முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் நியமனம்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.30 - திருநெல்வேலி ஒருங்கிணைப்பு மாவட்ட செயலாளராக செந்தூர்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர் என செயல்பட்டு வரும் மாவட்ட அ.தி.மு.க.  அமைப்புகள், நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு அமைப்பு ரீதியாக திருநெல்வேலி மாவட்டம் என ஒருங்கிணைக்கப்பட்டு கீழ்கண்ட சட்டமன்றத்தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.

பாளையங்கோட்டை சட்டமன்றத்தொகுதி, திருநெல்வேலி சட்டமன்றத்தொகுதி, சங்கரன் கோவில் (தனி) சட்டமன்ற தொகுதி, வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்றத்தொகுதி, கடையநல்லூர் சட்டமன்றத்தொகுதி, தென்காசி சட்டமன்ற தொகுதி, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி. 

திருநெல்வேலி மாவட்ட செயலாளர் பொறுப்பில் பி.செந்தூர் பாண்டியன் எம்.எல்.ஏ. (கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி) நியமிக்கப்படுகிறார். திருநெல்வேலி மாவட்டத்திற்கு, மாவட்ட அளவில் திருத்தி அமைக்கப்பட்ட கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

அமைப்பு ரீதியாக தற்போது ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும், மாவட்ட செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கட்சிம் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்