்றுலா சுற்றுக்களை உள்ளடக்கியது என்று தெரிவித்துள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலை சுற்றுலாச் சுற்று ( ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய சுற்று) இச்சுற்று காஞ்சிபுரம், கடலுர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். தென்னக சுற்றுலாச் சுற்று ( ஆன்மீகம் மற்றும் சுற்றுச் சூழல் சுற்று) இச்சுற்று புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, இராமநாதபுரம், திருநெல்வேலி, துத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி திட்டத்தின்கீழ் , அடிப்படை வசதிகளின் தரம் உயர்த்தப்படுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் ஆசிய வளர்ச்சி வங்கியின் மொத்த ஒதுக்கீடு உத்தேசமாக ரூபாய் 450 கோடியாகும். இத்திட்டத்தின் முதற்கட்டமாக, கிழக்கு கடற்கரை சாலை சுற்றுலா சுற்றும், அதனைத் தொடர்ந்து தென்னக சுற்றுலா சுற்றும் எடுத்துக்கொள்ளப்படும். ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் மூலம் பின்வரும் இலக்குகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் வளரும் சுற்றுலாத் தலங்களில் மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற அடிப்படை வசதிகள் மற்றும் இதர சேவைகளை மேம்படுத்துதல், சுற்றுலாத்தலங்களில் மேம்படுத்தப்பட்ட சாலை தொடர்பு வசதிகளை கடைசி இலக்குவரை மேம்படுத்துத்தல், சுற்றுலாப் பயணிகளின் வசதிகள் மற்றும் பாதுகாப்புகளுக்காக சுற்றுலாத் தலங்களில் இயற்கை மற்றும் கலாச்சார சுற்றுலாப் கவர்ச்சிகளை தரம் உயர்த்துதல், சுற்றுலா தொடர்பான பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் உள்ளூர்வாசிகளின் மிகப் பெரிய பங்களிப்பை ஊக்குவித்தல், சுற்றுலா திட்டங்களை நிறைவேற்றும் முகமைகளின் திறனை விரிவாக்குதல், திட்ட வளர்ச்சி மற்றும் மேலாண்மையில் சமூக பங்கேற்பு, கவர்ச்சிக்கர சுற்றுலாத் தலங்ககள வர்த்தகப்படுத்துதல் மற்றும் சிறுவியாபாரம் மற்றும் தனியார்துறை பங்கேற்பை மேம்படுத்துதல்.
கீழ்கண்டவைகளுக்கு மாநில அளவிலான வழிப்படுத்தும் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து வசதிகளுடன் சென்னையில் திட்ட மேலாண்மை அலுவலகம் அமைத்தல், நாகப்பட்டினம் மாவட்டம், nullம்புகாரில் திட்ட செயலாக்க அலுவலகம் அமைத்தல்.
இத்திட்டத்திற்காக திட்ட மேலாண்மை ஆலோசகர், வடிவமைப்பு மற்றும் மேற்பார்வை ஆலோசகர் ஆகியோரை நியமிப்பதற்கு தமிழக சுற்றுலாத்துறைக்கு இக்குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை உரிய காலத்திற்குள் விரைவில் செயற்படுத்திட தமிழக சுற்றுலாத்துறைக்கு இக்குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை அமைச்சர் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் இத்திட்டத்தின் முதற்கட்ட பணியினை உடனடியாக துவங்கி வேகமாக செய்திட சுற்றுலாத்துறையை அறிவுறுத்தினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
யுவராஜ் சிங் மீண்டும் கேப்டன்
04 Jul 2025ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது.
-
செஸ் விளையாடவே பிடிக்கவில்லை: குகேஷிடம் தோற்ற கார்ல்சென் விரக்தி
04 Jul 2025சாக்ரப் : தற்போதைக்கு தனக்கு செஸ் விளையாடவே பிடிக்கவில்லை என்று உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்சென் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்
05 Jul 2025சென்னை : சர்வதேச விண்வெளி மையத்தை இன்று இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் எஸ்.பி. ஆய்வு
05 Jul 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு நடத்தினார்.
-
வா.மு.சேதுராமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
05 Jul 2025சென்னை, பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே
05 Jul 2025மும்பை, மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே பங்கேற்றனர்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே
05 Jul 2025மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.