முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன்சிங் இன்று ரஷ்யா செல்கிறார்

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, அக். 20 - பிரதமர் மன்மோகன்சிங் இன்று 20 ம் தேதி சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குச்  செல்கிறார். கூடங்குளம் அணு உலை பற்றி ரஷ்ய அதிபர் புடினுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்துவார். 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பின் பேரில் மன்மோகன்சிங் ரஷ்யா செல்வதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாளை 21 ம் தேதி இந்திய _ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதில் மன்மோகன்சிங்கும், புடினும் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்துவார்கள். இரு நாடுகளிடையே பாதுகாப்பு, முதலீடு மற்றும் சர்வ&தேச ஏவிவகாரங்கள் பற்றி அவர்கள் பேசுவார்கள். அணுசக்தி பற்றி விவாதிக்கும் அவர்கள் கூடங்குளம் அணு உலை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்கள். 

இந்திய கடற்படைக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை குத்தகைக்குப் பெறுதல், ராணுவ மற்றும் டாங்கி வெடிமருந்துகளை கூட்டாக தயாரித்தல் டி_90 டாங்கிகளை நவீனமயமாக்குதல், பேரிடர் மேலாண்மை, எரிசக்தி, பொருளாதாரம் ஆகியவை பற்றியும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் 22_ம் தேதி சீனா செல்கிறார். சீன பிரதமர் லீகெகியாங் அழைப்பின்பேரில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். 

சீனாவில் அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாராளுமன்ற சபாநாயகர் ஜாங்டே ஜியாங் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசுவார். அப்போது எல்லைப் பிரச்சனை வர்த்கம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்தும் பேச்சு வார்த்தை நடத்துவார்கள். பின்னர் 24_ம் தேதி பிரதமர்  இந்தியா திரும்புகிறார்.        

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்