எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூலை 17 - திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஆ.ராசா மற்றும் அவரது செயலாளர் சித்தார்த்த பெகூரா ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு டெல்லி பாட்டியாலா கோர்ட் அனுமதியளித்துள்ளது. ரூ. 1.76 லட்சம் கோடி இமாலய ஊழல் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது தனிச் செயலாளர் சித்தார்த்த பெகூரா, ஸ்வான் கம்பெனி நிறுவனர் ஷாகித் உஸ்மான் பால்வா மற்றும் பலர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் ரூ. 214 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியதாக கூறப்படுவதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழியும், கலைஞர் டி.வி. நிர்வாக அதிகாரி சரத்குமாரும் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு 20 சதவீத பங்கு உள்ளது. மொத்தத்தில் கருணாநிதி குடும்பத்திற்கு கலைஞர் டி.வி.யில் 80 சதவீத பங்குகள் உள்ளது. 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. சார்பாக தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் ராசா, சித்தார்த்த பெகூரா, பால்வா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதே வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இதனையொட்டி அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் போதுமான ஆதாரம் இருந்ததால் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்து மூன்றாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் பணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் சில சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள், ஆதாரங்களை பதிவு செய்வது தொடர்பாக மீண்டும் ஆ.ராசாவிடம் விசாரணை நடத்தவேண்டிய சூழ்நிலை சி.பி.ஐ.க்கு ஏற்பட்டது. அதனால் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நடைபெற்றுவரும் டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆ.ராசாவிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பாகவும், எதிர்தரப்பு சார்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், பிரபல பெண் தரகர் நீரா ராடியாவும், ஆ.ராசாவும் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தியது, 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சில ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவைகளை மூன்றாவது குற்றப்பத்திரிகையில் சேர்க்க வேண்டியுள்ளது. அதனால் ஆ.ராசாவை மீண்டும் நீதிமன்ற காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதற்கு எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்டபின்பு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆ.ராசா, சித்தார்த்த பெகூரா மற்றும்பலரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு நீதிபதி ஜெயின் அனுமதி அளித்தார். மேலும் 3 குற்றப்பத்திரிகையில் ஆவணங்கள், சான்றுகள், வாக்குமூலம், நீராராடியாவுடன் நடத்திய உரையாடல்கள் ஆகியவற்றையும் பதிவு செய்ய நீதிபதி அனுமதி அளித்தார்.
இதனையொட்டி ராசா மற்றும் பலரிடம் நீதிமன்றக் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது. இதன்மூலம் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழலில் புதிய தகவல்கள் வெளியாகலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி