முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு நிதியுதவி

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.14-நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்தைச் சேர்ந்த தேவாலா கிராமத்தில் உள்ள நாடுகாணி என்ற இடத்தில் யானை தாக்க உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.2.50 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா கிராமம், நாடுகாணி என்ற இடத்தில் ராமைய்யா என்பவரி மகன் வேலு 10.7.11 அன்று காட்டு யானை தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.

வேலு என்பவரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் இரண்மடு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்