எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜுலை - 7 - ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை இன்னொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியதால் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாநிதி மாறனும் ஒரு குற்றவாளி என தாங்கள் சந்தேகிப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு அறிக்கை அளித்ததின் அடிப்படையில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர், தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்கள் சித்தார்த் பெகூரா, சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஊழல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பின்கீழ் மத்திய புலனாய்வுத் துறை நிறுவனமான சி.பி.ஐ. நடத்திவருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு குற்றப்பத்திரிகைகள் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 2004 ம் ஆண்டுமுதல் 2007 ம் ஆண்டுவரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறனும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் எழும்பின. சென்னையைச் சேர்ந்த ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனுக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழங்குவதில் தயாநிதி மாறன் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 6 ம் தேதி சிவசங்கரனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது தங்களக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை வழங்காமல் தயாநிதி மாறன் இழுத்தடித்தது உண்மைதான் என்று சிவசங்கரன் சி.பி.ஐ.யிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணை விபரங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அப்போது ஆஜரான சி.பி.ஐ. அதிகாரிகள் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாநிதி மாறனும் ஒரு குற்றவாளி என தாங்கள் சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் என்ற நிறுவனத்தின் அதிபர் அனந்தகிருஷ்ணன் தயாநிதி மாறனின் நெருங்கிய நண்பர். அனந்தகிருஷ்ணனின் கம்பெனிக்கு ஏர்செல் கம்பெனியை விற்பதற்காக ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை வழங்காமல் தயாநிதி மாறன் வேண்டுமென்றே காலம்தாழ்த்தி வந்தார் என்பது தங்களுடைய விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இந்த காலதாமதத்தை அடுத்து ஏர்செல் அதிபர் சிவசங்கரன் தனது கம்பெனியை மேக்ஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்ட்ரா நிறுவனத்திற்கு விற்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. தங்களது விசாரணையில் தயாநிதி மாறனும் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஒரு குற்றவாளி என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் ஊழல் வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடமே தான் தனது ஜவுளித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாக தயாநிதி மாறன் ஏற்கனவே கூறியிருக்கிறார். இப்போது இவர் குற்றவாளி என சந்தேகிப்பதாக சி.பி.ஐ. கூறியுள்ளதால் இவர் எந்த நேரமும் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாநிதி மாறனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பா.ஜ.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்திவந்தன என்பது குறிப்பிடத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க.வா? த.வெ.க.வா? கூட்டணி முடிவை இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்..!
11 Jan 2026சென்னை, இன்று காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026 -
ஈரோட்டில் உள்ள சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என பெயர் சூட்டினார் முதல்வர்
11 Jan 2026சென்னை, ஈரோட்டில் உள்ள சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
-
யாரிடமும் பேதம் காட்டாமல், யாரையும் பிரித்து பார்க்காத ஒரே மொழி 'தமிழ்' மொழி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
11 Jan 2026சென்னை, தமிழ்மொழி என்பது நம் அனைவரையும் இணைக்க கூடிய ஒரு மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப்பார்க்காது.
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எப்பொழுதுமே கிடையாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளதாக அமைச்சர் தகவல்
11 Jan 2026சென்னை, காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்ப
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. முன்பாக இன்று ஆஜராகிறார் விஜய்
11 Jan 2026கரூர், கரூர் பெருந்துயரம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக இன்று காலை 7 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.
-
கிரோக் ஏ.ஐ. தள விவகாரம்: இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக எக்ஸ் நிறுவனம் உறுதி
11 Jan 2026புதுடெல்லி, எலான் மஸ்க்குக்கு சொந்தமான சமூக ஊடகமாக எக்ஸ் தளத்தின் ஏஐ சாட்போட் ஆன கிரோக் தளம் தொடர்பான புகாரில் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதி அளித்துள்ள
-
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வருகிற 15-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்
11 Jan 2026ராமேசுவரம், கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள
-
16-வது நாளாக தொடர் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேர் கைது
11 Jan 2026சென்னை, சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
-
கடலூர், அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 Jan 2026சென்னை, தமிழகத்தில் கடலூர், அரியலூர் உள்ளிட்ட இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புதிய ஓய்வூதிய திட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உண்மையை ஒருநாள் நிச்சயம் உணர்வார்கள்: இ.பி.எஸ்.
11 Jan 2026சென்னை, ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது
11 Jan 2026மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி அங்கு
-
17 வணிக செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: 12 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்
11 Jan 2026சென்னை, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
'ஹெத்தை' அம்மன் திருவிழா: படுகர் மக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
11 Jan 2026சென்னை, நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
-
சுவேந்து அதிகாரி தாக்கப்பட்டதாக புகார்: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம்
11 Jan 2026கொல்கத்தா, சுவேந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, அதனைக் கண்டிக்கும் விதமாக, மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பா.ஜ.க.
-
ஒருநாள் பயணமாக கேரளா சென்ற அமித்ஷா பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கேரளா சென்றுள்ளார்.
-
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Jan 2026சென்னை, இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் ம
-
ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் பரபரப்பு
11 Jan 2026தெக்ரான், ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் போராட்டங்கள் 2-வது வாரத்தை எட்டி உள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து முதல்வர் பினராயி தலைமையில் எல்.டி.எப் இன்று போராட்டம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி சத்தியாகிரகப்' போராட்டத்தை இன்ற
-
3-வது பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
11 Jan 2026திருவனந்தபுரம், கேரளத்தில் மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாம்கூட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
-
மெரினா கடற்கரையில் குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
11 Jan 2026சென்னை, மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
-
இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்: கோவையில் நிதின் நபின் பேச்சு
11 Jan 2026கோவை, இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும் என்று கோவையில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசியுள்ளார்.
-
இந்தியாவில் எப்போதும் ஒரு இந்துவே பிரதமராக இருப்பார்: அசாம் முதல்வர் ஹிமாந்தா பேச்சு
11 Jan 2026திஸ்பூர், இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது.
-
குஜராத், சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் : சவுரியா யாத்திரையிலும் பங்கேற்பு
11 Jan 2026அகமதாபாத், சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி, காலை 9.45 மணியளவில் பூஜைகள் செய்து, சாமி தரிசனம் மேற்கொண்டார்.
-
பிப்ரவரி 2-வது வாரத்தில் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டம்: சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு
11 Jan 2026சென்னை, பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2-வது வாரத்தில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


