எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச. 17 - தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 தென் மாநில தேர்தல் அதிகாரிகள் நேற்று சென்னையில் கூடி ஆய்வு செய்தனர. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்படி மாநில தேர்தல் அதிகாரிகளை தலைமை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 தென் மாநில தேர்தல் அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை சென்னையில் கூடி ஆய்வு செய்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 2_வது மாடியில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு இந்திய தலைமை தேர்தல் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேர்தல் ஆணைய இயக்குனர் எஸ்.வி.சிங் முன்னிலை வகித்தார்.
தமிழகம் சார்பில் மாநில தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கலந்து கொண்டார். ஆந்திரா தேர்தல் அதிகாரி பன்வர்லால், கர்நாடகா தேர்தல் அதிகாரி அனில்குமார்ஷா, கேரளா தேர்தல் அதிகாரி நளினி நீட்டோ, புதுச்சேரி துணை தேர்தல் அதிகாரி ஸ்ரீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
5 மாநில தேர்தல் அதிகாரிகளும் 11 மணிக்கு தேர்தல் தொடர்பான ஆய்வைத் தொடங்கினார்கள். சுமார் 2 மணி நேரம் அவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
5 மாநிலங்களிலும் எத்தனை கட்டமாக ஓட்டுப் பதிவை நடத்த வசதி, வாய்ப்புகள் உள்ளது என்று பேசப்பட்டது. கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
மற்ற 3 பெரிய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது பற்றி பேசப்பட்டது.
2 கட்டங்களாக தென் மாநிலங்களில் ஓட்டுப்பதிவை நடத்தும்போது பாதுகாப்புப் படை வீரர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்த்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. அதற்கான கால அவகாசத்தை பொறுத்து 2 கட்ட ஓட்டுப் பதிவுக்கும் உள்ள கால இடைவெளியை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது.
மொத்தம் எத்தனை வாக்கு சாவடிகள் உள்ளன? அதில் எத்தனை ஓட்டுச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்பது பற்றியும் பேசப்பட்டது. அந்த ஓட்டுச் சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்காக மிகச் சரியான வாக்காளர் பட்டியலை தயாரிப்பது பற்றியும் 5 மாநில தேர்தல் அதிகாரிகள் பேசினார்கள். கள்ள ஓட்டு போடுவதை 100 சதவீதம் தடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்யவும் கூட்டத்தில் திட்ட மிடப்பட்டது.
இது தவிர மின்னணு எந்திரங்களை தயார்படுத்துவது, ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி கொடுப்பது, ஓட்டுப்பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்வது, மற்றும் தேர்தல் பிரசாரத்தையும், பிரசார செலவையும் கண்காணிப்பது ஆகியவைகள் பற்றியும் பேசப்பட்டது.
ஓட்டுப்பதிவின்போது இடையூறுகளை தவிர்க்க பறக்கும் படையை பயன் படுத்துவது பற்றி அதிகாரிகள் கருத்துக்கள் வெளியிட்டனர். ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான இடம், அதிகாரிகள் பற்றியும் பேசப்பட்டது.
ஏப்ரல், மே மாதங்களில் தென் மாநிலங்களில் வரும் உள்ளூர் பண்டிகை பற்றி கேட்கப்பட்டது. உள்ளூர் பண்டிகை நாட்களில் ஓட்டுப்பதிவை தவிர்க்கும் வகையில் கருத்துக்கள் திரட்டப்பட்டது.
5 மாநில தேர்தல் அதிகாரிகளின் இந்த கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு தலைமை தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்படும். அதற்கு ஏற்ப தலைமை தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை முடிவு செய்யும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
வாக்கு திருட்டு புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : கர்நாடக அரசு நடவடிக்கை
21 Sep 2025பெங்களூரு : 2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து வாக்கு திருட்டு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
21 Sep 2025மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்
21 Sep 2025கர்நாடகா : கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா.
-
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் உயிரிழப்பு
21 Sep 2025காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
பிரதமரின் தாயாரை அவமதித்ததாக ஆர்.ஜே.டி. மீது பா.ஜ.க. மீண்டும் குற்றச்சாட்டு
21 Sep 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பா.ஜ.க. மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி
-
4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம்
21 Sep 2025டாக்கா : 4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.