எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு, டிச. 18 - புதுக்கோட்டை மீனவர்கள் 50 பேரின் காவலை இலங்கை நீதிமன்றம் செவ்வாய்கிழமை (இன்று) மீண்டும் டிசம்பர் 30 வரை நீட்டித்து உத்திரவிட்டது.
கடந்த நவம்பர் 20 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டை பட்டினம் பகுதியை சேர்ந்த ஆனந்த், குமரேசன், குரளரசன, முத்தையா ஆனந்த் உள்ளிட்ட 20 மீனவர்கள் கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிகல் மைல் தொலைவில் தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 20 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு 5 விசைப் படகுகளையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 20 பேரையும் இலங்கை காங்கேசன் துறைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.நவம்பர் 21ம் தேதி மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள், யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே போன்று கடந்த டிசம்பர் 12ம் தேதி அதிகாலை நெடுந்தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 50 பேரின் காவல் செவ்வாய்கிழமை முடிவடைந்ததை அடுத்து மீண்டும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மீனவர்களை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்கள் 50 பேருக்கும் டிசம்பர் 30ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 50 பேரும் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


