LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,ஜூலை.20 - மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மதுரை திமுக நிர்வாகிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏராளமான ஆவணங்களை அள்ளிச்சென்றனர். தமிழகம் முழுவதும் கடந்த திமுக ஆட்சியில் நில மோசடி, ரவுடியிசம், கொள்ளை, கொலை என பல்வேறு சம்பவங்கள் தினந்தோறும் நடந்தன. இதில் குறிப்பாக அப்போதைய ஆளும் கட்சியான திமுகவினரே அதிகமாக ஈடுபட்டு வந்தனர். அதிலும் நில மோசடியில் திமுகவின் மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமே அதிகமாக ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அப்போது போலீசாரிடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிலத்தை திமுகவினரிடம் இருந்து மீட்டுத்தருவேன் என்று உறுதி அளித்தார். அதன் படி ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் முழுவதும் உள்ள நில மோசடி புகார்களை விசாரிக்க தனப்பிரிவு ஒன்றை உருவாக்கினார். இந்த தனிப்பிரிவு தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்ளிடம் புகார்களை வாங்கி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த வருகிறது. இதில் முதற்கட்டமாக மதுரை திமுக பிரமுகரும், முன்னாள் வேளாண் விற்பனை குழு தலைவருமான அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாநகர் திமுக பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ராமலிங்கத்தின் தம்பி ஆர்.எஸ்.கணேசன் ஜெய்கிந்துபுரத்தில் 20 சென்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம் தயாரித்து அபகரித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதும் நில மோசடி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள செங்குளத்தைச் சேர்ந்த சிவனாண்டி அவரது மனைவி பாப்பா ஆகியோர் மதுரை புறநகர் மாவட்ட குற்றப்பிரிவு நில அபகரிப்பு தனிப்படையிடம் ஒரு புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்துஅதில் திமுக மாவட்ட செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கொடி.சந்திரசேகரன், திருப்பரங்குன்றம் முன்னாள் திமுக நகர செயலாளர் கிருஷ்ண பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அமைச்சரின் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களாகவும், மதுரையில் மு.க.அழகிரியின் நிழலாக செயல்பட்டு வந்த தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ், மற்றொரு தலைமை செயற்குழு உறுப்பினர் வில்லாபுரத்தை சேர்ந்த எஸ்.ஆர்.கோபி ஆகியோர் வீடுகளில் நேற்று மதியம் முதல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மதியம் 1.30 மணி அளவில் மதுரை ஆயுதப்படை டிஎஸ்பி கோவிந்தராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் வில்லாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.கோபி வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த பெண்கள் போலீசாரை சோதனை நடத்த அனுமதிக்க மறுத்தனர். இதன் பிறகு எஸ்.ஆர்.கோபியின் தம்பியும், அவனியாபுரம் நகராட்சி தலைவருமான போஸ் முத்தையா வந்த பிறகு போலீசார் சோதனை நடத்தினர். இதே போல் எஸ்.ஆர்.கோபியின் தோட்டத்தில் உள்ள பங்களாவிலும் மதுரை திருப்பரங்குன்றம் டிஎஸ்பி முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தெய்வீக பாண்டியன், வேல்முருகன் ஆகியோர் சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் இந்த அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது வில்லாபுரத்தில் உள்ள எஸ்.ஆர் கோபி வீட்டில் 6 ஆவணங்களும், தோட்டத்தில் உள்ள பங்களாவில் 7 ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
சோதனையின் போது எஸ்.ஆர். கோபி, பொட்டு சுரேஷ் ஆகியோர் வீடுகளில் இடம், வீடுகள் ஆக்கிரமிப்பு, சொத்துக்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி அள்ளிச்சென்றனர். ஏற்கனவே இட மோசடியில் கைதாகி இருக்கும் பொட்டு சுரேஷ் மீது இந்த ஆவணங்கள் மூலம் மேலும் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதே போல் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். கோபி மீதும் கைப்பற்றப்பட்ட ஏஆவணங்கள் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கடாய் வெஜிடபிள்![]() 1 day 6 hours ago |
தக்காளி ரசம்![]() 5 days 9 hours ago |
தக்காளி ரசம்![]() 5 days 9 hours ago |
-
தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்கிறது
11 Aug 2022தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் அரசின் ஆவின் நிறுவனம் சுமார் 38.26 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 11-08-2022.
11 Aug 2022 -
போதை பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்தவித தயக்கமும் காட்டாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
11 Aug 2022போதை பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்தவித தயக்கமும் காட்டாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
கொரோனாவை வென்று விட்டோம்: வடகொரிய அதிபர் கிம் பெருமிதம்
11 Aug 2022கொரோனாவை வென்று விட்டதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.
-
75-வது சுதந்திர தின விழா: சென்னையில் நடந்த 2-வது நாள் ஒத்திகை நிகழ்ச்சி
11 Aug 2022நாட்டின் 75-வது சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று 2-வது நாளாக ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
-
75-வது சுதந்திர தினம்: சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இன்று முதல் கிராமிய கலைநிகழ்ச்சி
11 Aug 2022சென்னை: 75-வது சுதந்திர தினத்தையொட்டி மெட்ரோ ரெயில் நிலையங்களில் இன்று முதல் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
-
பொறியியல் படிப்புக்கு அரசு பள்ளி மாணவர்கள் 22,000 பேர் விண்ணப்பம்
11 Aug 2022பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்காக 22 ஆயிரம் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
-
உலகின் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்தது கராச்சி
11 Aug 2022பாகிஸ்தானின் கராச்சி நகரம் உலகின் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
-
குரங்கு அம்மை நோய் பீதி: பிரேசிலில் விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்: உலக சுகாதார அமைப்பு கவலை
11 Aug 2022குரங்கு அம்மை நோய் பீதி காரணமாக, பிரேசிலில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்படுவதற்கு உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடி உட்பட 3 பேர் அடங்கிய சர்வதேச அமைதி ஆணையம் அமைக்க ஐ.நா.வுக்கு மெக்ஸிகோ அதிபர் பரிந்துரை
11 Aug 2022மெக்ஸிகோ சிட்டி: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் 169-வது நாளை எட்டியது. போரால் உக்ரைனை சேர்ந்த 1.2 கோடி பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
-
பெரியபாளையம் பவானியம்மன் கோவில் நிர்வாகிகளிடம் தங்க முதலீட்டு பத்திரம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
11 Aug 2022சென்னை தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட திரு
-
பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவு
11 Aug 2022சென்னை: பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.
-
வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நாட்டிய நாடகம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
11 Aug 2022சென்னை: வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று மாலை 6.00 மணியளவில் முதல்வர் மு.க.
-
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
11 Aug 2022சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
-
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு: பிரச்சார குறும்படத்தையும் துவக்கி வைத்தார்
11 Aug 2022சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடக்க விழாவில், நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்
-
தொடர்ந்து 26-வது நாளாக நீடிக்கும் : மேட்டூர் அணையின் நீர்மட்டம்
11 Aug 2022சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 26-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
-
ஓணம் பண்டிகை: சென்னை , நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
11 Aug 2022சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை நீட்டிப்பு: இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
11 Aug 2022இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே மற்றும் மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவர்டு கப்ரால் ஆகியோர் நாட்டை விட்டு வ
-
உலகளாவிய போட்டிகளை தமிழகத்தில் நடத்த அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
11 Aug 2022உலகளாவிய போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு அதிக வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இங்கிலாந்தில் மீண்டும் வெப்ப அலை: வானிலை மையம் எச்சரிக்கை
11 Aug 2022இங்கிலாந்தில் மீண்டும் வெப்ப அலை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் தங்கப்பொருள் கண்டுபிடிப்பு
11 Aug 2022செய்துங்கநல்லூர்: முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் வாழ்விடப் பகுதியில் தங்கப்பொருள் கிடைத்துள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வேலூரில் அடிபம்போடு சேர்த்து கால்வாய் அமைத்த காண்ட்ராக்டர் போலீசாரால் கைது - ஒப்பந்தமும் ரத்து
11 Aug 2022வேலூர்: வேலூரில் அடிபம்புடன் சேர்த்து கால்வாய் அமைத்த காண்ட்ராக்டர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: தமிழக வீரர் உள்பட 3 பேர் வீர மரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் - ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
11 Aug 2022ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமுக்குள் நுழைய முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
11 Aug 2022சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.
-
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது ஐகோர்ட்டு
11 Aug 2022சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ். தாக்கல் செய்த வழக்கில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.