முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை மீனவர்கள் காவல் ஜனவரி 6 வரை நீட்டிப்பு

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

நாகை, டிச. 27 - கடந்த 11-ஆம் தேதியன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 110 பேரது காவல் ஜனவரி 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 110 பேர், கடந்த 11-ஆம் தேதியன்று கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடித்துச் சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் இன்று துங்காமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்கள் காவலை வரும் 6-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மீனவர்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.மீனவர்கள் காவல் நீட்டிக்கப்பட்ட தகவலை, நாகப்பட்டினம் மீனவர்கள் சங்கத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் ஃபெர்னாண்டோ உறுதிப் படுத்தியுள்ளார்.

நாகை மீனவர்கள் 110 பேரையும் விடுவிக்கக் கோரி 54 கிராமங்களைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 21 முதல் 24-ஆம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். மீனவ சங்க பிரதிநிதிகள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்