முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சே வரக்கூடாது! திருப்பதி அதிகாரிக்கு மிரட்டல்

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

திருமலை, பிப். 9 - ராஜபக்சே வருகையையொட்டி திருப்பதி கோயில் அதிகாரிக்கு டெலிபோனில் மிரட்டல் வந்துள்ளது. 

இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று காலை திருப்பதி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று திருப்பதி, திருமலை தேவஸ்தான இணை செயல் அலுவலகத்திற்கு டெலிபோன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ராஜபக்சே திருப்பதிக்கு வரக் கூடாது. மீறி வந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இது குறித்து இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ திருப்பதி போலீசில் புகார் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி திருப்பதி கோயில் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்