முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் கொல்லப்பட்டதை அறிந்துகொள்ள கசாப் ஆர்வம்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, மே 7 - அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அறிந்துகொள்வதில் மும்பை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள அஜ்மல்கசாப் மிகுந்த ஆர்வம் செலுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல்கசாப் தற்போது மும்பை ஆர்தர் ரோட்டில் உள்ள அதிக பாதுகாப்பு மிக்க மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறான். சமீபத்தில் பாகிஸ்தானில் அமெரிக்க அதிரடிப்படை வீரர்களால் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிந்துகொள்வதில் கசாப் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக அந்த சிறை அதிகாரி ஒருவர் கூறினார். ஒசாமா எப்படி கொல்லப்பட்டார்? என்பது குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை அவன் கேட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். 

பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் கசாப்பிற்கு கடந்த புதன்கிழமைதான் எப்படியோ தெரிந்திருக்கிறது. இதையடுத்து பின்லேடனைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள அவன் ஆர்வம் காட்டிவருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார். கசாப்பின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருக்கும் வீரர்கள் பின்லேடனைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோதுதான் கசாப் இந்த விஷயத்தைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். அப்போதுமுதல் அவன் தனது பாதுகாவலர்களிடம் பின்லேடன் எப்படி கொல்லப்பட்டான்  என்று கேட்டான். ஆனால் பின்லேடன் கொல்லப்பட்ட எந்த விஷயத்தையும் பாதுகாப்பு அதிகாரிகள் அவனிடம் சொல்ல மறுத்துவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்