முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தீயாக பரவிய மெகந்தி பீதி - மக்கள் அவதி

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.21 -  மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்துக் கொண்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைவார்கள், தோல் வியாதி ஏற்படும், கை, கால்கள் பாதிக்கப்பட்டு அவற்றைத் துண்டிக்கும் நிலை ஏற்படும் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு பெண்களும், குழந்தைகளும் படையெடுத்து வந்தனர்.

நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.. இதையொட்டி பெண்களும், குழந்தைகளும் கைகள் மற்றும் கால்களில் மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்து அலங்கரித்துக் கொண்டனர். பெரும்பாலானோர் கோன் வடிவில் உள்ள ரெடிமேட் மெஹந்தியால் அலங்காரம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், மெகந்தி போட்டவர்களுக்கு கைகளில் அரிப்பு ஏற்படுவதாகவும், வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் செய்தி பரவியது. இதனால் பீதி அடைந்த பெண்கள் அச்சத்துடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகினர்.

பண்டிகையையொட்டி வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, சென்னை புளியந்தோப்பு பகுதிகளில் மருதாணி, மெஹந்தி வைத்த பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல் பரவியது.

காட்டுத்தீயாய் பரவிய இந்த தகவல் ஒரு சில மணி நேரத்தில் கோவை, மேட்டுப்பாளையம், தாராபுரம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவியது. ரம்ஜான் பண்டிகைக்காக பெண்கள், குழந்தைகள் யாரும் மெஹந்தி, மருதாணி வைக்க வேண்டாம். அதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்பதுதான் இந்த அறிவிப்பு. இதைக் கேட்டதும் ஏற்கனவே கைகளில் மருதாணி வைத்தவர்கள் பயத்தில் உறைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில பெண்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் மெகந்தி பீதியினால் அச்சமடைந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மருத்துவமனையில் குவிந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் சிகிக்கை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணற நேரிட்டது. திருப்nullர் மாவட்டத்தில் பரவிய பீதியால் விடிய விடிய பெண்களும், குழந்தைகளும் தூங்காமல் அச்சத்துடன் விழித்திருந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீயாக பரவிய வதந்தியால் இஸ்லாமிய மக்கள் பெரும் அச்சத்துடனும், பதற்றத்துடனும் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வதந்தி காட்டுத் தீயாக பரவ எஸ்.எம்.எஸ்.-ம் காரணமாக அமைந்தது. இருப்பினும் தமிழகத்தின் எந்த இடத்திலும் யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று டாக்டர்கள் மற்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். யாரும் மரணம் அடையவில்லை, உள் நோயாளியாகக் கூட அனுமதிக்கப்படவில்லை. எஸ்.எம்.எஸ். வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், வதந்திகளை பரப்புவேர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பின்னர் டாக்டர்கள் கூறியதாவது:-​

மருதாணி, மெகந்தி nullசியதால் பாதிப்பு ஏற்பட வில்லை. பாதிப்பு ஏற்படாது. இதனால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே இது குறித்து யாரும் பயப்பட தேவையில்லை. இங்கு வந்தவர்களுக்கு பரிசோதனை செய்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்