எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,ஆக.27 - ஊழலை ஒழித்துக்கட்டுவதற்கு லோக்பால் சட்டம் மட்டுமே உதவாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தன்னுடைய மவுனத்தை கலைத்து ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசியுள்ளார். தனி நபரின் உத்தரவுகளை எல்லாம் ஏற்க முடியாது என்றும் கூறியிருப்பதன் மூலம் அன்னா ஹசாரேவின் கோரிக்கைகளை அவர் நிராகரித்து விட்டதாகவே தெரிகிறது.
ஊழலை ஒழித்துக்கட்ட வலிமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அதாவது ஜங்லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த பல நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உண்ணாவிரதத்தை கைவிடும்படி பிரதமர் மன்மோகன்சிங் பலமுறை கேட்டுக் கொண்டும் அன்னா ஹசாரே அதை ஏற்கவில்லை. தற்போதும் அவர் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.
எல்லா மாநிலங்களிலும் லோக்பால் அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார். இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறத் தயார் என்றும் கூறி பிரதமருக்கு ஹசாரே ஒரு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில் ஜங்லோக்பால் மசோதா தொடர்பான விவாதத்திற்கு பாராளுமன்றத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கெடுப்பு இல்லாத விவாதத்திற்கு இந்த நோட்டீஸ் வழிவகை செய்யும்.
இந்நிலையில் பாராளுமன்ற லோக்சபையில் நேற்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தன்னுடைய மவுனத்தை கலைத்து பேசினார். அப்போது பேசிய அவர், ஊழலை ஒழித்துக் கட்ட லோக்பால் சட்டம் மட்டுமே உதவி செய்யாது என்று அடித்துக் கூறினார். அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிற பாணியில் அவரது பேச்சு அமைந்திருந்தது. மேலும் தனி நபர்களின் உத்தரவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக் கொண்டால் அது ஜனநாயக செயல்பாட்டை பலவீனப்படுத்தி விடும் என்று கூறிய அவர், ஆபத்தான முன்மாதிரிகளை ஏற்படுத்தி விடும் என்றும் ராகுல் காந்தி எச்சரித்தார்.
ஊழல் என்பது அனைத்து மட்டங்களிலும் நிறைந்துள்ளது. அது யதார்த்தமாகி விட்டது. அப்படிப்பட்ட ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டுமே தீர்வாகாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். இதை ஒழித்துக் கட்ட தேர்தல் கமிஷனை போன்ற மிக அதிகாரம் கொண்ட அரசியல் சட்ட அமைப்பை உருவாக்க வேண்டும். வலுவான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். நமது அன்றாட வாழ்க்கையில் இருந்து ஊழலை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்கு விரிவான செயல்திட்டங்களை வரவேற்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.
ஊழலை ஒழிக்க மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை எல்லா மட்டத்தினரும் ஆதரிக்கும் வகையில் ஒரு அரசியல் திட்டம் தேவை. அது மட்டுமின்றி அரசியல் மன உறுதியும் தேவை என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். கேள்வி நேரத்திற்கு பிறகு அவர் இவ்வாறு பேசிய போது, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியிலும் அவர் தொடர்ந்து பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதற்கு முடிவு காண வேண்டுமே தவிர, தனி நபரின் உத்தரவுகளை ஏற்பது ஆபத்தில் போய் முடியும் என்றும் ராகுல் காந்தி எச்சரித்தார்.
அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை பற்றி குறிப்பிட்ட அவர், இது மக்களின் உணர்வுகளை தெரிந்து கொள்ள உதவியிருக்கிறது. அந்த வகையில் ஹசாரேவிற்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், தனி நபரின் உத்தரவுகள் ஜனநாயக நடைமுறையை பலவீனப்படுத்தி விடக் கூடாது என்பதையும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். இன்றைக்கு ஊழலை எதிர்த்து சட்டம் கொண்டு வர சொல்வார்கள். நாளைக்கு வேறு எதையாவது குறி வைத்து சொல்வார்கள். இது ஜனநாயகத்தின் பன்முகத் தன்மையையும் சமூகத்தின் பன்முகத் தன்மையையும் பாதித்து விடும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். ராகுல் காந்தியின் இந்த பேச்சை பார்வையாளர்கள் கேலரியில் இருந்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்.
முன்னதாக, ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்த போது அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் இடையூறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரசார் பதிலுக்கு கோஷமிட்டனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...