எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.5 - திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பிரச்சினையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் அணி மீது கே.ஆர். சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்று வரும் பல பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 28.10.2012 அன்று, தலைவராக பதவி வகித்து வந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாக குழுவினர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி இ.பத்மநாபன் இந்த வாக்கெடுப்பை நடத்தி முடித்தார். பல தடைகளுக்குப் பிறகு உச்சநீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2.2.2013 அன்று அதே நீதிபதி முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவாகி இருந்தன.
நம்பிக்கை இல்லாத தீர்மானம் வெற்றி பெற்ற பிறகும் எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் பதவி விலக மறுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் அவர்களின் மேல்முறையீடு கடந்த 7.2.2013 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த 4.2.2013 அன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வெற்றி குறித்து, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினோம்.
அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் அங்கு வந்து கேவலமான வார்த்தைகளால் எங்களை திட்டியதுடன், கலகம் விளைவிக்க முயற்சி செய்தனர். இது சம்பந்தமாக கடந்த 5.2.2013 அன்றும் தங்களை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறோம்.
இதற்கிடையே அதே நாளில் (5.2.2013) மத்திய சென்னை மாவட்ட பதிவாளரை சந்தித்து எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பதவி இழந்தது தொடர்பான கோர்ட்டின் உத்தரவுகளையும், அவர்களுக்கு எதிராக இதுவரை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டினோம். நாங்கள் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய பதிவாளர் 28.2.2013 அன்று எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாக குழுவை (மொத்தம் 27 பேர்) தகுதி நீக்கம் செய்து கடிதம் அனுப்பினார். வங்கி கணக்குகளையும் முடக்கினார்.
இந்நிலையில் பதிவாளர் எடுத்த நடவடிக்கை பற்றி, பிலிம் சேம்பர் வளாகத்தில் 2.3.2013-ந் தேதி அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது, நான் `நியாயமாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி' சொல்லிக் கொண்டிருந்தபோது பாபுகணேஷ் தலைமையில் வந்திருந்த ஒரு கும்பல் திடீரென்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், எங்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி திடீர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்குள் தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி தாணு, தேனப்பன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தயாரிப்பாளர் சங்கத்தில் கலாட்டா செய்து தாக்குதலில் ஈடுபட்ட, பாபுகணேஷ், ராஜசிம்மன், பாஸ்கர், பாலாஜி, ஜெமினா ராகவா, ரிஷிராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி அன்று இரவே ஆயிரம்விளக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் கொடுத்திருக்கிறோம்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் கும்பல் தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். மாவட்ட பதிவாளரே அனைத்து நிர்வாகிகளையும் பதவி இழப்பு செய்து விட்ட நிலையில் தங்களுக்கு எந்தவிதமான அதிகாரமும், உரிமையும் இல்லை என்று தெரிந்தும், சங்கப் பணத்தை எடுத்து நிலம் வாங்கித்தர சங்கத்தின் சட்டவிதிகளில் இடமே இல்லை என்பது நன்றாக தெரிந்தும் வேண்டும் என்றே ஒரு பொதுக்குழுவை ஏற்பாடு செய்து, தயாரிப்பாளர்களுக்குள் பயங்கர மோதல்களை ஏற்படுத்தி, கலகம் விளைவித்து ஆதாயம் அடைய திட்டம் போடுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். அவரது அணியினர் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகின்றனர்.
எனவே இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், தகுதியே இல்லாதவர்கள் பிரச்சினை செய்யும் நோக்கத்துடன் வருகிற 24-ம் தேதி நடத்த திட்டமிட்டிருக்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்து, கூட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம். இவ்வாறு புகாரில் கே.ஆர். கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.