எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒசூர் பிப்.15 - ஓசூர் சூளகிரி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் லாரி டிரைவர் உள்பட 6 பேர் பலியாயினர்.40 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி,மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லகான கொத்தம்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள சப்படி கிராம பகுதியில் நேற்று மதியம் 1.30 மணியளவில் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி ஆவின் பால்பண்ணைக்கு ஓசூர் பகுதியில் சேகரிக்கப்பட்ட பாலை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.லாரியை கிருஷ்ணகிரி ஆவின் நகரைச் சேர்ந்த ராஜூ(56) என்பவர் ஓட்டிச் சென்றார். அதே வேளையில் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. சப்படி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண் 7 ல் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் சுமார் 1 கி மீ தூரத்திற்கு ஒரே சாலையில் வாகனங்கள் செல்லும் சூழ்நிலை உள்ளது.
சப்படி கிராம பகுதியில் லாரியும்-பஸ்சும் வந்த போது ஒரு வளைவில் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது. இதில் ஆவின் லாரி டிரைவர் டிரைவர் ராஜூ(56) ஆந்திரா குப்பம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்(40), பர்கூரைச் சேர்ந்த சேகர்(50), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தகாசிநாதன்(53)) தேன்கனிக்கோட்டை தேவகானப்பள்ளியைச் சேர்ந்த அமராவதி(53), ஆந்திர மாநிலம் கூடுப்பள்ளியைச் சேர்ந்த பாலன்(40),
பெரியாம்பட்டி வெங்கடேஷ்(40),கிருஷ்ணகிரி செக்கப்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜா(60),கோ வையை சேர்ந்த பாலசுப்பிரமணி(45), திருப்பத்தூர் மணிகண்டன்(20) ஓசூர் மருதையன்(57), கிருஷ்ணகிரி ஓல்ட் பேட்டையைச் சேர்ந்த பசில்(40), காட்பாடி,ஏழுமலை(49), பெங்களூர் சிவாஜி நகரைச் சேர்ந்த சபி(41), கிருஷ்ணகிரி,விமலா(37), கோவிந்தப்பள்ளி,குப்பம்மாள்(37), திருப்பத்தூர் பெரியசாமி(50), கிருஷ்ணகிரி,செல்வம்(25) ஒரிசா,ஜிஜேந்திரா(24) தேன்கனிக்கோட்டை,தியாகராஜன்(40) தேவகானப்பள்ளி, தேவீரம்மா(60) உள்பட 46 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு அலறினர். உடனே அப்பகுதி கிராம மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர். இது குறித்து சூளகிரி போலீசாருக்கும்,108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் சப்-கலெக்டர் பிரவின் பி.நாயர் மற்றும் போலீசாரும், அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியில் ஆவின் லாரி டிரைவர் ராஜூ மற்றும் தேவனானப்பள்ளியைச் சேர்ந்த அமராவதி ஆகியோர் இறந்து போயினர். இதில் 25 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் 19 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், பர்கூரைச் சேர்ந்த சேகர், திருப்பத்தூரைச் சேர்ந்த காசிநதான், ஆந்திர மாநிலம் கூடுப்பள்ளியைச் சேர்ந்த பாலன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து போயினர்.
விபத்து நடந்த இடத்தை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இதே போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் சில மணி நேரம் போக்குரவத்தும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி சென்னையில் இருந்து கார் மூலம் நேற்று இரவு கிருஷ்ணகிரி வந்தவர் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகளில் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவருடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2025
16 May 2025 -
காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் முக்கிய பயங்கரவாதி பலி
16 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 நாட்களில் கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளில் ஒருவன், 2 பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவன் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
-
துருக்கி, அஜர்பைஜானை முழுமையாக புறக்கணிக்க இந்திய வர்த்தகர்கள் முடிவு
16 May 2025புதுடில்லி : பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து இந்திய வர்த்தகர்கள் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை 13 மாவட்டங்களில் இன்று கனமழை
16 May 2025சென்னை : தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு
16 May 2025இஸ்லாமாபாத் : காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில், அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 24-ல் டெல்லி பயணம்
16 May 2025சென்னை : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வரும் 24-ம் ததேி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு அழைப்பை ஏற்று டெல்லி செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
வியோமிகா சிங்கின் சாதி குறித்த பேச்சு: சமாஜ்வாதி எம்.பி.யால் மீண்டும் சர்ச்சை
16 May 2025லக்னோ : கர்னல் சோபியா குரேஷி ஒரு முஸ்லிம் என்பதால் பா.ஜ.க.
-
பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படுத்த மத்திய அரசின் புதிய திட்டம் தயார்...?
16 May 2025புதுடில்லி : அனைத்து கட்சி எம்.பி.,க்கள் கொண்ட குழுவை, வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைக்க
-
தமிழகத்தில் 2026-ம் ஆண்டில் மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
16 May 2025ஊட்டி, ஜனாதிபதி சுப்ரீம் கோர்ட்டில் கருத்து கேட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநில முதல்வர்களுடன் கருத்து கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
-
பாதுகாப்பு துறைக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு
16 May 2025புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, ராணுவத்துக்கு புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய
-
விண்ணில் பாயும் 101வது ராக்கெட்: திருப்பதியில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு
16 May 2025திருப்பதி : வரும் 18ம் தேதி விண்ணில் ஏவ உள்ள 101வது ராக்கெட் வெற்றி பெற வேண்டி, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.
-
இந்தியா-பாக்., போரை நிறுத்தியது நான் தான் : அதிபர் ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம்
16 May 2025தோஹா : “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான் தான்” என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் ஆறாவது முறையாக தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் உறுதி
16 May 2025சென்னை : தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதில் மாற்றமில்லை' என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: தமிழில் 8, அறிவியலில் 10,838 பேர் சதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: தமிழில் 8, அறிவியலில் 10,838 பேர் சதம்
16 May 2025சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாட வாரியாக 100-க்கு 100 முழு மதிப்பெண்கள் எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் தமிழில் 8 பேரும், அதிகபட்சமாக அறிவியலில்10,838 பேரும்
-
15 மாநிலங்களில் 'ஜெய் ஹிந்த் சபா' கூட்டம்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
16 May 2025புதுடெல்லி : நாட்டின் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த் சபா’ எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களை நடத்த இருக்கிறது.
-
பேரூராட்சி தலைவர் பதவி நீக்கம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
16 May 2025மதுரை : பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் நின்று வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தேரூர் பேரூராட்சி தலைவி அமுதராணியின் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்ற மத
-
அ.தி.மு.க.வுடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் சீமான்
16 May 2025சென்னை : கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை சீமான் வெளியிட இருக்கிறார்.
-
அஜந்தா உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசிக்க பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் இயக்கம்
16 May 2025சென்னை : அஜந்தா, எல்லோரா, கஜுராஹோ ஆகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை பார்த்து ரசிப்பதற்காக, இந்திய ரயில்வே பாரத் கவுரவ் என்ற சுற்றுலா ரயிலை இயக்குகிறது.இந்த சுற்றுலா
-
பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி
16 May 2025சென்னை : பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: புதுச்சேரி, காரைக்கால் தனியார் பள்ளிகளில் 96.90 சதவீதம் தேர்ச்சி
16 May 2025புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பில் 96.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
கட்சி கட்டமைப்பு பணியை விரைந்து முடிக்க த.வெ.க. விஜய் அறிவுறுத்தல்
16 May 2025சென்னை : கட்சி கட்டமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுச்செயலாளர் ஆனந்திடம் நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
-
பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 10-ம் வகுப்பில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி : 11-ம் வகுப்பில் 92.09% மாணவர்கள் தேர்ச்சி
16 May 2025சென்னை, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தின்படி, 98.31% பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
-
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
16 May 2025சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
-
இமாச்சலில் 1,200 அரசுப் பள்ளிகள் மூடல்
16 May 2025சிம்லா : கடந்த இரண்டரை ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 1,200 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர் தெரிவித்தார்.
-
ஹாங்காங், சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல்
16 May 2025புதுடெல்லி : ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.