இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

புது டெல்லி,ஆக.27 - ஊழலை ஒழித்துக்கட்டுவதற்கு லோக்பால் சட்டம் மட்டுமே உதவாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தன்னுடைய மவுனத்தை கலைத்து ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசியுள்ளார். தனி நபரின் உத்தரவுகளை எல்லாம் ஏற்க முடியாது என்றும் கூறியிருப்பதன் மூலம் அன்னா ஹசாரேவின் கோரிக்கைகளை அவர் நிராகரித்து விட்டதாகவே தெரிகிறது.
ஊழலை ஒழித்துக்கட்ட வலிமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அதாவது ஜங்லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த பல நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உண்ணாவிரதத்தை கைவிடும்படி பிரதமர் மன்மோகன்சிங் பலமுறை கேட்டுக் கொண்டும் அன்னா ஹசாரே அதை ஏற்கவில்லை. தற்போதும் அவர் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.
எல்லா மாநிலங்களிலும் லோக்பால் அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார். இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார் என்றும் கூறி பிரதமருக்கு ஹசாரே ஒரு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில் ஜங்லோக்பால் மசோதா தொடர்பான விவாதத்திற்கு பாராளுமன்றத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கெடுப்பு இல்லாத விவாதத்திற்கு இந்த நோட்டீஸ் வழிவகை செய்யும்.
இந்நிலையில் பாராளுமன்ற லோக்சபையில் நேற்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தன்னுடைய மவுனத்தை கலைத்து பேசினார். அப்போது பேசிய அவர், ஊழலை ஒழித்துக் கட்ட லோக்பால் சட்டம் மட்டுமே உதவி செய்யாது என்று அடித்துக் கூறினார். அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிற பாணியில் அவரது பேச்சு அமைந்திருந்தது. மேலும் தனி நபர்களின் உத்தரவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக் கொண்டால் அது ஜனநாயக செயல்பாட்டை பலவீனப்படுத்தி விடும் என்று கூறிய அவர், ஆபத்தான முன்மாதிரிகளை ஏற்படுத்தி விடும் என்றும் ராகுல் காந்தி எச்சரித்தார்.
ஊழல் என்பது அனைத்து மட்டங்களிலும் நிறைந்துள்ளது. அது யதார்த்தமாகி விட்டது. அப்படிப்பட்ட ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டுமே தீர்வாகாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். இதை ஒழித்துக் கட்ட தேர்தல் கமிஷனை போன்ற மிக அதிகாரம் கொண்ட அரசியல் சட்ட அமைப்பை உருவாக்க வேண்டும். வலுவான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். நமது அன்றாட வாழ்க்கையில் இருந்து ஊழலை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்கு விரிவான செயல்திட்டங்களை வரவேற்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.
ஊழலை ஒழிக்க மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை எல்லா மட்டத்தினரும் ஆதரிக்கும் வகையில் ஒரு அரசியல் திட்டம் தேவை. அது மட்டுமின்றி அரசியல் மன உறுதியும் தேவை என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். கேள்வி நேரத்திற்கு பிறகு அவர் இவ்வாறு பேசிய போது, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியிலும் அவர் தொடர்ந்து பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதற்கு முடிவு காண வேண்டுமே தவிர, தனி நபரின் உத்தரவுகளை ஏற்பது ஆபத்தில் போய் முடியும் என்றும் ராகுல் காந்தி எச்சரித்தார்.
அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை பற்றி குறிப்பிட்ட அவர், இது மக்களின் உணர்வுகளை தெரிந்து கொள்ள உதவியிருக்கிறது. அந்த வகையில் ஹசாரேவிற்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், தனி நபரின் உத்தரவுகள் ஜனநாயக நடைமுறையை பலவீனப்படுத்தி விடக் கூடாது என்பதையும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். இன்றைக்கு ஊழலை எதிர்த்து சட்டம் கொண்டு வர சொல்வார்கள். நாளைக்கு வேறு எதையாவது குறி வைத்து சொல்வார்கள். இது ஜனநாயகத்தின் பன்முகத் தன்மையையும் சமூகத்தின் பன்முகத் தன்மையையும் பாதித்து விடும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். ராகுல் காந்தியின் இந்த பேச்சை பார்வையாளர்கள் கேலரியில் இருந்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்.
முன்னதாக, ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்த போது அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் இடையூறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரசார் பதிலுக்கு கோஷமிட்டனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 2 days 2 min ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 5 days 4 min ago |
ராகி அடை![]() 1 week 1 day ago |
-
ஜெப ஆலய தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்
29 Jan 2023ஜெருசலேம் ; ஜெருசலேமில் யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா மாநிலத்தில் நடந்த பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் சுகாதார அமைச்சர் பலி : வெறிச்செயலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை
29 Jan 2023புவனேஸ்வர் : ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்ச
-
வங்க கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
29 Jan 2023சென்னை : தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில
-
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பார்லி.யில் குரல் எழுப்ப வேண்டும் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Jan 2023சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்
-
நவாஸ் மகள் மரியம் ; நாடு திரும்பினார்
29 Jan 2023லாகூர், ஜன.
-
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
29 Jan 2023பராக் ; செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
-
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
29 Jan 2023சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
-
காவல்துறை குறித்த அவதூறு பேச்சு: கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
29 Jan 2023சென்னை : காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு
29 Jan 2023மும்பை : நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
-
முதியோர்களுக்கான உதவி தொகையை நிறுத்தி விட்டது : தி.மு.க. அரசு மீது எடப்பாடி குற்றச்சாட்டு
29 Jan 2023சேலம் : முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
-
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமிக்கு அருகே நெருங்கி வரும் அரிய வால் நட்சத்திரம்
29 Jan 2023கலிபோர்னியா ; 50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
-
ராகுலின் பாதயாத்திரை இன்று நிறைவு: ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள்: 21கட்சிகளுக்கு அழைப்பு
29 Jan 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
2 நாட்களே அவகாசம்: மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டதை சரிபார்ப்பது எப்படி?
29 Jan 2023சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
-
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் ஆர்வம் : மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
29 Jan 2023புதுடெல்லி : பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என்றும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ள
-
யு-19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை வென்று சாதனை
29 Jan 2023ஜொகனர்ஸ்பெர்க் : 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது.
-
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
29 Jan 2023அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனுதாக்கல் நாளை துவங்குகிறது : வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதி
29 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்செய்யும் பணி நாளை தொடங்குகிறது.
-
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுத தடை : ஆப்கனில் தலிபான்கள் அறிவிப்பு
29 Jan 2023xகாபூல் ; பெண்கள் பல்கலைக் கழக நுழைவு தேர்வை எழுத தடை விதித்து ஆப்கன் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ஆஸ்திரேலிய ஓபன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன்
29 Jan 2023சிட்னி : ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
-
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
29 Jan 2023மதுரை : ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
-
நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: ஹூரியத் அலுவலகத்துக்கு சீல் வைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்
29 Jan 2023ஜம்மு ; டெல்லி கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து ஹூரியத் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்
29 Jan 2023புது டெல்லி : இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவ
-
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 5-ம் தேதி நடக்கிறது
29 Jan 2023வடலூர் : வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ம் தேதி நடக்கிறது.
-
பழனி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது : பிப்ரவரி 7-ம் தேதி தேரோட்டம்
29 Jan 2023பழனி : முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
ஆஸி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
29 Jan 2023பெர்த் : ஆஸி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.