முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மாவின் கள்ளக் காதலனை கடத்தி உதைத்த மகள்

வெள்ளிக்கிழமை, 20 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.20 - அம்மாவின் கள்ளக்காதலனை காரில் கடத்தி அடித்து உதைத்து காயப்படுத்தி சாலையில் வீசிச்சென்ற பெண்ணையும் அடியாட்களையும் போலீசார் தேடி வருகின்றனர். ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 22), பெயிண்டர்.   கடந்த 15​ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் பின்னர் திரும்பி வர வில்லை. உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இது குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசில் மனைவி சுமதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் கடந்த 18​ந்தேதி விழுப்புரம் அருகே ரோட்டு ஓரத்தில் தலை மற்றும் கை, கால்களில் படுகாயத்துடன் கிடந்த வாலிபர் ஒருவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில் அவர் வசந்தகுமார் என்பது தெரிந்தது. சென்னை திரும்பிய அவர் ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 15​ந்தேதி என்னை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது. அவர்கள் கார் உள்ளேயே வைத்து என்னை சரமாரியாக தாக்கினார்கள். இதில் எனது கை, தலையில் காயம் ஏற்பட்டது. எதற்காக என்னை கடத்துகிறீர்கள் என்று கேட்டபோது, ஒன்றும் கூறாமல் விழுப்புரம் அருகே சாலை ஓரத்தில் காரில் இருந்து உருட்டி விட்டு சென்று விட்டனர். எனக்கும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவரின் தூண்டுதலில் பேரிலேயே மர்ம கும்பல் கடத்தி தாக்கி இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. 

இவ்வாறு கூறி உள்ளார். 

வசந்தகுமாரிடம் இன்ஸ்பெக்டர் சங்கர் விசாரணை நடத்தினார். கள்ளக்காதல் தகராறில் இந்த கடத்தல் சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக பெண் ஒருவரிட மும் விசாரணை நடந்து வருகிறது. கடத்தலுக்கு வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் விசாரிக்கிறார்கள். 

இது தொடர்பாக சுமதி கண்ணீர் மல்க கூறியதாவது:​ கடந்த 8 மாதத்துக்கு முன்பு தான் எனக்கும் வசந்தகுமாருக்கும் திருமணம் நடந்தது. கடந்த 15​ந்தேதி மதியம் 1 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே செல்வதாக என்னிடம் கூறி சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. மறுநாள் காலை வரை அவர் திரும்பிவராததால் எனக்கு பயம் ஏற்பட்டது. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது பலமுறை கட் செய்தார். மீண்டும் போன் செய்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது. 

இந்த நிலையில் கடந்த 18​ந்தேதி விழுப்புரம் அருகே சாலை ஓரத்தில் வசந்தகுமார் காயத்துடன் கிடந்ததாகவும், அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாகவும் கணவரின் உறவினருக்கு போன் மூலம் தகவல் கிடைத்தது. நாங்கள் பதறியபடி அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த போது உடலில் துணி எதுவும் இல்லாமல் நிர்வாண நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அவரது கை, முகம், தலை வீங்கி போய் இருந்தது. காரில் தன்னை 3 பெண்கள், மற்றும் 2 ஆண்கள் கடத்தி சென்று தாக்கி விட்டு ரோட்டில் வீசி சென்றதாக அவர் கூறினார். 

கல்யாணத்திற்கு முன்பே அவருக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது பின்னர் அதனை நிறுத்தி விட்டார். இருப்பினும் அந்த பெண் தொடர்ந்து கணவருக்கு போன் மூலம் தொல்லை கொடுத்து வந்தார். அந்த பெண்தான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி உள்ளார். மயக்க ஊசி போட்டும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தும் காரில் கடத்தி சென்றுள்ளனர். 

இதனால் அவருக்கு என்னையே அடையாளம் தெரிய வில்லை. சுய நினைவு இழந்தவர் போல் காணப்படுகிறார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தோம். இப்போது தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவரை கடத்தி தாக்கியவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் வசந்துக்கும், கண்ணம்மாபேட்டை எஸ்.பி.கார்டன் தெருவைச்சேர்ந்த ரேகா (எ) அலமேலு (எ) சரிபா (42) என்கிற பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது சரிபாவின் மகள் ராபியதுல்லுக்கு (21) பிடிக்கவில்லை. இது சம்பந்தமா வசந்தகுமாரை கண்டித்துள்ளார். இதனிடையே ராபியத்துல், சரியா மற்றும் இரண்டு அடியாட்களுடன் 16-ந் தேதி சாலையில் நடந்து சென்ற வசந்தகுமாரை கடத்தி விழுப்புரம் அருகே வைத்து அடித்து உதைத்துள்ளனர். பின்பு சாலையில் அவரை போட்டு விட்டு ஓடிவிட்டனர்.

இது பற்றி ஐஸ்அவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து சரிபாவை கைது செய்தனர். மகள் ராபிய்த்துல், கார் டிரைவர் உடன் சென்ற 2 அடியாட்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்