இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள 'ஓட்டுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச. 17 - தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 தென் மாநில தேர்தல் அதிகாரிகள் நேற்று சென்னையில் கூடி ஆய்வு செய்தனர. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்படி மாநில தேர்தல் அதிகாரிகளை தலைமை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 தென் மாநில தேர்தல் அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை சென்னையில் கூடி ஆய்வு செய்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 2_வது மாடியில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு இந்திய தலைமை தேர்தல் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேர்தல் ஆணைய இயக்குனர் எஸ்.வி.சிங் முன்னிலை வகித்தார்.
தமிழகம் சார்பில் மாநில தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கலந்து கொண்டார். ஆந்திரா தேர்தல் அதிகாரி பன்வர்லால், கர்நாடகா தேர்தல் அதிகாரி அனில்குமார்ஷா, கேரளா தேர்தல் அதிகாரி நளினி நீட்டோ, புதுச்சேரி துணை தேர்தல் அதிகாரி ஸ்ரீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
5 மாநில தேர்தல் அதிகாரிகளும் 11 மணிக்கு தேர்தல் தொடர்பான ஆய்வைத் தொடங்கினார்கள். சுமார் 2 மணி நேரம் அவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
5 மாநிலங்களிலும் எத்தனை கட்டமாக ஓட்டுப் பதிவை நடத்த வசதி, வாய்ப்புகள் உள்ளது என்று பேசப்பட்டது. கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
மற்ற 3 பெரிய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது பற்றி பேசப்பட்டது.
2 கட்டங்களாக தென் மாநிலங்களில் ஓட்டுப்பதிவை நடத்தும்போது பாதுகாப்புப் படை வீரர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்த்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. அதற்கான கால அவகாசத்தை பொறுத்து 2 கட்ட ஓட்டுப் பதிவுக்கும் உள்ள கால இடைவெளியை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது.
மொத்தம் எத்தனை வாக்கு சாவடிகள் உள்ளன? அதில் எத்தனை ஓட்டுச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்பது பற்றியும் பேசப்பட்டது. அந்த ஓட்டுச் சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்காக மிகச் சரியான வாக்காளர் பட்டியலை தயாரிப்பது பற்றியும் 5 மாநில தேர்தல் அதிகாரிகள் பேசினார்கள். கள்ள ஓட்டு போடுவதை 100 சதவீதம் தடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்யவும் கூட்டத்தில் திட்ட மிடப்பட்டது.
இது தவிர மின்னணு எந்திரங்களை தயார்படுத்துவது, ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி கொடுப்பது, ஓட்டுப்பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்வது, மற்றும் தேர்தல் பிரசாரத்தையும், பிரசார செலவையும் கண்காணிப்பது ஆகியவைகள் பற்றியும் பேசப்பட்டது.
ஓட்டுப்பதிவின்போது இடையூறுகளை தவிர்க்க பறக்கும் படையை பயன் படுத்துவது பற்றி அதிகாரிகள் கருத்துக்கள் வெளியிட்டனர். ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான இடம், அதிகாரிகள் பற்றியும் பேசப்பட்டது.
ஏப்ரல், மே மாதங்களில் தென் மாநிலங்களில் வரும் உள்ளூர் பண்டிகை பற்றி கேட்கப்பட்டது. உள்ளூர் பண்டிகை நாட்களில் ஓட்டுப்பதிவை தவிர்க்கும் வகையில் கருத்துக்கள் திரட்டப்பட்டது.
5 மாநில தேர்தல் அதிகாரிகளின் இந்த கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு தலைமை தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்படும். அதற்கு ஏற்ப தலைமை தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை முடிவு செய்யும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி முறுக்கு![]() 6 hours 4 min ago |
வாழைத்தண்டு மோர் கூட்டு![]() 3 days 3 hours ago |
முட்டைக்கோஸ் வடை![]() 1 week 6 hours ago |
-
புதிய மாவட்டமாக ஆரணி உருவாக்கப்படுமா? - சட்டசபையில் அமைச்சர் பதில்
01 Apr 2023சென்னை : ஆரணி, கும்பகோணம் புதிய மாவட்டமாக உருவாக்கப்படுமா என்பது குறித்து சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-04-2023.
01 Apr 2023 -
மாணவிகளிடம் தரக்குறைவான பேச்சு: மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் கைது
01 Apr 2023மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மாணவிகளிடம், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் எஸ்.சி., எஸ்.டி.
-
கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்தினருடன் பார்வையிட்ட நடிகர் சூர்யா, ஜோதிகா
01 Apr 2023சிவகங்கை : திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா, தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை நேற்று பார்வையிட்டார்
-
மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டுகளை மறுவரையறை செய்ய குழு அமைக்க முடிவு : அமைச்சர் கே.என். நேரு தகவல்
01 Apr 2023சென்னை : தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்
-
பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஜூன் வரை இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 Apr 2023பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இம்மாதம் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் இயல்பைவிட அதிக வெப்பநிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
-
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்: 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு: அமைச்சர் தகவல்
01 Apr 2023சென்னை : காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்றும் 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இலவச ரேசன் பொருளுக்கு முண்டியடித்த மக்கள்: பாகிஸ்தானில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு
01 Apr 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச ரேசன் பொருள் வாங்க ஒரே சமயத்தில் மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர
-
வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 76 குறைப்பு
01 Apr 2023சென்னை : வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 76 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.
-
கொலை வழக்கில் ஒரு ஆண்டு சிறைக்கு பிறகு சித்து விடுதலை
01 Apr 2023பாட்டியாலா : கொலை வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை முடிந்து நேற்று சிறையில் இருந்து சித்து விடுதலை ஆனார்.
-
எக்ஸ்.பி.பி. வகை கொரோனா திரிபு தற்போது இந்தியாவில் பரவுகிறது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
01 Apr 2023புதுடெல்லி : முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி.
-
அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி: படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி
01 Apr 2023வாஷிங்டன் : அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த போது படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் பலி
01 Apr 2023வாஷிங்டன் : அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த சூறாவளியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
-
ஆருத்ரா நிறுவன மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரிக்க போலீசார் முடிவு
01 Apr 2023சென்னை : ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் மை டியர் டயானா
01 Apr 2023நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சசோகதரரும், பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் இணையத் தொடருக்கு 'மை டியர் டயானா' என பெயரிடப்பட்
-
சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 10 தொழிலாளர்கள் பலி
01 Apr 2023கார்டூம் : சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
-
இளைஞர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் மோடி உதவுகிறார்: மத்திய நிதி அமைச்சர் பேச்சு
01 Apr 2023இளைஞர்களின் புதிய முயற்சிகளுக்கு பிரதமர் மோடி உதவுகிறார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு ரூ. 4.46 கோடி செலவு
01 Apr 2023லண்டன் : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வெளிநாட்டு பயணங்களுக்காக இந்திய ரூபாய் மதிப்பின்படி 4.46 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
-
ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்: ஜெலன்ஸ்கி சூளுரை
01 Apr 2023கீவ் : போர் தொடங்கி 400 நாள் போர் நிறைவடைந்த நிலையில், ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை மீட்போம் என உக்ரைன் அதிபர் சூளுரைத்துள்ளார்.
-
படப்பிடிப்பைத் தொடங்கி வைத்த இளையராஜா
01 Apr 2023MAA AAI புரடக்ஷன்ஸ் LLP-ன் தயாரிப்பில் 'சஷ்டிபூர்த்தி' என்று பெயரிடப்பட்ட படத்தின் பூஜை இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது.
-
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் விமர்சையாக நடந்த ஆழித்தேரோட்டம் : லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
01 Apr 2023திருவாரூர் : திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நேற்று ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது.
-
‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக தைவான் சென்றார் கமல்ஹாசன்
01 Apr 2023‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக நடிகர் கமல்ஹாசன் தைவான் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
-
நாவல் படத்தை இயக்கும் ஐசுஜான்சி
01 Apr 2023கதை திரைக்கதை வசனம் எழுதி நாவல் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பெண் இயக்குனரான ஐசுஜான்சி.
-
புதிய நிதி ஆண்டில் அமலானது: சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம் : வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்
01 Apr 2023சென்னை : சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தன. வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது.
-
வரலட்சுமி நடிக்கும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்
01 Apr 2023கொன்றால் பாவம் இயக்குனரின் அடுத்தபடைப்பு மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆரவ் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றன