LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பிப்.17 - உண்மை சம்பவங்களை படமாக்க படைப்பாளிக்கு சுதந்திரம் இல்லை என்று வனயுத்தம் பட இயக்குனர் ரமேஷ் கூறினார். இதுபற்றிய விபரம் வருமாறு சந்தனவீரப்பன் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் வனயுத்தம் இதில் அர்ஜூன் கிஷோர், விஜயலட்சுமி என பலர் நடித்துள்ளனர். இந்த படம் திரைக்கு வருவதை அனுமதிக்க மாட்டேன் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறியதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு வந்தது. அப்போது முத்துலட்சுமிக்கு நஷ்டஈடாக 25 லட்சம் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் வனயுத்தம் படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டுயிருக்கிறது ஆனால் நீதிமன்றம் சொன்ன பணத்தை இயக்குனரும் படத்தின் தயாரிப்பாளருமான ரமேஷ் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மேலும் முத்துலட்சுமியால் பிரச்சனை எழுந்துள்ளது. இதுபற்றி நிருபர்களிடம் ரமேஷ் கூறியதாவது.
வனயுத்தம் பட விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அசை செய்ய நான் கடமைப்பட்டுயிருக்கிறேன். 25 லட்சத்திற்கான கோர்ட் ஆர்டர் இன்னும் என் கைக்கு வரவில்லை. தற்போது நண்பர்களிடம் கடன் வாங்கி முத்துலட்சுமி அம்மாவிற்கு 10 லட்சம் தருகிறேன். பாக்கி பணத்தை கொடுக்க பத்து நாள் அவகாசம் கேட்கிறேன். இதற்கு அந்த அம்மா சம்மதிக்கு மறுக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு படங்கள் எடுத்து நஷ்டப்பட்டிருக்கிறேன். அதற்கு என் இரண்டு வீடுகளை விற்றேன். இப்போது வீட்டை விற்றுதான் இந்த படத்தை எடுத்து இருக்கிறேன். வனயுத்தம் ஏகப்பட்ட பிரச்சனை சந்தித்து நேற்று தான் ரிலீஸ் ஆகி உள்ளது. இன்னும் கலெக்ஷன் பணம் என் கைக்கு வரவில்லை.
இந்த அம்மா என்னை மிகவும் நஷ்டப்படுத்தியது. கோர்ட்டில் என்னை அடிக்க வந்தார் என் பாதுகாப்பிற்கு எப்போதும் பத்து போலீஸ் இருக்கும். ஒன்னரை கோடி நஷ்டயீடு கேட்டது. கோர்ட் பார்த்து தீர்மானித்தது தான் இந்த தொகை படத்தில் 32 இடங்களில் கட் செய்ய சொன்னது. பிறகு நான்கு இடங்களில் கட் செய்தேன். வீரப்பனுடன் திருமணம் செய்த காட்சியையும், அந்தம்மாவுடைய போர்ஷனையும் நீக்க சொன்னது. அதை அப்படியே நீக்கி விட்டேன். இப்படி பிரச்சனை என்றால் பெங்களூரிலும் படம் வெளியானது. அங்கே உள்ளவர்கள் தமிழ்நாட்டு போலீஸை பெருமை படுத்தியிருக்கிறார் கன்னட போலீஸ் தலைவர்களை கேவளப்படுத்தியிருக்கிறார் ராஜ்குமார் மனைவி கதறி அழும் காட்சிகள் இருக்கிறது என்று பல காரணங்கள் சொல்லி பிரச்சனை கிளப்புகிறார்கள். நான் கற்பனையாக எதையும் எடுக்கவில்லை நடந்த உண்மை சம்பவங்களை படமாக்கினேன். அப்படி படமாக்கும் போது படைப்பாளிக்கு சுதந்திரம் இல்லை. போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கொடுத்த விபரங்களை வைத்துதான் க்ளைமாக்ஸ் எடுக்கப்பட்டது. இதில் எப்படி பொய் இருக்க முடியும். அதுமட்டுமல்ல தற்போது வீரப்பன் கூட்டாளிகள் தூக்கில் போட இருப்பவர்களை ஜெயிலில் நேரில் சந்தித்து பேட்டி எடுத்து அவர் சொன்ன விஷயங்களையும் படமாக்கி உள்ளேன். முத்துலட்சுமி பெங்களூரில் வெளிவரும் லாங் வேஜ் என்ற பத்திரிகையில் என்னை பற்றி தவறாக பேட்டி கொடுத்திருக்கிறது. என்னை பல சமயங்களில் பலர் மிரட்டுகிறார்கள். இந்த படம் வெளி வந்தால் எனக்கும் என் பொண்ணுக்கும் பாதிப்பு வரும் என்று சொன்னவர் இப்போது பணத்திலேயே குறியாக இருக்கிறார். இவருக்கு சேரவேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு தற்போது நீக்கி உள்ள காட்சிகளை மறுபடியும் சேர்த்து தணிக்கை செய்து படத்தை ஓட்டுவேன். முஸ்லீம்களை கேலி செய்திருப்பதாகவும் முத்துலட்சுமி கூறி வருகிறார். இது தவறான பிரச்சாரம் ஒரு படைப்பாளிக்கு உள்ள மரியாதை, பாதுகாப்பு, சுதந்திரம் இல்லை. குறிப்பாக மற்ற மீடியாக்களை விட சினிமாவுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார் அப்போது வேந்தர் மூவிஸ் சிவா, பட ஒளிப்பதிவாளர், என பலர் அருகில் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 1 day 6 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 3 days 8 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 12 hours ago |
-
கல்வி, மருத்துவ திட்டங்களை இலவசம் என சொல்ல முடியாது: அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே அரசின் நோக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
13 Aug 2022சென்னை : கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது என்றும் அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே இந்த அரசின் நோக்கம் என்றும் மு
-
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது
13 Aug 2022நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி கோலாகலம்: தமிழகத்தில் ஏராளமானோர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினார்கள்
13 Aug 2022தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் மூவர்ண மயமாக காணப்பட்டது.
-
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியை உடனே கைவிட வேண்டும் : ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Aug 2022சென்னை : கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.
-
சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் கைது : கண் பார்வை இழக்க நேரிட்டதாக தகவல்
13 Aug 2022நியூயார்க் : சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆப்கனில் தலிபான்களின் தடையை மீறி சகோதரியுடன் இணைந்து ரகசிய பள்ளி நடத்தும் பெண்
13 Aug 2022காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தடையை மீறி இளம்பெண் ஒருவர் தனது சகோதரியுடன் இணைந்து வீட்டிலேயே ரகசிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
-
சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி அரங்கு அமைப்பு
13 Aug 2022சென்னை உணவுத் திருவிழாவில் நேற்று முதல் பீப் பிரியாணி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
-
பிரியங்காவைத் தொடர்ந்து சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி
13 Aug 2022காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
-
ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: தலிபான் மதகுரு பலி
13 Aug 2022காபூல் : ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பலியானார்.
-
போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு எடப்பாடி வேண்டுகோள்
13 Aug 2022சென்னை : கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விட
-
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனிக்கு மாநில இளைஞர் விருது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
13 Aug 2022முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னை கலைவாணர் அரங்கில் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
13 Aug 2022சென்னை : சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கலை-பண்பாட்டுத்துறை, இயல்-இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகிய துறைகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட வீரமங்கை
-
விடுமுறையால் அலைமோதும் கூட்டம்: திருப்பதி கோவிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
13 Aug 2022அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் திருப்பதி கோவிலில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள்.
-
2 ராணுவ விமானங்களை இலங்கைக்கு பரிசாக வழங்குகிறது இந்தியா
13 Aug 2022புதுடெல்லி : இலங்கைக்கு 2 டோர்னியர் வகை ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்குகிறது.
-
பிரதமரிடம் இருந்து ஊக்கம் கிடைப்பது முக்கியமானது : கேப்டன் ஹர்மன்ப்ரீத் கருத்து
13 Aug 2022புதுடெல்லி : காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நேற்று விருந்தளித்தார்.
-
உ.பி.யில் படகு விபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
13 Aug 2022பாண்டா : உ.பி.யில் படகு விபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உணவுத்திருவிழாவில் 1,500 மாணவர்கள் உணவு தயாரித்து உலக சாதனை
13 Aug 2022சென்னை உணவுத்திருவிழாவில் 1,500 மாணவர்கள் உணவு தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
-
வெளிநாடு டி-20 போட்டி தொடரில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு தடை : பி.சி.சி.ஐ. அதிரடி அறிவிப்பு
13 Aug 2022புதுடெல்லி : வெளிநாட்டு டி-20 லீக்குகளில் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
-
பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்: அமைச்சர்கள், மதுரை மாவட்ட கலெக்டர் இறுதி மரியாதை
13 Aug 2022காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த லட்சுமணனின் உடல் நேற்று முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்
13 Aug 2022சென்னை : முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றினார் டோனி
13 Aug 2022நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
-
அளவுக்கு அதிகமாக உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
13 Aug 2022சென்னை : தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்
-
நாடு முழுவதும் நாளை 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு: தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான போலீசார் குவிப்பு
13 Aug 202275-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
கொளத்தூர் தொகுதியில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
13 Aug 2022சென்னை : கொளத்தூர் தொகுதியில் புதிய திட்டப்பணிகளுக்கு நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.
-
சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பேருந்துகள் மீது வழக்கு பதிவு
13 Aug 2022சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு பதவு செய்யப்பட்டுள்ளது.