முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நலிந்த தொழிலாளர்களுக்கு நிதி வழங்கும் விழா தேதி மாற்றம்

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.13 - மேதினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 92 நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா வரும் 20-ம் தேதிக்கு பதிலாக 30-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 92 நலிந்த தொழிலாளர்களுக்கு 20.7.11 அன்று குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது நிதியுதவி வழங்கப்படும் தேதி மாற்றப்பட்டு, வருகின்ற 30.7.11 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.15 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தில், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்ததும், புதுச்சேரி மாநிலத்திலிருந்தும், போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 92 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 23 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்