முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை தீவன ஊழல் வழக்கு சி.பி.ஐ.கோர்ட்டில் லல்லு ஆஜர்

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

பாட்னா,ஆக.- 30 - கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர்கள் லல்லு பிரசாத் யாதவ், ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் நேற்று பாட்னா சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜரானார்கள். பீகார் மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு கால்நடை தீவன ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டால் முதல்வர் பதவியில் இருந்து லல்லு பிரசாத் யாதவ் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. மேலும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் பீகார் மாநில மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் 32 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இதனையொட்டி நேற்று பாட்னாவில் உள்ள சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜராகும்படி லல்லு, ஜெகன்நாத் மிஸ்ரா மற்றும் 32 பேர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதனையொட்டி நேற்று அவர்கள் கோர்ட்டில் ஆஜராகினர். ஆனால் இந்த வழக்கில் தங்களை விடுவிக்கக்கோரி மிஸ்ராவும் மற்றும் 6 பேரும் தாக்கல் செய்த மனுவை பாட்னா ஐகோர்ட்டும் சி.பி.ஐ.கோர்ட்டும் தள்ளுபடி செய்துவிட்டன. இதை எதிர்த்து அப்பீல் செய்ய அனுமதிக்கும்படி மிஸ்ராவும் அந்த 6 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தால் நேற்று ஆஜரானர்கள் மீது நீதிபதி பி.கே. ஜெயின் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவில்லை. குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வதை ஒத்திவைத்த நீதிபதி பி.கே. ஜெயின், ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய வரும் 21-ம் தேதி வரை கால அவகாசமும் கொடுத்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்