எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜுலை - 7 - ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை இன்னொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியதால் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாநிதி மாறனும் ஒரு குற்றவாளி என தாங்கள் சந்தேகிப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு அறிக்கை அளித்ததின் அடிப்படையில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர், தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்கள் சித்தார்த் பெகூரா, சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஊழல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பின்கீழ் மத்திய புலனாய்வுத் துறை நிறுவனமான சி.பி.ஐ. நடத்திவருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு குற்றப்பத்திரிகைகள் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 2004 ம் ஆண்டுமுதல் 2007 ம் ஆண்டுவரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறனும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் எழும்பின. சென்னையைச் சேர்ந்த ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனுக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழங்குவதில் தயாநிதி மாறன் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 6 ம் தேதி சிவசங்கரனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது தங்களக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை வழங்காமல் தயாநிதி மாறன் இழுத்தடித்தது உண்மைதான் என்று சிவசங்கரன் சி.பி.ஐ.யிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணை விபரங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அப்போது ஆஜரான சி.பி.ஐ. அதிகாரிகள் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாநிதி மாறனும் ஒரு குற்றவாளி என தாங்கள் சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் என்ற நிறுவனத்தின் அதிபர் அனந்தகிருஷ்ணன் தயாநிதி மாறனின் நெருங்கிய நண்பர். அனந்தகிருஷ்ணனின் கம்பெனிக்கு ஏர்செல் கம்பெனியை விற்பதற்காக ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை வழங்காமல் தயாநிதி மாறன் வேண்டுமென்றே காலம்தாழ்த்தி வந்தார் என்பது தங்களுடைய விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இந்த காலதாமதத்தை அடுத்து ஏர்செல் அதிபர் சிவசங்கரன் தனது கம்பெனியை மேக்ஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்ட்ரா நிறுவனத்திற்கு விற்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. தங்களது விசாரணையில் தயாநிதி மாறனும் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஒரு குற்றவாளி என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் ஊழல் வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடமே தான் தனது ஜவுளித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாக தயாநிதி மாறன் ஏற்கனவே கூறியிருக்கிறார். இப்போது இவர் குற்றவாளி என சந்தேகிப்பதாக சி.பி.ஐ. கூறியுள்ளதால் இவர் எந்த நேரமும் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாநிதி மாறனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பா.ஜ.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்திவந்தன என்பது குறிப்பிடத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Jan 2026சென்னை, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட'த்தை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட
-
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்:ஐ.நா. உடனடியாக தலையிட கொலம்பியா வலியுறுத்தல்
03 Jan 2026கராகஸ், வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கொலம்பியா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
-
அறநிலையத்துறை சார்பில் ரூ.109 கோடி மதிப்பிலான 19 புதிய திட்டப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
03 Jan 2026சென்னை, அறநிலையத்துறை சார்பில் ரூ.15 கோடியே 30 லட்சம் செலவில் 7 கோவில்களில் 10 முடிவுற்ற பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தா
-
வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? வெளியான புதிய கருத்து கணிப்பால் பரபரப்பு
03 Jan 2026சென்னை, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பான ஐ.டி.பி.ஐ., தமிழகம் முழுவதும் 2026 சட்டசபை தேர்தல் குறித்து கருத்துகணிப்பு மேற்கொண்டுள்ளது.
-
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு
03 Jan 2026சென்னை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை மேற்கொண்டது.
-
சத்தீஸ்கரில் 2 இடங்களில் என்கவுண்டர்: 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
03 Jan 2026ராய்பூர், சத்தீஸ்கரில் பதுங்கிருந்த 14 நக்சலைட்டுகளை என்கவுண்டரில் பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-01-2026
03 Jan 2026 -
சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள்முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
03 Jan 2026சென்னை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 750 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கை கடற்படையால் தற்போது கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
03 Jan 2026சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கைக் காவலில் இருக்கும் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் பட
-
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: ரஷ்யா, ஈரான் கடும் கண்டனம்
03 Jan 2026மாஸ்கோ, வெனிசுலா மீதான தாக்குதலுக்கு கியூபா, கொலம்பியா மற்றும் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது
03 Jan 2026சென்னை, இலங்கை கடற்படையால் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வெனிசுவேலா அதிபர் மதுரோவை சிறைப்பிடித்த அமெரிக்க ராணுவம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
03 Jan 2026நியூயார்க், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளை கேட்காமலே நிறைவேறும் தி.மு.க. அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு
03 Jan 2026சென்னை, அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் கேட்காமலே நிறைவேறும் தி.மு.க.
-
மராட்டிய உள்ளாட்சி தேர்தல்: 66 இடங்களில் பா.ஜ.க., சிவசேனா கட்சியினர் போட்டியின்றி வெற்றி
03 Jan 2026மும்பை, மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் 66 இடங்களில் பா.ஜ.க., சிவசேனாவை சேர்ந்தவர்கள் போட்டியின்றி வெற்றிப்பெற்றுள்ளனர்.
-
ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி
03 Jan 2026வாஷிங்டன், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், 4 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
-
வருகிற 9-ம் தேதி அ.தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணல் துவக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
03 Jan 2026சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.
-
கூட்டணி குறித்து த.வெ.க.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தையா..? செங்கோட்டையன் விளக்கம்
03 Jan 2026ஈரோடு, விஜய் தான் தமிழகத்தின் முதல்வர் என ஏற்றுக்கொள்கிற கூட்டணிதான் த.வெ.க.வில் இணையும் என்று தெரிவித்துள்ள செங்கோட்டையன் கூட்டணி குறித்து த.வெ.க.வுடன் காங
-
தகவல்கள், படங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
03 Jan 2026புதுடெல்லி, பதிவு செய்யப்படும் தகவல்கள், படங்களுக்கு சமூக வலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
-
மெக்சிகோவில் நிலநடுக்கம்: 2 பேர் பலி
03 Jan 2026மெக்சிகோ சிட்டி, தெற்கு மற்றும் மத்திய மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
வரம்பை மீறும் குரோக் ஏ.ஐ.: எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்
03 Jan 2026புதுடெல்லி, வரம்பை மீறும் குரோக் ஏ.ஐ.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
03 Jan 2026மும்பை, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை பி.சி.சி.ஐ. நேற்று அறிவித்தது.
-
தமிழ்நாட்டில் ஜன. 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
03 Jan 2026சென்னை, தமிழகத்தில் நாளை முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கையால் போர் பதற்றம்
03 Jan 2026டெஹ்ரான், ஈரானின் உள்விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.&nbs
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலி அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
03 Jan 2026சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
விதர்பா அணிக்கு எதிராக முதல் சதமடித்த ஹார்திக் ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசல்
03 Jan 2026மும்பை, விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்திய ஹார்திக் பாண்டியாவின் விடியோ வைரலாகி வருகிறது.


