முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அதிபர் சர்தாரி வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக்.16 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க பாக். அரசு முடிவு செய்துள்ளது.  பாகிஸ்தானில் அதிபராக இருந்து கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றவர் ஆசிப் அலி சர்தாரி.  இவர் மீது பிரதமர் அலுவலகம் கட்டியது, கோல்ப் மைதானம் அமைத்தது முதலியவற்றில் முறைகேடு நடந்ததாகக் கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவரது மஏனைவி பெனசிர் பூட்டோ ஆட்சியின்போதும் ஊழல் நடந்ததாகக் கூறப்பட்டது. 

இவரது பதவிக்காலம் முடிந்ததை அடுத்து இவர் மீதான வழக்கை விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே இவர் வரும் 29_ம் தேதி கோர்ட்டில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டியது வரும் என்று  பாகிஸ்தான் நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர். இவரது ஆட்சியின்போது இரு சுவிஸ் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்ததில் நடந்த முறைகேடு குறித்தும் விசாரணை நடத்தப்படும். இந்த ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.75 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

இந்த வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக அதிகாரிகள் சுவிஸ் அரசுக்கு கடிதம் எழுதாமல் தாமதம் செய்து வந்தனர். போதிய ஆதாரங்கள் இல்லை என்று சுவிஸ் கோர்ட் கடந்த ஜூன் மாதம் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்தது. சர்தாரி வழக்கை விசாரிக்க முடியாது என்று கூறிய.தால் கிலானி பிரதமர் பதவி பறிபோனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்