முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாம்ஷெட்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜி பிரச்சாரம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

ஜாம்ஷெட்பூர், ஜூன் 19 - ஜாம்ஷெட்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். உருக்கு நகரம் என்றழைக்கப்படும் ஜாம்ஷெட்பூர் எம்.பி. தொகுதிக்கு வருகிற ஜூலை மாதம் 1 ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல்  காங்கிரஸ் சார்பில் சுமன் மகாத்தோ போட்டியிடுகிறார். 

இவருக்கு ஆதரவு தெரிவித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்த தொகுதியில் இரண்டு நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

இந்த தகவலை வேட்பாளர் சுமன் மகத்தோ தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும் மத்திய  ரயில்வே துறை இணை அமைச்சர் முகுல்ராயும்  இந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வருவதாக ஏற்கனவே தன்னிடம் உறுதி மொழி அளித்திருந்ததாகவும் இவர்கள் விரைவில் ஜாம்ஷெட்பூர் வருவார்கள் என்றும் எந்த தேதி என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த தொகுதியில் தனக்கு ஆதரவு அதிகரித்து வருவதைக் கண்டு எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன என்றும் மகாத்தோ தெரிவித்தார்.

திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் தான் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டு இருப்பதாகவும் தனக்கு வெற்றி நிச்சயம் என்றும் அவர் கூறினார்.

இந்த தொகுதியில் வருகிற ஜூலை 1 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்