எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.5 - திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பிரச்சினையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் அணி மீது கே.ஆர். சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்று வரும் பல பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 28.10.2012 அன்று, தலைவராக பதவி வகித்து வந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாக குழுவினர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி இ.பத்மநாபன் இந்த வாக்கெடுப்பை நடத்தி முடித்தார். பல தடைகளுக்குப் பிறகு உச்சநீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2.2.2013 அன்று அதே நீதிபதி முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவாகி இருந்தன.
நம்பிக்கை இல்லாத தீர்மானம் வெற்றி பெற்ற பிறகும் எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் பதவி விலக மறுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் அவர்களின் மேல்முறையீடு கடந்த 7.2.2013 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த 4.2.2013 அன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வெற்றி குறித்து, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினோம்.
அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் அங்கு வந்து கேவலமான வார்த்தைகளால் எங்களை திட்டியதுடன், கலகம் விளைவிக்க முயற்சி செய்தனர். இது சம்பந்தமாக கடந்த 5.2.2013 அன்றும் தங்களை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறோம்.
இதற்கிடையே அதே நாளில் (5.2.2013) மத்திய சென்னை மாவட்ட பதிவாளரை சந்தித்து எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பதவி இழந்தது தொடர்பான கோர்ட்டின் உத்தரவுகளையும், அவர்களுக்கு எதிராக இதுவரை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டினோம். நாங்கள் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய பதிவாளர் 28.2.2013 அன்று எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாக குழுவை (மொத்தம் 27 பேர்) தகுதி நீக்கம் செய்து கடிதம் அனுப்பினார். வங்கி கணக்குகளையும் முடக்கினார்.
இந்நிலையில் பதிவாளர் எடுத்த நடவடிக்கை பற்றி, பிலிம் சேம்பர் வளாகத்தில் 2.3.2013-ந் தேதி அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது, நான் `நியாயமாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி' சொல்லிக் கொண்டிருந்தபோது பாபுகணேஷ் தலைமையில் வந்திருந்த ஒரு கும்பல் திடீரென்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், எங்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி திடீர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்குள் தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி தாணு, தேனப்பன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தயாரிப்பாளர் சங்கத்தில் கலாட்டா செய்து தாக்குதலில் ஈடுபட்ட, பாபுகணேஷ், ராஜசிம்மன், பாஸ்கர், பாலாஜி, ஜெமினா ராகவா, ரிஷிராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி அன்று இரவே ஆயிரம்விளக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் கொடுத்திருக்கிறோம்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் கும்பல் தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். மாவட்ட பதிவாளரே அனைத்து நிர்வாகிகளையும் பதவி இழப்பு செய்து விட்ட நிலையில் தங்களுக்கு எந்தவிதமான அதிகாரமும், உரிமையும் இல்லை என்று தெரிந்தும், சங்கப் பணத்தை எடுத்து நிலம் வாங்கித்தர சங்கத்தின் சட்டவிதிகளில் இடமே இல்லை என்பது நன்றாக தெரிந்தும் வேண்டும் என்றே ஒரு பொதுக்குழுவை ஏற்பாடு செய்து, தயாரிப்பாளர்களுக்குள் பயங்கர மோதல்களை ஏற்படுத்தி, கலகம் விளைவித்து ஆதாயம் அடைய திட்டம் போடுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். அவரது அணியினர் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகின்றனர்.
எனவே இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், தகுதியே இல்லாதவர்கள் பிரச்சினை செய்யும் நோக்கத்துடன் வருகிற 24-ம் தேதி நடத்த திட்டமிட்டிருக்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்து, கூட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம். இவ்வாறு புகாரில் கே.ஆர். கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Jan 2026சென்னை, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட'த்தை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட
-
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்:ஐ.நா. உடனடியாக தலையிட கொலம்பியா வலியுறுத்தல்
03 Jan 2026கராகஸ், வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கொலம்பியா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-01-2026
03 Jan 2026 -
அறநிலையத்துறை சார்பில் ரூ.109 கோடி மதிப்பிலான 19 புதிய திட்டப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
03 Jan 2026சென்னை, அறநிலையத்துறை சார்பில் ரூ.15 கோடியே 30 லட்சம் செலவில் 7 கோவில்களில் 10 முடிவுற்ற பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தா
-
இலங்கை கடற்படையால் தற்போது கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
03 Jan 2026சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கைக் காவலில் இருக்கும் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் பட
-
வெனிசுவேலா அதிபர் மதுரோவை சிறைப்பிடித்த அமெரிக்க ராணுவம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
03 Jan 2026நியூயார்க், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
வரம்பை மீறும் குரோக் ஏ.ஐ.: எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்
03 Jan 2026புதுடெல்லி, வரம்பை மீறும் குரோக் ஏ.ஐ.
-
மெக்சிகோவில் நிலநடுக்கம்: 2 பேர் பலி
03 Jan 2026மெக்சிகோ சிட்டி, தெற்கு மற்றும் மத்திய மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி
03 Jan 2026வாஷிங்டன், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், 4 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
-
அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளை கேட்காமலே நிறைவேறும் தி.மு.க. அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு
03 Jan 2026சென்னை, அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் கேட்காமலே நிறைவேறும் தி.மு.க.
-
வருகிற 9-ம் தேதி அ.தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணல் துவக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
03 Jan 2026சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலி அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
03 Jan 2026சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
03 Jan 2026சென்னை, ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து, ரூ.1,00,800-க்கு விற்பனையானது. இதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.257-க்கு விற்பனையானது.
-
வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? வெளியான புதிய கருத்து கணிப்பால் பரபரப்பு
03 Jan 2026சென்னை, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பான ஐ.டி.பி.ஐ., தமிழகம் முழுவதும் 2026 சட்டசபை தேர்தல் குறித்து கருத்துகணிப்பு மேற்கொண்டுள்ளது.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
03 Jan 2026மும்பை, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை பி.சி.சி.ஐ. நேற்று அறிவித்தது.
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது
03 Jan 2026சென்னை, இலங்கை கடற்படையால் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு
03 Jan 2026சென்னை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை மேற்கொண்டது.
-
விதர்பா அணிக்கு எதிராக முதல் சதமடித்த ஹார்திக் ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசல்
03 Jan 2026மும்பை, விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்திய ஹார்திக் பாண்டியாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள்முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
03 Jan 2026சென்னை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 750 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
-
தமிழ்நாட்டில் ஜன. 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
03 Jan 2026சென்னை, தமிழகத்தில் நாளை முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த நாள்: தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி புகழாரம்
03 Jan 2026புதுடெல்லி, வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி புகழாரம் செலுத்தினார்.
-
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கையால் போர் பதற்றம்
03 Jan 2026டெஹ்ரான், ஈரானின் உள்விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.&nbs
-
டி-20 உலகக் கோப்பை தொடர்: தென் ஆப்பிரிக்க, ஜிம்பாப்வே நமீபியா அணிகள் அறிவிப்பு
03 Jan 2026கேப்டவுன், டி-20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
தகவல்கள், படங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
03 Jan 2026புதுடெல்லி, பதிவு செய்யப்படும் தகவல்கள், படங்களுக்கு சமூக வலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
-
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: ரஷ்யா, ஈரான் கடும் கண்டனம்
03 Jan 2026மாஸ்கோ, வெனிசுலா மீதான தாக்குதலுக்கு கியூபா, கொலம்பியா மற்றும் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


