முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனித்தெலுங்கானா: ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத்,ஜூலை.17 - தனித் தெலுங்கானா மாநில கோரிக்கை குறித்து இம்மாத இறுதிக்குள் மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காவிட்டால் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூட்டு நடவடிக்கை குழு எச்சரித்துள்ளது. 

இம்மாத இறுதிக்குள் தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்து மத்திய அரசு அறிவிக்க தவறினால் அடுத்த மாதம் முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக கூட்டு நடவடிககை குழு எச்சரித்துள்ளது. 

இது குறித்து கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், தனி தெலுங்கானா மாநில கோரிக்கைக்கு ஆதரவாகவும் முதல்வர் இல்லை. எதிராகவும் இல்லை. அடுத்த மாதம் முதல் தொடங்க திட்டமிட்டுள்ள வேலை நிறுத்தத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள் என்றார். இதனிடையே தனித் தெலுங்கானா மாநில கோரிக்கைக்கு ஆதரவாக ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆந்திர மாநில அரசு ஊழியர்கள் சங்கம் அரசுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்