எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் ஜூலை.26 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் அவர்கள், மாண்புமிகு தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் ஐயப்பன் கோயில் பின்புறம் காந்தி நகரில் உள்ள நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க நியாயவிலைக்கடை, வகுரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக்கடை, வசந்தபுரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு, நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது முதன்மைச் செயலர் உணவு பொருள் வழங்கல் துறை எம்.பி. நிர்மலா, உணவு பொருள் வழங்கல் துறை ஆணையாளர் ஸ்வரன்சிங் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் எம். சந்திரசேகரன், மாவட்ட ஆட்சித்தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வின்போது நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களுக்கு சீரான முறையில் தரமான அரிசி வழங்கப்படுகிறதா, அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப்பொருட்கள் இருப்பில் உள்ளதா என்பதையும், ஆய்வு செய்ததோடு அங்குள்ள பொதுமக்களிடம் நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி நல்ல முறையில் வழங்கப்படுகிறதா என்பதை உணவுத்துறை அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஆய்வு செய்தபோது அங்கு அரிசி, கோதுமை சர்க்கரை, துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதையும், கிடங்கிலிருந்து நியாயவிலைக்கடைகளுக்கு லாரிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பும் முறை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். கிடங்கிலிருந்து நியாயவிலைக்கடைகளுக்கு கொண்டு செல்லும் அரிசி மூட்டைகளின் எடையும் சரிபார்க்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுவிநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுகூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 1 கோடி 84 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் ஒப்பற்ற திட்டத்தை வழங்கி வருகிறார். மாதம் ஒன்றுக்கு 3.16 இலட்சம் மெ.டன் தரமான அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. மேலும் 1 கிலோ துவரம்பருப்பு ரூ.30க்கும் 1 கிலோ உளுந்தம்பருப்பு ரூ.30க்கும், பாமாயில் 1 லிட்டர் ரூ.25-க்கும், மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.4,900 கோடி மானியமாக வழங்கியுள்ளார்கள். இதனடிப்படையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.291 அரசு மானியமாக வழங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்த ஒரு கிலோ அரிசி ரூ.20 -க்கு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 279 கூட்டுறவு மற்றும் அமுதம் நியாயவிலை அங்காடிகளில் இன்றுவரை 30,600 குவிண்டால் தரமான அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு முழுமையான உணவு பாதுகாப்பை அம்மா அளித்து வருகிறார். அதன் காரணமாக மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு விளக்கு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கி வந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீடு தற்போது 29,060 கிலோ லிட்டராக குறைந்துள்ளது. தமிழக முதல்வர் தமிழகத்தின் முழுத் தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். தமிழக முதலமைச்சர் புதுடெல்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்படுவது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்தில் எடுத்த நடவடிக்கையின் காரணமாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் மூலம் 19,143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11,655 நபர்கள் கைது செய்யப்பட்டு அதில் 418 நபர்கள் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 702 முழுநேர நியாயவிலைக்கடைகள் 197 பகுதி நேர நியாயவிலைக்கடைகள் மூலம் மாதந்தோறும் 4.98,847 குடும்ப அட்டைதாரர்களுக்கு சராசரியாக 5800 மெ.டன் விலையில்லா அரிசி வழங்கப்பட்டுள்ளது. நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளிலிருந்து அனுப்ப்பபடும் அரிசி தரம் தரக்கட்டுப்பாடு அலுவலர்களால் தீவர பரிசோதனைக்கு பின்னரே அங்காடிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தரமற்ற அரிசியை கிடங்கிலிருந்து அனுப்பக் கூடாது. விலையில்லா அரிசி சரியான எடையில் பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும், பொதுவிநியோகத்திட்டத்தை செயல்படுத்துவதில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ்டுபடவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் உணவு பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வுத்துறை, காவல் கண்காணிப்பாளர் ஆசியம்மாள் , சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர்,உ.தனியரசு, சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செங்குட்டுவன், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கம் முத்துகுமாரசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தர்ராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 18 hours ago |
ஆனியன்ப்ரை4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி