எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,மே.10 - மதுரை மோசடி மன்னன் விவேகானந்தன் பண மோசடி செய்யும் போது எவ்வாறு தெளிவாக செயல்பட்டாரோ, அதே போன்று போலீசாரிடம் சிக்கிய பின்பு அவர்களிடம் இருந்து தப்பிப்பதிலும் செயல்பட்டுள்ளார். மதுரை அருகே திருநகரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய விவேகானந்தன் தனது பகட்டான வாழ்க்கையால் பலரை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாகவும், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறியும், குறைந்த விலையில் வெளிநாட்டு தங்கங்களை கொடுப்பதாகவும் கூறி ஏராளமானோரிடம் இருந்து பல கோடி ரூபாய்களை சுருட்டிக் கொண்டு குடும்பத்துடன் தலைமறைவானார். இவரது மோசடிக்கு மனைவி பிருந்தா, மைத்துனர் கெவின் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கோவாவில் விவேகானந்தனை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும் போது அவர்களிடம் இருந்து விவேகானந்தன் தப்பி விட்டார். அதனைத் தொடர்ந்து மதுரையில் பதுங்கியிருந்த அவரது மனைவி பிருந்தாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் விவேகானந்தன் போலீசாரிடம் அகப்பட்டதும், அவர்களிடம் இருந்து தப்பியதும் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. திருநகரில் இருந்து தலைமறைவான விவேகானந்தன் குடும்பத்தினர் வீட்டு உபயோக பொருட்களை பெங்களூரில் ரூ. 50 ஆயிரத்திற்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் பூட்டி வைத்து விட்டு கோவாவில் மாதம் ரூ. 22 ஆயிரத்திற்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குடியேறியுள்ளனர். விவேகானந்தனிடம் பணம் கொடுத்து ஏமாந்தோர் திருநகர் போலீசில் புகார் செய்தனர். அதனை தொடர்ந்து விவேகானந்தன் குடும்பத்தினரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரும், பல்வேறு பகுதிகளிலும் கேரளா, கர்நாடகாவிலும் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
இந்நிலையில் விவேகானந்தன் பயன்படுத்திய செல்போன்களை தொடர்பு கொண்ட போது அவை அனைத்தும் உபயோகத்தில் இல்லை. அதனை தொடர்ந்து போலீசார் ஐ.எம்.ஏ. எண்களை சேகரித்தனர். அதிலும் அவர்களுக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கிருஷ்ணகிரி டோல்கேட்டை தாண்டி விவேகானந்தனின் கார் சென்றதாக தகவல்கள் தெரிவித்தன. கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு சென்ற போலீசார் அங்கு விவேகானந்தன் குறித்து விசாரித்தனர். இதற்கிடையில் பெங்களூர் வீட்டில் பூட்டி வைத்திருந்த வீட்டு உபயோக பொருட்களை விற்பதற்காக அங்குள்ள புரோக்கரிடம் விவேகானந்தன் தொடர்பு கொண்டுள்ளார். அப்பகுதியில் விவேகானந்தனை விசாரித்து கொண்டிருந்த தனிப்படையினருக்கும், புரோக்கருக்கும் தொடர்பு ஏற்படவே விவேகானந்தன் கோவாவில் இருப்பதை உறுதி செய்தனர்.
விவேகானந்தனை பிடிக்க அவனை போன்றே போலீசாரும் நாடகமாட தொடங்கினர். வீட்டு பொருட்களை ரூ. 5 லட்சத்திற்கு விற்பனை செய்து தருமாறு புரோக்கரிடம் விவேகானந்தன் கூறியுள்ளார். இதையறிந்த போலீசார் புரோக்கர் மூலம் பொருட்களை பெற்று கொள்ள ஆள் இருப்பதாகவும், பொருட்களை எப்போது பார்க்கலாம் என்வும் விவேகானந்தனுக்கு தெரிவித்தனர். முதல் நாள் தர்மசாலா என்ற இடத்திற்கு பணத்துடன் வருமாறு விவேகானந்தன் புரோக்கரிடம் தெரிவித்துள்ளார். விவேகானந்தன் குறிப்பிட்ட இடத்திற்கு புரோக்கர் சென்றார். அவருடன் போலீசார் வந்திருக்கலாம் என்று சந்தேகித்த விவேகானந்தன் சற்று தள்ளியிருந்து புரோக்கரின் நடவடிக்கைகளை கவனித்து விட்டு அன்று சந்திப்பதை தவிர்த்து விட்டார்.
அன்று இரவு மீண்டும் புரோக்கருடன் தொடர்பு கொண்டு நாளை மங்களூருக்கு பணத்துடன் வருமாறு விவேகானந்தன் தெரிவித்தார். அதன்படி மங்களூர் சென்ற புரோக்கரை அன்றும் விவேகானந்தன் சந்திக்கவில்லை. இரண்டு நாட்களிலும் புரோக்கருடன் போலீசார் வரவில்லை என்பதை உறுதி செய்த விவேகானந்தன், மறுநாள் உடுப்பிக்கு பணத்துடன் வருமாறு புரோக்கரிடம் தெரிவித்தார். அவரும் மறுநாள் காரில் உடுப்பிக்கு சென்றார். அப்போது புரோக்கரை சந்திக்க நெருங்கிய விவேகானந்தனை புரோக்கர் காரின் பின்சீட்டில் மறைந்திருந்த 2 போலீசார் பிடித்தனர். கைது செய்யப்பட்ட விவேகானந்தன் கோவாவில் உள்ள வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். வீட்டில் இருந்த ஒன்றே கால் கிலோ தங்க கட்டிகள், ஒன்றே கால் கோடி ரூபாய், விலையுயர்ந்த கைக் கெடிகாரம், விலையுயர்ந்த ஒரு சொகுசு பைக், மூன்று சொகுசு கார்கள் ஆகியவற்றை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.
அதனை தொடர்ந்து கோவாவில் உள்ள பானாஜி கோர்ட்டில் விவேகானந்தனை ஆஜர்படுத்திய தனிப்படை போலீசார் தமிழகத்தில் விசாரணைக்காக அவரது பஜ்ரோ காரில் அழைத்து வந்தனர். ஓரிடத்தில் காரை நிறுத்திய தனிப்படை போலீசார் கடையில் டீ குடித்தனர். இரண்டு போலீசார் விவேகானந்தன் தப்பி விடாமல் இருக்க காரின் அருகே நின்றனர். காரை ஓட்டி வந்த கோவா போலீஸ்காரர், என்ஜினை ஆப் செய்து விட்டு சாவியை கையில் வைத்து கொண்டி டிரைவர் சீட்டிலேயே அமர்ந்திருந்தார். அப்போது குழந்தைகளுக்கு காற்று கிடைக்கவில்லை. அவர்கள் ஏ.சியிலேயே இருந்து பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்காகவாவது ஏ.சியை ஆன் செய்யுமாறு டிரைவர் சீட்டில் இருந்த போலீஸ்காரரிடம் விவேகானந்தன் கெஞ்சி கேட்டார். குழந்தைகளுக்காக பரிதாபப்பட்ட போலீஸ்காரர், சாவியை போட்டு ஏ.சி.யை ஆன் செய்தார்.
இந்நிலையில் திடீரென பின்சீட்டில் இருந்த விவேகானந்தன் முன் சீட்டிற்கு தாவி குதித்தார். டிரைவர் சீட்டில் இருந்த போலீஸ்காரரை வெளியில் தள்ளி விட்டு விட்டு காரை ஸ்டார்ட் செய்து மின்னல் வேகத்தில் பறந்து மறைந்தார். இதைக் கண்ட தனிப்படை போலீசார் விவேகானந்தனை பின்தொடர்ந்தனர். சுமார் 4 கி.மீ. தூரத்தில் ரோட்டின் ஓரத்தில் விவேகானந்தனின் கார் மட்டும் நிறுத்தப்பட்டிருந்தது. தனிப்படை போலீசார் சென்று பார்த்த போது உள்ளே யாரும் இல்லை. குழந்தைகளுடன் விவேகானந்தன் எஸ்கேப் ஆகி விட்டார். மோசடி செய்த போது தான் பெற்ற பணத்திற்காக யாரிடமும் எழுதிக் கொடுக்கவோ, செக்குகள் கொடுக்கவோ, உறுதி பத்திரம் எழுதிக் கொடுக்கவோ இல்லாமல் தான் மாட்டிக் கொள்ளாதவாறு தெளிவாக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதே போன்றே போலீசாரிடம் மாட்டிக் கொண்ட பின்னரும் மிக தெளிவாக தப்பி சென்றுள்ளார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 12 hours ago |
ஆனியன்ப்ரை4 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.