முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி மீது முன்னாள் அமைச்சர் கலைமணி தாக்கு

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

காரைக்கால், செப்.27 - காரைக்கால் மீனவர்களையும், விசை படகுகளையும் விடுவிக்க மத்திய-மாநில  அரசுகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், விரைவில் மீனவர்களையும், விசை படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் நேற்று காரைக்கால் மாவட்ட கலெக்டர்  அலுவலகம் எதிரே காரைக்கால் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மீனவர் பிரிவு செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான கலைமணி தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். அவர் பேசும்போது, இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கடலின் பங்கு அதிகம். இதனால் பெருமளவு அன்னிய செலவாணி மிச்சமாகிறது. இந்த நிலையில் எந்த நேரத்தில் இலங்கை கடற்படை வருமோ என்ற அச்சத்தில் மீனவர்கள் தொழில் செய்கின்றனர். 50 நாட்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் வாடுகின்றனர். விசை படகுகளும் விடுவிக்கப்படவில்லை. 

மீனவர்களின் அச்சத்திற்கு காரணம் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு தான். 1976-ல் கச்சத்தீவை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி இலங்கைக்கு விட்டுக் கொடுத்தபோது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மவுனமாக இருந்தார். இதற்கு காரணம் ஊழல் வழக்குகளில் இருந்தும், சர்க்காரியா கமிஷனிடம் இருந்தும் தன்னை காத்துக் கொள்ளவே மவுனமாக இருந்தார். 

அதன் விளைவு இன்று மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகின்றனர். மீனவர்களின் நலனுக்காக கச்சத்தீவை மீட்போம் என்று குரல் கொடுத்தவர் அம்மா. வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வென்று அம்மா பிரதமர் ஆனால் மீனவர் நலனும் காக்கப்படும். கச்சத்தீவும் மீட்கப்படும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்