முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்நோக்கு மருத்துவமனை பணியிடங்களுக்கு கலந்தாய்வு

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.3 _ விரைவில் செயல்பட உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்குத் தேவையான 232 பணியிடங்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் கருவிகள் பொருத்தும் பணியும் நடைபெற்று வருகின்றன. பணிகள் அனைத்தையும் ஜனவரி 15_ஆம் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரிய 157 செவிலியர்கள் பணியிடங்களுக்கும், மருந்தாளுநர் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு 75 இடங்களுக்குமான கலந்தாய்வு சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் திங்கள்கிழமை (டிச.30) நடைபெற்றது.

இதில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சுய விருப்பத்தின் பேரில் இந்த மருத்துவமனையில் பணிபுரிய விண்ணப்பித்திருந்தனர். அதில் செவிலியர்கள் 15 பேரும், மருத்தும் சார்ந்த பணியிடங்களுக்கு 7 பேரும் நியமனம் செய்யப்பட்டனர்.

இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் அதிகாரி கூறுகையில் ஏற்கெனவே பணிபுரிந்து வருவோரை விருப்பத்தின் பேரில் இங்கு நியமனம் செய்கிறோம்.

இது புதியதாக கலந்தாய்வு நடத்தி நபர்களைத் தேர்ந்தெடுக்க கால தாமதம் ஏற்படும். இதனால் ஏற்கெனவே பணிபுரிபவர்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம் அந்த பணியாளர்கள் நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாகவும், திறம்பட பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்