எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஏப்.- 5 - கிரானைட் கற்களை வெட்டியெடுக்க முயற்சிசெய்த மு.க.அழகிரியின் திட்டம் முறியடிக்கப்பட்டு ஒத்தக்கடை யானைமலை காப்பாற்றப்படும். அந்தப் பகுதியில் உள்ள மக்களை காப்பாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அய்யர்பங்களாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உறுதியளித்தார். மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள அய்யர்பங்களாவில் நேற்று மாலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பேசியதாவது:- தமிழ்நாட்டை ஏகபோகமாக கொள்ளையடித்துவரும் ஒரு குடும்ப கும்பலிடம் இருந்து மீட்டு தமிழகத்தை காப்பாற்ற வரும் தேர்தல் ஒரு முக்கிய கருவியாக உள்ளது. இதனை பயன்படுத்தி நீங்கள் கருணாநிதியின் கொள்ளைக் கும்பலுக்கு முடிவுகட்டவேண்டும். கருணாநிதி தமிழகத்தை சூறையாடி உலக பெரும் பணக்காரர்களாக தனது குடும்பத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளார். அண்மையில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கருணாநிதி பேரன் கலாநிதி மாறன் 310 வது இடத்தில் உள்ளார் என்று செய்தி வெளியாகி உள்ளது. ஒரு பேரனுக்கு மட்டும் இந்த அளவுக்கு சொத்து இருந்தால், கருணாநிதியின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு உள்ள சொத்துக்களை கணக்கிட்டால் உலகின் மிகப்பெரிய பணக்கார குடும்பம் கருணாநிதியின் குடும்பமாகத்தான் இருக்கும். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் தனது குடும்ப வளர்ச்சிக்காக திட்டம் தீட்டி ஆட்சியை நடத்திவரும் கருணாநிதிக்கு இந்த தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
மக்கள் பணத்தை சுரண்டி ஒரு ரவுடி சாம்ராஜ்யம் நடத்தி பல கோடி ஊழல் செய்து, சம்பாதித்துவரும் கருணாநிதியையும், அவரது தேச விரோத சக்திகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் இந்த தேர்தல் மூலம் நீங்கள் வீழ்த்தவேண்டும். பொருளாதார வளர்ச்சியிலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிலும் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகத்தை இப்போது கருணாநிதி பின்னோக்கி தள்ளிவிட்டார். தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடி கடன் சுமை என்பதுதான் கருணாநதி ஆட்சியின் சாதனையாக உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெறும்.
இந்த பகுதிவாழ் மக்களுக்கு பயன்பட்டு வரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு இந்த பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். ஒத்தக்கடை யானைமலையை உடைத்து சிற்பநகரம் உருவாக்குகிறோம் என்று கூறி, அதிலுள்ள கிரானைட் கற்களை வெட்டியெடுக்க கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் கும்பல் முயற்சி செய்துவருவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. எனவே அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், மு.க.அழகிரியின் முயற்சி முறியடிக்கப்பட்டு யானைமலை காப்பாற்றப்படும். அங்குள்ள மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இப்பகுதிவாழ் மக்களுக்கு உள்ள அடிப்படை வசதிகள், பிரச்சனைகள் உடனடியாக தீர்த்துவைக்கப்படும். ஒரு ரவுடி கும்பல் தமிழ்நாட்டை அடக்கி ஆள்வதற்கு இந்த தேர்தலில் நீங்கள் முற்றுப்புள்ளி வைத்திட அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மதுரை கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.தமிழரசன், திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.முத்துராமலிங்கம், மேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சாமி, சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வி.கருப்பையா ஆகியோருக்கு எம்.ஜி.ஆர்.கண்ட சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன். திருப்பரங்குன்றம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.கே.டி.ராஜாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மதுரை கிழக்கு தொகுதிக் கழக செயலாளர் மா.இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் கருப்பணன், மேற்கு ஒன்றியக்கழக செயலாளர் முருகேசன், வழக்கறிஞர் கோபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
சர்வதேச ஒருநாள், டி- 20 கிரிக்கெட்: விராட் கோலி உலக சாதனை
25 Oct 2025சிட்னி: சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்தன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித்
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
25 Oct 2025சென்னை: 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
-
பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு
25 Oct 2025கோபால்கஞ்ச்: பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு தெரிவித்தார்.
-
பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் சென்னை மாநகராட்சி தகவல்
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
தாய்லாந்து ராணி காலமானார்
25 Oct 2025பாங்காக்: தாய்லாந்து ராணி காலமானார் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
-
தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு
25 Oct 2025சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2025.
25 Oct 2025 -
விபத்தில் உயிர் தப்பிய உ.பி. அமைச்சர்
25 Oct 2025பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில் விபத்தில் இருந்து அமைச்சர் பேபி ராணி உயிர் தப்பினார்.
-
சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம்: டெண்டர் கோரியது தமிழக அரசு
25 Oct 2025சென்னை: சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியது.
-
டெல்டா மாவட்டங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
-
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்
25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
-
சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ.
-
நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு
25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம்: மேற்குவங்கத்தில் டாக்டர்கள் போராட்டம்
25 Oct 2025மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம் குறித்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
மோன்தா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Oct 2025சென்னை: மோன்தா புயலால் தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.


