எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.9 - ஆசிய வளர்ச்சி வங்கி உதவியின் கீழ் ரூ.450 கோடி செலவில் 2 சுற்றுலா திட்டங்கள் அமுல்படுத்த மாநில சுற்றுலா வழிபடுத்தும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டு முதலீட்டு திட்டத்தின் மாநில அளவிலான வழிப்படுத்தும் குழுவின் முதல் கூட்டம், நேற்று (8.8.2012) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவி திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நான்கு மாநிலங்களில் (பஞ்சாப், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் தமிழ்நாடு) தமிழகம் மட்டுமே தென் இந்தியாவில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் வாயிலாக, விரிவான பொருளாதார மேம்பாடு, உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் அளித்தல் ஆகியவை இந்த முதலீட்டுத் திட்டத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இயற்கை மற்றும் பண்பாட்டு வளங்களை பாதுகாத்திடவும், வளர்த்திடவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே ஆணையிட்டு இருந்தார்.
நேற்று 8.8.2012 காலை 11.30 மணியளவில் சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா தலைமையில் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உள்ளிட்ட இத்திட்டத்தின் மாநில அளவிலான வழிப்படுத்தும் குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் குழு உறுப்பினர்களான அரசு தலைமைச் செயலாளர், அரசு முதன்மைச் செயலாளர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, முதன்மைச் செயலாளர்/ சுற்றுலா ஆணையர் மற்றும் இக்குழுவில் உறுப்பினராக உள்ள இதர அரசு துறைச் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த உறுப்பினர்கள் அனைவரையும் அரசு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் வரவேற்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா இத்திட்டம் இரண்டு பெரிய சுற்றுலா சுற்றுக்களை உள்ளடக்கியது என்று தெரிவித்துள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலை சுற்றுலாச் சுற்று ( ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய சுற்று) இச்சுற்று காஞ்சிபுரம், கடலுர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். தென்னக சுற்றுலாச் சுற்று ( ஆன்மீகம் மற்றும் சுற்றுச் சூழல் சுற்று) இச்சுற்று புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, இராமநாதபுரம், திருநெல்வேலி, துத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி திட்டத்தின்கீழ் , அடிப்படை வசதிகளின் தரம் உயர்த்தப்படுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் ஆசிய வளர்ச்சி வங்கியின் மொத்த ஒதுக்கீடு உத்தேசமாக ரூபாய் 450 கோடியாகும். இத்திட்டத்தின் முதற்கட்டமாக, கிழக்கு கடற்கரை சாலை சுற்றுலா சுற்றும், அதனைத் தொடர்ந்து தென்னக சுற்றுலா சுற்றும் எடுத்துக்கொள்ளப்படும். ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் மூலம் பின்வரும் இலக்குகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் வளரும் சுற்றுலாத் தலங்களில் மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற அடிப்படை வசதிகள் மற்றும் இதர சேவைகளை மேம்படுத்துதல், சுற்றுலாத்தலங்களில் மேம்படுத்தப்பட்ட சாலை தொடர்பு வசதிகளை கடைசி இலக்குவரை மேம்படுத்துத்தல், சுற்றுலாப் பயணிகளின் வசதிகள் மற்றும் பாதுகாப்புகளுக்காக சுற்றுலாத் தலங்களில் இயற்கை மற்றும் கலாச்சார சுற்றுலாப் கவர்ச்சிகளை தரம் உயர்த்துதல், சுற்றுலா தொடர்பான பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் உள்ளூர்வாசிகளின் மிகப் பெரிய பங்களிப்பை ஊக்குவித்தல், சுற்றுலா திட்டங்களை நிறைவேற்றும் முகமைகளின் திறனை விரிவாக்குதல், திட்ட வளர்ச்சி மற்றும் மேலாண்மையில் சமூக பங்கேற்பு, கவர்ச்சிக்கர சுற்றுலாத் தலங்ககள வர்த்தகப்படுத்துதல் மற்றும் சிறுவியாபாரம் மற்றும் தனியார்துறை பங்கேற்பை மேம்படுத்துதல்.
கீழ்கண்டவைகளுக்கு மாநில அளவிலான வழிப்படுத்தும் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து வசதிகளுடன் சென்னையில் திட்ட மேலாண்மை அலுவலகம் அமைத்தல், நாகப்பட்டினம் மாவட்டம், nullம்புகாரில் திட்ட செயலாக்க அலுவலகம் அமைத்தல்.
இத்திட்டத்திற்காக திட்ட மேலாண்மை ஆலோசகர், வடிவமைப்பு மற்றும் மேற்பார்வை ஆலோசகர் ஆகியோரை நியமிப்பதற்கு தமிழக சுற்றுலாத்துறைக்கு இக்குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை உரிய காலத்திற்குள் விரைவில் செயற்படுத்திட தமிழக சுற்றுலாத்துறைக்கு இக்குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை அமைச்சர் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் இத்திட்டத்தின் முதற்கட்ட பணியினை உடனடியாக துவங்கி வேகமாக செய்திட சுற்றுலாத்துறையை அறிவுறுத்தினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 4 sec ago |
ஆனியன்ப்ரை5 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
வாக்குச்சாவடியில் வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. திருப்பித்தாக்கியதால் பரபரப்பு
13 May 2024தெனாலி : ஆந்திர மாநிலத்தில் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த எம்எல்ஏவை வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார்.
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
உடல் நலக்குறைவால் நாகை எம்.பி. காலமானார்
13 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.
-
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தென் இந்திய மாநிலங்கள் முன்னிலை : உத்தரபிரதேசம் கடைசி இடம்
13 May 2024புதுடெல்லி : சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
-
நான் உயிரோடு இருக்கும்வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்
13 May 2024பாட்னா : பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், "நான் உயிருடன் இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது" என பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.
-
3 டன் மலர்களை கொண்டு திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம்
13 May 2024திருப்பதி, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் 3 டன் மலர்களால் உற்சவர்கள் சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது.
-
பெண்ணை கடத்திய வழக்கு: ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கியது பெங்களூரு கோர்ட்
13 May 2024பெங்களூரு, பெண்ணை கடத்திய வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ ரேவண்ணாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
-
அடுத்த சுற்றில் போபண்ணா ஜோடி
13 May 2024களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
-
மெட்ரோ ஊழியர் மீது தாக்குதல்: பின்னணி பாடகர் வேல்முருகன் கைது
13 May 2024சென்னை, மெட்ரோ ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாக பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
வெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
13 May 2024புதுடெல்லி, தேர்தல் பிரசாரத்தின் போது மத வெறு்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய
-
உங்கள் குடும்ப சூழ்நிலைகளை மாற்ற இன்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : சோனியா காந்தி வேண்டுகோள்
13 May 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணிக்கு வாக்களித்து உங்கள் குடும்பச் சூழ்நிலைகளை மாற்றிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ள சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் 'உத்தரவாதம்' பெண்க
-
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா டெல்லி அணி? - லக்னோவை இன்று எதிர்கொள்கிறது
13 May 2024புதுடெல்லி : 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்குமா? என்ற நிலையில் இன்று லக்னோ அணியை எதிர்கொள்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
14 May 2024