எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, ஏப்.- 5 - கிரானைட் கற்களை வெட்டியெடுக்க முயற்சிசெய்த மு.க.அழகிரியின் திட்டம் முறியடிக்கப்பட்டு ஒத்தக்கடை யானைமலை காப்பாற்றப்படும். அந்தப் பகுதியில் உள்ள மக்களை காப்பாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அய்யர்பங்களாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உறுதியளித்தார். மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள அய்யர்பங்களாவில் நேற்று மாலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பேசியதாவது:- தமிழ்நாட்டை ஏகபோகமாக கொள்ளையடித்துவரும் ஒரு குடும்ப கும்பலிடம் இருந்து மீட்டு தமிழகத்தை காப்பாற்ற வரும் தேர்தல் ஒரு முக்கிய கருவியாக உள்ளது. இதனை பயன்படுத்தி நீங்கள் கருணாநிதியின் கொள்ளைக் கும்பலுக்கு முடிவுகட்டவேண்டும். கருணாநிதி தமிழகத்தை சூறையாடி உலக பெரும் பணக்காரர்களாக தனது குடும்பத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளார். அண்மையில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கருணாநிதி பேரன் கலாநிதி மாறன் 310 வது இடத்தில் உள்ளார் என்று செய்தி வெளியாகி உள்ளது. ஒரு பேரனுக்கு மட்டும் இந்த அளவுக்கு சொத்து இருந்தால், கருணாநிதியின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு உள்ள சொத்துக்களை கணக்கிட்டால் உலகின் மிகப்பெரிய பணக்கார குடும்பம் கருணாநிதியின் குடும்பமாகத்தான் இருக்கும். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் தனது குடும்ப வளர்ச்சிக்காக திட்டம் தீட்டி ஆட்சியை நடத்திவரும் கருணாநிதிக்கு இந்த தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
மக்கள் பணத்தை சுரண்டி ஒரு ரவுடி சாம்ராஜ்யம் நடத்தி பல கோடி ஊழல் செய்து, சம்பாதித்துவரும் கருணாநிதியையும், அவரது தேச விரோத சக்திகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் இந்த தேர்தல் மூலம் நீங்கள் வீழ்த்தவேண்டும். பொருளாதார வளர்ச்சியிலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிலும் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகத்தை இப்போது கருணாநிதி பின்னோக்கி தள்ளிவிட்டார். தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடி கடன் சுமை என்பதுதான் கருணாநதி ஆட்சியின் சாதனையாக உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெறும்.
இந்த பகுதிவாழ் மக்களுக்கு பயன்பட்டு வரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு இந்த பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். ஒத்தக்கடை யானைமலையை உடைத்து சிற்பநகரம் உருவாக்குகிறோம் என்று கூறி, அதிலுள்ள கிரானைட் கற்களை வெட்டியெடுக்க கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் கும்பல் முயற்சி செய்துவருவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. எனவே அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், மு.க.அழகிரியின் முயற்சி முறியடிக்கப்பட்டு யானைமலை காப்பாற்றப்படும். அங்குள்ள மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இப்பகுதிவாழ் மக்களுக்கு உள்ள அடிப்படை வசதிகள், பிரச்சனைகள் உடனடியாக தீர்த்துவைக்கப்படும். ஒரு ரவுடி கும்பல் தமிழ்நாட்டை அடக்கி ஆள்வதற்கு இந்த தேர்தலில் நீங்கள் முற்றுப்புள்ளி வைத்திட அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மதுரை கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.தமிழரசன், திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.முத்துராமலிங்கம், மேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சாமி, சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வி.கருப்பையா ஆகியோருக்கு எம்.ஜி.ஆர்.கண்ட சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன். திருப்பரங்குன்றம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.கே.டி.ராஜாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மதுரை கிழக்கு தொகுதிக் கழக செயலாளர் மா.இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் கருப்பணன், மேற்கு ஒன்றியக்கழக செயலாளர் முருகேசன், வழக்கறிஞர் கோபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
09 Jul 2025புதுடில்லி : தலைநகர் டில்லியில் உள்ள வீட்டில், தீயில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்
-
லார்ட்ஸ் மைதானம் - ஒரு பார்வை
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே இன்று 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள நிலையில் லார்ட்ஸ் மைதானம் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்.
-
210 தொகுதிகளில் வெற்றி குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள்: இ.பி.எஸ். குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி பதில்
09 Jul 2025கரூர் : தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி சொல்வதை, மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளா
-
அணிக்கு திரும்பினார் ஜோப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: மனம் திறந்த விராட் கோலி
09 Jul 2025லண்டன் : இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி.
-
இது அவரின் ஹனிமூன் காலம்: சுப்மன் கில் குறித்து கங்குலி
09 Jul 2025மும்பை : இது அவருடைய ஹனிமூன் காலம்.
-
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி? 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 3-வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-07-2025.
10 Jul 2025