முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிப்காட் அமைக்க எதிர்ப்பு - திருமங்கலத்தில் முற்றுகை

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம்,பிப்.23 - திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பாலபாரதி எம்.எல்.ஏ. உட்பட 144 பேர் கைது செய்யப்பட்டனர்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்திட அரசாணை பிறப்பித்த தமிழக அரசு, 2 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் தேவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இந்த போராட்டத்தை திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி துவக்கி வைத்தார். 

இதில் திருமங்கலம் மார்க்சிஸ்ட் செயலாளர் முத்துராமன், முன்னாள் செயலாளர் சுப்புக்காளை, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சந்தானம், அய்யாவு, போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாலபாரதி எம்.எல்.ஏ உட்பட 144 பேரை திருமங்கலம் டி.எஸ்.பி. முருகேசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்