எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், ஆக. 24 - நியூசிலாந்திற்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்னை எடுத்து இருக்கிறது. இந்திய அணியின் இன்னிங்சில் தேஜேஸ்வர் பூஜாரா சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். இது அவருக்கு டெஸ்டில் முதலாவது சதமாகும்.
தவிர, அவர் இதுவரை 4 டெஸ்டில் பங்கேற்று இருக்கிறார். இதில் ஒரு அரை சதமும், ஒரு சதமும் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சதம் அடித்த அவர் இறுதிவரை ஆட்ட ம் இழக்காமல் இருக்கிறார். அவருக்குப் பக்கபலமாக சேவாக், காம்பீர் , கோக்லி மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் ஆடினர். கோக்லி அரை சதம் அடித்தார்.
கேப்டன் ரோஸ் டெய்லர் தலைமையி லான நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக ஆடி வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மையத்தில் நேற்று துவங்கியது. இதில் இந்திய அணி டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த டெஸ்டில் இந்திய அணி ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ் . லக்ஷ்மண் ஆகிய மூத்த வீரர்கள் இல்லாமல் களம் இறங்கியது.எனவே இந்திய அணி எப்படி சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. ஆனால் பூஜாரா மற்றும் கோக்லி இருவரது ஆட்டத்தால் இந்திய அணி கெளரவமான நிலைக்கு சென்று உள்ளது.
முன்னதாக சேவாக் மற்றும் காம்பீர் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். இருவரும் இந்திய அணிக்கு நல்ல துவக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டிற்கு 49 ரன் சேர்த்தனர். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை சிறிது சிறிதாக உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 49 -க்கு சென்ற போது, காம்பீர் ஆட்டம் இழந்தார்.
அவர் 36 பந்தில் 22 ரன்னை எடுத்த நிலையில், போல்ட் வீசிய பந்தில் கீப்பர் வான்விக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 4 பவுண்டரி அடித்தார். இதனைத் தொடர்ந்து பூஜாரா களம் இறங்கினார். அவர் மே.இ.தீவுக்கு எதிரான தொடரின் போது , சிறப்பாக ஆடியதால் இந்த டெஸ்டில் அவர் 3-வது வீரராக களம் இறக்கப்பட்டார்.
பூஜாரா அபாரமாக பேட்டிங் செய்து அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்றினார். டிராவிட் இல்லாத குறையை அவர் பூர்த்தி செய்து வருகிறார். பூஜாராவும், சேவாக்கும் இணைந்து கவனமாகவும், நிதானமாகவும் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய அணி 10.4 ஓவரில் 50 ரன்னை எட்டியது. நன்றாக பேட்டிங் செய்து கொண்டு இருந்த சேவாக் 50 ரன்னை நெருங்கினார். ஆனால் அவரால் அரை சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை.
சேவாக் 41 பந்தில் 47 ரன்னை எடுத்த நிலையில், பிரேஸ்வெல் வீசிய பந்தை அடித்த போது, அது கேட்சாக மாறி செகன்ட் ஸ்லிப்பில் இருந்த குப்டிலிடம் சிக்கியது .
அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 77 ரன்னிற்கு 2 விக்கெட் இழப்பு என்ற நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து மாஸ்டர் பேட்ஸ்மேன் டெண்டுல்கர் களம் இறங்கினார். மதிய உணவு இடைவேளையின் போ
து, இந்திய அணியின் ஸ்கோர் 25 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன் என்ற நிலையில் இருந்தது. பின்னர் தொடர்ந்து ஆடிய இந்தியா 25.3 ஓவரில் 100 ரன்னை எட்டியது. ஆனால் மாஸ்டர் பேட்ஸ்மேன் டெண்டுல்கரும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. சச்சின் 62 பந்தில் 19 ரன் எடுத்த நிலையில் போல்ட் வீசிய பந்தில் கிளீன் போல்ட்டானார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 125 என்ற நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து விராட் கோக்லி வந்தார். ஒருமுனையில் பூஜாரா நிலைத்து ஆடினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை நன்கு உயர்த்தினர். இந்தியாவின் ஸ்கோர் 250 -க்கு சென்ற போது, கோக்லி ஆட்டம் இழந்தார். அவர் 107 பந்தில் 58 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். பின்பு களம் இறங்கிய ரெய்னாவும் அதிக நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. அவர் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் தோனி வந்தார்.
இந்த ஜோடி கடைசி வரை நிலைத்து நின்றது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 87 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது பூஜாரா 226 பந்தில் 119 ரன்னுடனும் (15 பவுண்டரி, 1 சிக்சர்)தோனி 37 பந்தில் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பூஜாரா 119 பந்தில் 50 ரன்னையும், 169 பந்தில் 100 ரன்னையும் எட்டினார்.
முன்னதாக காம்பீர் மற்றும் சேவாக் இருவரும் நன்கு ஆடிக் கொண்டிருந்த போதிலும், தேவையில்லாத பந்துகளை தொட்டு ஆட்டம் இழந்தனர். அதே போல டெண்டுல்கர் மற்றும் ரெய்னாவும் அவுட்டானார்கள்.
நியூசிலாந்து அணி தரப்பில்,போல்ட் 63 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மார்டின், பிரேஸ்வெல் மற்றும் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வாவின் சா்ச்சை வீடியோ குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
15 Feb 2026புதுடெல்லி, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, முஸ்லிம் சமூகத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சா்ச்சை காணொலிக் காட்சி தொடா்பாக தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம்
-
உ.பி.: தலித் இளைஞர் கொலை வழக்கில் 3 குற்றவாளிகள் கைது: என்கவுன்டரில் 2 பேருக்கு காயம்
15 Feb 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் தலித் இளைஞர் கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்
-
அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சா் விமர்சனம்
15 Feb 2026கோவை, த.வெ.க. தலைவைர் விஜய் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூரில் விபத்து - 5 இளைஞர்கள் பலி
15 Feb 2026பெங்களூரு, பெங்களூரில் வேகமாக வந்த கார், பேருந்து மீது மோதியதில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்
-
விஜய்-திரிஷா குறித்த அவதூறு பேச்சு: நயினாருக்கு ராமதாஸ் கண்டனம்
15 Feb 2026சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரனுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புகிறார்: ராகுல் மீது அமித் ஷா குற்றச்சாட்டு
15 Feb 2026புதுடெல்லி, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி பொய் பரப்புகிறார்.
-
2024-25 நிதியாண்டில் மட்டும் தோ்தல் அறக்கட்டளைகள் திட்டத்தில் கட்சிகளுக்கு ரூ.3,826 கோடி நன்கொடை: அதிகபட்சமாக பா.ஜ.க.வுக்கு 82 சதவீதமாம்
15 Feb 2026புதுடெல்லி, தோ்தல் அறக்கட்டளைகள் (எலக்டோரல் டிரஸ்ட்) திட்டத்தில் 2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.3,826.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீா்திருத
-
விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: 4 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம்
15 Feb 2026தூத்துக்குடி, விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
-
மறுதணிக்கை செய்வதில் தாமதம்: ஜூன் மாதம் ஜனநாயகன் வெளியீடு?
15 Feb 2026சென்னை, மறுதணிக்கைக்காக ஜன நாயகன் அனுப்பப்பட்ட நிலையில் திரைப்படத்தை தணிக்கை வாரியம் இன்னமும் மறுதணிக்கைக்காக திரைப்படத்தைப் பார்க்காததால் படம் ஜூன் மாதம் அதாவது தேர்தல
-
கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா: ராஜ்நாத்சிங் பங்கேற்பு
15 Feb 2026கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
-
இந்தியாவில் அமையும் முதல் நீருக்கடியில் செல்லும் சாலை - ரயில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
15 Feb 2026புதுடெல்லி, இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையவுள்ள சாலை-ரெயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு மனித நேய மக்கள் கட்சி தீர்மானம்
15 Feb 2026சென்னை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம்: மறுஆய்வு மனுக்களை இன்று பரிசீலிக்கிறது சுப்ரீம் கோர்ட்
15 Feb 2026திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தாக்கல் செ
-
பாரதம் செழிப்பின் உச்சம் அடையட்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
15 Feb 2026புதுடெல்லி, சிவபெருமானின் ஆசியால் நமது பாரதம் செழிப்பின் உச்சத்தில் அரியணையிட்டு நிலைத்திருக்கட்டும் என்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து
-
மாசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலையில் குவிந்த பக்தர்கள்
15 Feb 2026சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காண


