இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள 'ஓட்டுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே.30 - பெப்சி தொழிலாளர்கள் ஸ்டிரைக் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. பெப்சி அமைப்பில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகுவதாக அதன் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார். இதனால் பெப்சி உடையும் நிலையிலுள்ளது.
பெப்சி எனும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் சுமார் 23 சங்கங்கள் உள்ளன. இதன் தலைவராக டைரக்டர் அமீர் உள்ளார். இந்த அமைப்பிலுள்ள ஒவ்வொரு சங்கத்திலும் உட்கட்சி பூசல் நிறையவே உள்ளது. அது அவ்வப்போது வெடிக்கிறது.
பெப்சியில் அங்கம் வகிக்கும் கார் டிரைவர்கள் யூனியன் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருவதால், அந்த யூனியனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று பெப்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக சங்க உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக சென்றபோது பெப்சியின் பொருளாளர் அங்கமுத்து சண்முகம் மற்றும் நிர்வாகி தனபால் ஆகிய இருவரும் தாக்கப்பட்டார்கள். இருவருக்கும் அடி-உதை விழுந்தது. இதுதொடர்பாக வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது. அத்துடன் பெப்சியின் பொதுக்குழுவை கூட்டி, டிரைவர் யூனியனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பெப்சி நிர்வாகிகளை தாக்கியதாக கூறப்படும் செந்தில் மற்றும் அவரது ஆதாரவாளர்களை கைது செய்யக்கோரி பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இதனால் தமிழ்நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
லைட்மேன்கள், கேமரா உதவியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வேலைக்கு வராததால், விஷால் நடிக்கும் பாண்டிய நாடு, கார்த்தி நடிக்கும் பிரியாணி உள்பட 40 படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகல்:
இதற்கிடையில் பெப்சி அமைப்பில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகுவதாக அதன் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார்.
இதனால் பெப்சி சங்கம் உடையும் சூழல் உருவாகியுள்ளது. டிரைவர்ஸ் யூனியன் பஞ்சாயத்து தொடர்பான பேச்சுவார்த்தை கைகலப்பில் முடிந்தது. இதனால் பெப்சி அமைப்பு நேற்று முன்தினம்ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுப்பட்டது. இதனால் சின்னத் திரைதொடர்களுக்கான படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பெப்சியில் அங்கம் வகிக்கும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் பெப்சியில் இருந்து விலகுவதாக அதன் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் தொடர்களை தயாரித்து வருகிறார்கள். ஆனால் சமீபகாலமாக தொழிலாளர்கள் அவர்களுக்குள் ஏற்படும் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சின்னத்திரை படப்பிடிப்பை எந்தவித முன்னறிவுப்புமின்றி நிறுத்திவிடுகிறார்கள். இதனால் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு குறித்த நேரத்தில் ஒளிப்பரப்பு செய்ய தங்களது தொடர்களை தரமுடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதற்கு மேலும் எங்களது தயாரிப்பாளர்கள் சோதனைகளை தாங்க முடியாத காரணத்தினால் கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சின்னத்திரைகளுக்கு என்று தனிப்பட்ட தொழிலாளர்கள் அமைப்பு உள்ளது போல் தமிழ்நாட்டிலும் தொடங்குவது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெப்சி தொழிலாளர்கள் சரியாக வேலைக்கு வராததால் தயாரிப்பாளர்கள் நிறைய பேருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு பலமுறை அழைத்தும் யாரும் பேச முன்வரவில்லை. இதனால் பெப்சியில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது செயலாளர் டி.வி.சங்கர், பொருளாளர் டி.ஆர்பாலேஷ் மற்றும் சத்தியஜோதி தியாகராஜன், அழகன், தமிழ்மணி, மதி ஒளிகுமார், சோலைராஜா, ராமதாஸ் என பலர் கலந்து கொண்டனர்.
டிரைவர்ஸ் யூனியன் பிரச்னை, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் விலகல் உள்ளிட்ட பிரச்னைகளால் பெப்சி அமைப்பு உடையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி முறுக்கு![]() 6 hours 4 min ago |
வாழைத்தண்டு மோர் கூட்டு![]() 3 days 3 hours ago |
முட்டைக்கோஸ் வடை![]() 1 week 6 hours ago |
-
சூரியனில் 2-வது ராட்சத துளை: பூமியை விட 30 மடங்கு பெரிது
31 Mar 2023வாஷிங்டன் : நமது பால்வளி அண்டத்தில் உள்ள பிரமாண்ட நட்சத்திரமான சூரியனில் சமீப ஆண்டுகளாகவே பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது.
-
போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து
31 Mar 2023புதுடெல்லி : உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சைபர் தாக்குதல் அச்சுறுத்தலில் இந்திய அரசின் வலைதளங்கள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்
31 Mar 2023சென்னை : இந்திய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு வலைதளங்கள் சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் அச்சுறுத்தலில் இருப்பதாக சைபர் செக்யூரிட்டி சார்ந்து இயங்கி வரும் செக்யூரின் (S
-
பிரதமரின் கல்வி ஆவணங்களை கேட்ட விவகாரம்: டெல்லி முதல்வருக்கு 25,000 ரூபாய் அபராதம் : குஜராத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
31 Mar 2023காந்திநகர் : பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை குஜராத் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.
-
புதுமைப்பெண் திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை 29 சதவீதம் உயர்வு : கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல்
31 Mar 2023சென்னை : “புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகரித்து உள்ளதாக உயர் கல்வித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப
-
தினசரி பாதிப்பு 3,094 ஆக உயர்வு: கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது
31 Mar 2023புதுடெல்லி : நாட்டில் தினசரி பாதிப்பு 3,094 ஆக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
-
புதிய மாவட்டமாக ஆரணி உருவாக்கப்படுமா? - சட்டசபையில் அமைச்சர் பதில்
01 Apr 2023சென்னை : ஆரணி, கும்பகோணம் புதிய மாவட்டமாக உருவாக்கப்படுமா என்பது குறித்து சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
-
சென்னை கலாஷேத்ரா விவகாரம்: தற்காலிகமாக போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புதல்
31 Mar 2023சென்னை : சென்னை கலாஷேத்ரா விவகாரத்தில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
-
புதுச்சேரி சட்டப்பேரவையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்
31 Mar 2023புதுச்சேரி : திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
ம.பி.யில் கோவில் கிணறு சுவர் இடிந்த விபத்தில் பலியானோர் 35 ஆக உயர்வு : ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்
31 Mar 2023இந்தூர் : மத்திய பிரதேசத்தில் கோவில் கிணற்று சுவர் இடிந்ததில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-04-2023.
01 Apr 2023 -
மாணவிகளிடம் தரக்குறைவான பேச்சு: மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் கைது
01 Apr 2023மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மாணவிகளிடம், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் எஸ்.சி., எஸ்.டி.
-
புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை: சவரன் ரூ.45 ஆயிரத்தை நெருங்குகிறது
31 Mar 2023சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் நேற்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது.
-
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏப்ரல் 11-ல் நடக்கிறது
31 Mar 2023புதுடெல்லி : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 11-ம் தேதி கூடுகிறது.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு ஆவணங்கள் சமர்ப்பிப்பு
31 Mar 2023சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சமர்ப்பித்துள்ளது.
-
மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டுகளை மறுவரையறை செய்ய குழு அமைக்க முடிவு : அமைச்சர் கே.என். நேரு தகவல்
01 Apr 2023சென்னை : தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்
-
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்: 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு: அமைச்சர் தகவல்
01 Apr 2023சென்னை : காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்றும் 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
விரைவில் உலகின் முன் தோன்றுவேன்: வீடியோ மூலம் அம்ரித்பால் விளக்கம்
31 Mar 2023சண்டிகர் : தான் தப்பி ஓடவில்லை என்றும் விரைவில் உலகின்முன் தோன்றுவேன் என்றும் பஞ்சாபில் தேடப்பட்டு வரும் மத போதகர் அம்ரித்பால் சிங் தெரிவித்துள்ளார்.
-
பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஜூன் வரை இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 Apr 2023பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இம்மாதம் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் இயல்பைவிட அதிக வெப்பநிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
-
இலவச ரேசன் பொருளுக்கு முண்டியடித்த மக்கள்: பாகிஸ்தானில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு
01 Apr 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச ரேசன் பொருள் வாங்க ஒரே சமயத்தில் மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர
-
கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்தினருடன் பார்வையிட்ட நடிகர் சூர்யா, ஜோதிகா
01 Apr 2023சிவகங்கை : திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா, தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை நேற்று பார்வையிட்டார்
-
வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 76 குறைப்பு
01 Apr 2023சென்னை : வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 76 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி: படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி
01 Apr 2023வாஷிங்டன் : அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த போது படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
எக்ஸ்.பி.பி. வகை கொரோனா திரிபு தற்போது இந்தியாவில் பரவுகிறது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
01 Apr 2023புதுடெல்லி : முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி.
-
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் பலி
01 Apr 2023வாஷிங்டன் : அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.